‘கள்ளிப் புதர்களும் கற்றாழைக் காடுகளும் நிறைந்திருந்த கலைத் துறையை நாங்கள் கைப்பற்றி விட்டோம்; இனி இங்கே இதிகாசங்களும், புராணங்களும் இடம் பெற இயலாது’ என நண்பர்கள் சிலர் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் ‘இராமாயணம்’ திரைப் படத்தை வெற்றிப் படமாகக் கொண்டு வந்து தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரிலும் அப்படத்தை நூற்றுக் கணக்கான நாட்கள் ஓட்டிக் காட்ட முடிந்தது என்றால் அந்தக் காப்பியத்தின் அழியாத் தன்மைக்கு வேறென்ன சிறப்பு வேண்டும்?
Month: February 2024
நாடகக் கலை – 3 அ
சமுதாயத்தை உயர்த்துவது எப்படி என்பதில்தான் கருத்து வேற்றுமைகள் ஏற்படுகின்றன. ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். சமுதாயத்தை உயர்த்துவதாக நினைத்துக்கொண்டு அறிவுப் பிரசாரம் என்ற பெயரால் அழிவுப் பிரசாரம், அபத்தப் பிரசாரம் முதலியவற்றைச் செய்வதால் யாருக்கும் நன்மையேற்படாது. அப்படிச் செய்யத் தொடங்கும்போது கலை மறைந்து நாடக மேடை வெறும் பிரசார மேடையாகி விடுகிறது. அதற்காக நம் கலையில் பிரசாரக் கருத்துக்களே கூடாது என்ற முடிவுக்கு வந்து ‘கலை கலைக்காகவே’ என்னும் கோஷ்டியில் சேர்ந்துவிட முயல்வது தவறாகும்.
நாடகக் கலை – 2 – ஆ
இசைக் கலைஞன் ஒருவன் இல்லத்தில் தனித்திருந்து இசைபாடி இன்புறுவான். மெய்மறந்து இசைச்சுவையோடு அவன் ஒன்றிவிடவும் முடியும். ஓவியக் கலைஞன் இதற்கு விலக்கன்று. தனது சுவைக்காகவே, தனது உள்ளுணர்ச்சியின் அமைதிக்காகவே கூட ஓவியம் தீட்டத் தொடங்கி விடுவான்; உணர்விழந்து நிற்பான். சிற்பக் கலைஞனும் இப்படித்தான். ஆனால் நடிப்புக் கலை தனித்தன்மை வாய்ந்தது. நடிகன் தனித்திருந்து நடித்து இன்புற இயலாது. எதிரே வீற்றிருக்கும் ரசிகர் கூட்டம் அவ்வப்போது காட்டும் மெய்ப்பாட்டுணர்ச்சிகள் மேடையில் நடிக்கும் நடிகனின் உணர்ச்சிகளோடு ஒருமைப்படும் போது தான் நடிப்புக்கலை அதன் உச்சநிலைக்கு வருகிறது. இது அனுபவத்தின் வாயிலாக நான் கண்ட உண்மை.
நாடகக் கலை – 2 -அ
நடைமுறை வாழ்க்கையில் நம்மில் எத்தனையோ பேர் அபூர்வமாக நடிக்கிறார்களே; இந்த நடிப்பையெல்லாம் அவர்கள் எந்தப் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொண்டார்கள்? வணிகர்கள், வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள், தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், இவர்களில் பலர் தம் சொந்த வாழ்க்கையில் எப்படியெல்லாம் திறமையாக நடிக்கிறார்கள்?
வறுமை ஒழிப்பு – அர்த்தமும் அனர்த்தமும்
இந்த இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் மேற்கத்திய நாடுகளில் இது பற்றிய விவாதம் தொடங்கியது. விளைவாக 2010இல் ஐ.நா.சபையில் வறுமைக் கோட்டை அளவிட புதிய, பல பரிமாணங்களைக் கொண்ட வறுமை கணக்கீட்டு முறை (Multi Dimensional Poverty Index) அறிமுகமானது. ஆனால் இந்தியாவில் அது நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை. குடியரசுத் தலைவரின் உரைக்குப் பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சரின் உரையில் இந்த புதிய கணக்கெடுப்பின்படி சுமார் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு (Below Poverty Line- BPL) வெளியே வந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
நாடகக் கலை -1 ஆ
தமிழ் நாடக உலகம் ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ என சங்கரதாஸ் சுவாமிகளையும், ‘தமிழ் நாடகத் தந்தை’ என ‘பத்ம பூஷணம்’ பம்மல் சம்பந்தனாரையும் இதயத்தில் வைத்துப் போற்றி வருகிறது.
