திருப்பதி திருமலை பெருமாள் கோயிலே!  

சைவர்கள்- வைணவர்களிடையே பூசலை நிகழ்த்த விரும்பிய சிலரால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளுள் ஒன்று, திருப்பதி கோயில் முற்காலத்தில் முருகன் கோயிலாக இருந்தது என்பதாகும். இன்று சைவமும் வைணவமும் ஹிந்து என்ற பெருமதத்தின் கிளைகளாகிவிட்ட காலத்திலும், அவ்வப்போது இந்தப் பூசல் பெரிதுபடுத்தப்படுகிறது. இதற்கு, தெரிந்தோ தெரியாமலோ சைவர்கள் சிலரும் உணர்ச்சிவசப்பட்டு ஆதரவளித்து விடுகின்றனர். அவர்களுக்காகவே, நமது தொன்மையான தமிழ் இலக்கியங்களின் துணைகொண்டு, இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார் ‘சர்வம் கிருஷ்ணார்ப்பணம்’ என்ற பெயரில் எழுதிவரும் திரு. பி.பிரகாஷ். ‘ரத்தத்தில் முளைத்த என் தேசம்’ என்ற நூலின்மூலம் தமிழக மக்களின் கவனம் ஈர்த்த இவரது முகநூல் பதிவு, இங்கு மீள்பதிவாகிறது…