‘மிக்ஜம்’ புயலால் சென்னை மாநகரமும், புறநகர்ப் பகுதிகளும் சீரழிந்து கிடக்கின்றன. புயல் கடந்து, மழை நின்று நான்கு நாட்களாகியும், இன்னமும் பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை; சென்னையில் வாழும் மக்கள் பரிதவிக்கிறார்கள். அரசுக்காகக் காத்திருப்பதால் பயனில்லை என்பதை உணர்ந்து, மூன்று நாள் பட்டினி இருந்த களைப்புடன் வீடுகளைக் காலி செய்துவிட்டு வெளியேறும் மக்களைக் காண்கையில் வேதனையாக இருக்கிறது. இதற்கு யார் காரணம், என்ன தான் தீர்வு? இங்கு சில சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன…. (பகுதி-2)
Day: December 9, 2023
தொழிலுக்கும் செல்வத்துக்குமுள்ள சம்பந்தம்
நம்முடைய தேசத்தில் நெடுங்காலமாக நடைபெற்றுவரும் அனுஷ்டானப்படி நூலாசிரியரும் உபாத்தியாயரும் தலைமை வர்ணம். அரசர் அதற்கடுத்தபடி. முதலாளிகள் எனப்படும் வைசியர் மூன்றாம் ஜாதி. சரீரபலத்தால் மாத்திரமே செய்வதற்குரிய தொழில்களைச் செய்வோர் நான்காம் வர்ணம். மற்ற தேசங்களில் நமது நாட்டைப்போல் இந்த வகுப்புக்குக் குறிப்பிட்ட நாமங்களும் விதிகளும் இல்லையெனினும், உலக முழுமையிலும் ஒருவாறு இந்த சாதுர்வர்ணயம் (அதாவது, நான்கு வர்ணங்களென்ற வகுப்பு) நெடுங்காலமாக நடைபெற்றுக் கொண்டு வந்திருக்கிறது.