நாடகக் கலை -1 (அ)
தமிழ் நாடகக் கலையின் இன்றைய வளர்ச்சியிலே எத்தனையோ பெரியவர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். நாடக இலக்கியம் என்பது படித்து மட்டும் வளரும் இலக்கியமல்ல; கண்களால் பார்த்தும் மகிழக்கூடிய இலக்கியமாகும். எனவே, அச்சிலே வெளிவந்துள்ள நாடக நூல்களின் அளவைக் கொண்டு மட்டும் அதன் வளர்ச்சியைக் கணக்கிட முடியாது. பரம்பரை பரம்பரையாக அரங்கிலே ஆடிவந்துள்ள நாடகங்களின் வளர்ச்சியையும் அளவுகோலாகக் கொண்டு பார்த்தால் நமக்கு உண்மை விளங்கும். இந்தக் கண்ணோட்டத்தோடுதான் தமிழ் நாடக வரலாற்றை நாம் ஆராய வேண்டும்.
சுவாமி சகஜானந்தரும் பெரியவர் வ.உ.சியும்
சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவத்தில் நூலகராகப் பணியாற்றிவரும் திரு. ரெங்கய்யா முருகன், வ.உ.சி. ஆய்வாளரும் கூட. வ.உ.சி. மீது அளப்பரிய மரியாதை கொண்ட இவர், அவரை அழைக்கும்போதெல்லாம் பெரியவர் என்று குறிப்பிடாமல் எழுதுவதில்லை. இவரது முகநூல் பதிவு இங்கே மீள்பதிவாகிறது…
நந்தனார் சரிதம் – 6
எம்பெருமான் வந்துவிட்டார். கொழுந்து விட்டெரியும் நெருப்பில் இருந்து இரண்டு பக்கமிருந்தும் நான்கு கரங்கள் முளைத்து நந்தனைத் தூக்கிப்பிடித்தன. நந்தனுக்குள் ஒரு புது உத்வேகம் எழுந்தது. ஊராரின் பஞ்சாட்சர கோஷம் அவனுக்குள் ஆவேசத்தைத் தூண்டியது. நிமிர்ந்து பார்த்தபோது தென்பட்ட திரிசூல மின்னல் அவன் கண்கள் வழி பாய்ந்ததுபோல நிலை குத்திய கண்களுடன் நிமிர்ந்து நிற்கிறான். அவனுடைய உடல் இப்போது விறைத்து எழுந்திருந்தது. கால் நடுக்கம் மறைந்திருந்தது. ஒவ்வொரு அடியாக அவன் அழுந்த எடுத்து வைக்க வைக்க நெருப்புப் பொறிகள் பறக்கின்றன.
நந்தனார் சரிதம் – 5
அகல்விளக்குகள் அருகில் கொண்டு செல்லப்பட்டபோது காற்றின் அசைவினால் ஆடிய சுடரொளியில் சிலை உயிர்பெற்று ஆடியது போன்ற பிரமை! பிரமையா நிஜமா...? வீசும் காற்றும் அவனருளால்... எரியும் சுடரும் அவனருளால்... சிற்பியும் அவனருளால்... சிற்பி வடித்த சிலையும் அவனருளால்... அவனருளாலே அவன்தாள் பணிந்து உருவாக்கிய அவனது சிலை! உயிர்கொடுத்து உயிர்பெற்று அம்பலத்தில் ஆடும் ஆடலரசன்... சர்வேஸ்வரன்... தில்லையம்பதி!
நந்தனார் சரிதம் – 4
“ஆரம்பத்தில் மாமிசமும் மதுவும் எதனால் சாப்பிட்டோம் என்பது தெரியாது. ஒரு உயிரைக் கொல்வது பாவம் என்ற எண்ணம், ஒரு தாயின் மனதில் என்றைக்கோ உருவாகியிருக்க வேண்டும். அன்றிலிருந்து அந்தக் குற்ற உணர்ச்சி அரிக்க ஆரம்பித்திருக்கும். கடவுளுக்குப் படைக்கிறேன் என்று சொல்லிப் படைக்க ஆரம்பித்து, அந்தப் பிரசாதம் சாப்பிடுகிறேன் என்று குற்ற உணர்ச்சியைப் போக்கிக் கொண்டுவிட்டீர்கள். நமக்குப் பிடிப்பவைதானே நம் தெய்வத்துக்கும் பிடிக்கும் என்று நம்பினீர்கள். அதன் பின் அதுவே பழக்கமாகியும்விட்டது. ஆனால், அவ்வப்போது குற்ற உணர்ச்சி வாட்டுகிறது. ஆக, மாமிசம் சாப்பிடாமல் இருக்கவும் முடியவில்லை. சாப்பிட்டுவிட்டு நிம்மதியாக இருக்கவும் முடியவில்லை. அப்படித்தானே?”
நந்தனார் சரிதம் – 3
“பழகிக் கொண்டவர்களை விடுங்கள். இப்படிப் பழக்கியவர்களைப் பற்றிச் சொல்லுங்கள். எந்த மன்னரேனும் ஏதேனும் ஒரு இழிதொழிலையேனும் மாற்ற முயற்சி எடுத்தாரா? எந்த ஐயரேனும் தன் அறிவைப் பயன்படுத்தி ஒரு மருத்துவரின் கஷ்டத்தைப் போக்கினாரா? வாந்தியையும் மலத்தையும் ரத்தத்தையும் நிணத்தையும் கையால் தொட்டு சுத்தம் செய்தாக வேண்டிய கொடுமையில் இருந்து விடுவித்தாரா? எந்த வணிகராவது தீட்டுத் துணி துவைக்கும் வண்ணாருக்கு அதில் இருந்து தப்பிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தாரா? எந்தப் பண்ணையாராவது தொழில் குலத்தினராவது இறந்த அழுகிய விலங்கை அப்புறப்படுத்த வழி கண்டுபிடித்துக் கொடுத்தனரா… நம்மவர்களுக்குக் கால காலமாக இதைத் தானே செய்துவர வேண்டியிருந்தது? சின்னஞ்சிறு வயதிலேயே இந்த இழிவுக்குப் பழக்கப்படும் குழந்தைகள் அதைப் பழகிக் கொண்டு வாழ்ந்து மடிவதென்பது எவ்வளவு கேவலம்… கொடுமை. யாரேனும் ஒருவர் இதை மாற்றியிருக்கலாமே…?”
நந்தனார் சரிதம் – 2
“ஐயா… நீவிர் எத்தனைதான் குளம் வெட்டினாலும், அதில் நீவிர் குளிக்க முடியாது. என்னதான் கல் சுமந்து கோயில் கட்டினாலும் அதில் நீவிர் கால் பதிக்க முடியாது. குறுக்கே நிற்கும் நந்திகள் உம்மை எங்குமே கும்பிட விடாது.” “ஆமாம்… இந்தப் பிறவியில் அது முடியாது. அதனாலென்ன?”
நந்தனார் சரிதம் – 1
திருநாளைப்போவார் புராணத்தை புதிய நடையில் வழங்கி இருக்கிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன். கற்பனை மிகுந்த இனிய வர்ணனைகளும், நீதி உணர்ச்சி மிகுந்த மனதின் தர்க்கங்களும் நிறைந்த இந்த குறும்புதினம், சமூக ஒருமைப்பாட்டுக்கான புதிய முயற்சி…
நாடகக் கலை – காணிக்கை
சென்ற நூற்றாண்டில் தமிழகத்தில் நாடகக் கலையை வளர்த்த பெருமகன்களின் முதன்மையானவர் அவ்வை டி.கே.சண்முகம். அவரது ‘நாடக கலை’ நூல் நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது...