மாலை-2

கூடிய வரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கக்ஷி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது.                    

மலையாளம்- 2

“தமிழ்நாட்டிலேயும் இதுபோலவே ஜாதி விரோதங்களை வளர்த்துவிட வேண்டுமென்று சில கயவர் பாடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டு வேளாளருக்கும், பார்ப்பாருக்கும் முதலியாருக்கும், தொழிலாளிகளுக்கும் சொல்லுகிறேன். ஜாதி விரோதத்தை உடனே கைவிடுக” என்று சாஸ்திரி சொன்னார்.

மலையாளம்-1

ஒரு நாள் இந்த நாராயணஸ்வாமி ரயில் யாத்திரை செய்கையில் இவர் ஏறியிருந்த வண்டியில் ஒரு நம்பூரி பிராமணர் வந்து சேர்ந்தார். அந்த நம்பூரி இவரை நோக்கி இடது கைச் சிறு விரலை நீட்டிக்கொண்டு, ‘பெயரென்ன?’  என்று கேட்டார்.  ‘என் பெயர் நாணு என்று ஜனங்கள் சொல்லுவார்கள்’ என்று நாராயணஸ்வாமி சொன்னார். ’தீயர்களுக்குக் கோயில் கட்டிக்கொடுக்கும் ஸந்யாஸி நீர் தானோ?’  என்று நம்பூரி கேட்டார்.  ‘ஆம்’ என்று ஸ்வாமி சொன்னார்.  ‘பிரமணர் பிரதிஷ்டை செய்து பூஜிக்க வேண்டிய தெய்வத்தை நீர் பிரதிஷ்டை செய்யும்படி உமக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?’ என்று நம்பூரி கேட்டார். அதற்கு நாராயணஸ்வாமி:-   ‘பிராமணர்களுடைய சிவனை நான் பிரதிஷ்டை செய்யவில்லை. நான் பிரதிஷ்டை செய்தது தீயர்களுடைய சிவன். இதில் தாங்கள் வருத்தப்பட வேண்டாம். தங்களுடைய சிவன் வழிக்கே நாங்கள் வரவில்லை’ என்றார்.    

ராகவ சாஸ்திரியின் கதை

அதற்கு ராகவ சாஸ்திரி சொல்லுகிறார்:-  “நான், மலையாளி என்று குப்பு சாஸ்திரியிடம் சொன்னேன். ஸம்ஸ்கிருதம் பேசுவதிலிருந்து நம்பூரி பிராமணராகத்தான் இருக்க வேண்டும் என்று குப்பு சாஸ்திரி தாமாகவே ஊகித்துக் கொண்டார் போலும். நான் ஜாதியில் தீயன். மலையாளத்தில் தீயரென்றால் தமிழ் நாட்டில் பள்ளர் பறையரைப் போலேயாம். தீயன் சமீபத்தில் வந்தால் பிராமணர் அங்கே ஸ்நாநம் செய்து பாவத்தை நிவர்த்தி செய்து கொள்வது வழக்கம்” என்றார்.      

தியானங்களும் மந்திரங்களும் (விடுதலைக்கு வழி)

நான் கடவுள், ஆதலால் சாக மாட்டேன். தெய்வம் என்னுள் எப்போதும் வந்து பொழிந்து கொண்டிருக்கும்படி என்னைத் திறந்து வைத்திருக்கிறேன். அதாவது, நான் என்னுள் விழும்படி எப்போதும் திறந்து நிற்கிறேன். என்னுள்ளே கடவுள் நிரம்பியிருக்கிறான். அதாவது, என்னுள் யான் நிரம்பிக் கிடக்கிறேன். என் நாடிகளில் அமிர்தம் ததும்பிப் பாய்கிறது. அதனால் என் இரத்தம் வேகமும் தூய்மையும் உடையதாய் இருக்கிறது. அதனால் என்னுள்ளே வீர்யம் பொங்கிக் கொண்டிருக்கிறது.

அடல்ஜி: பாரத ரத்னம்

அடல் பிகாரி வாஜ்பாய் சிறந்த பிரதமராக மட்டுமல்ல, எடுத்துக்காட்டான எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். இன்றைய எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவரது மேன்மையும் இவர்களது கீழ்மையும் தெளிவாகத் தெரிகின்றன...

வாட்ராப்பும்  வைத்தமாநிதியும் -1

நடுங்கும் குளிரில், தரையில் அமர்த்தி சூடான இலவச உணவு. தங்குவதற்கு தகரக் கொட்டாய். படுக்கப் பாயாக கோணிப்பை. போர்த்திக்கொள்ள கோணிப் பையால் கோர்த்த போர்வை. ஊளையிடும் வாடைக்காற்று. உண்ட களைப்பில் உடல் கொண்ட உறக்கம் சொர்க்கானுபவம். வந்த அதிதிகளுக்கு அன்னமிட்டு, தங்க இடமளித்து அன்பு உபசரிப்பு செய்த அந்த அன்னமிட்ட கைகளுக்கு அவசியம் உண்டு சிவானுபூதி…

நெல்லிக்காய்க் கதை    

ஏழைகளாக நம்மைச் சூழ்ந்திருப்போர் சிவனுடைய கணங்கள், நாராயணனுடைய மக்கள், முருகனுக்குத் தோழர், சக்தியின் அவதார ரூபம். பரமசிவன் சண்டாள ரூபத்துடன் சங்கராசார்யாருக்கு ஸமத்துவ ஞானத்தை ஊட்டினார். ஸ்ரீரங்கத்தில் எம்பெருமான் கடைக் குலத்தவராகிய திருப்பாணாழ்வாரை பரிசாரக வேதியன் முதுகிலே சுமந்து கொண்டு வந்து தனது கர்வ நோயைத் தீர்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டருளினார்.  

பூந்தேனில் கலந்து… பொன் வண்டு எழுந்து…

இசையமைப்பாளர் திரு. கே.வி.மகாதேவன் அவர்களின் இறுதிக் காலத்தில் இசை அமைத்த பாடம் ‘ஏணிப்படிகள்’. அதில் இடம் பெறும், ஒரே மெட்டில் அமைந்த, ஒரே பல்லவியுடன், இரு வகையான சரணங்களுடன் கூடிய  இரு பாடல்கள் இங்கே…திரைக்கதையின் போக்கிற்கு ஏற்பவும், கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையிலும், ஆண்- பெண் ஆகியோரின் இருவேறு மனக் கற்பனைகளில் கவியரசர் எழுதிய வண்ண வரிகள் இதோ…

பாரதியின் தேசியம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற கருத்துரை  (2020) நிகழ்வில் ‘பாரதியின் தேசியம்’ என்ற தலைப்பில், அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் ஐயா ஆற்றிய உரையின் (அவரே தொகுத்தளித்த) கட்டுரை வடிவம் இது…

இந்தியா ஐக்கியமேயன்றி கூட்டாட்சியன்று

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் தற்காலிகப் பிரிவான 370வது ஷரத்தை மோடி அரசு நீக்கியிருந்தது. அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசின் நடவடிக்கை சரியானதே என்று தீர்ப்பு (11.12.2023) அளிக்கப்பட்டது. இது தொடர்பாக திரு. ராம் மாதவ் எழுதியுள்ள கட்டுரை இது...

பாரதத்தையும் சநாதன தர்மத்தையும் மதிப்போம்!

அமெரிக்காவைச் சார்ந்த இந்தியாவின் தோழரும், ஹிந்துத்துவ இயலில் ஆராய்ச்சியாளருமான திரு. டேவிட் ஃப்ராலே இணையதளம் ஒன்றில் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் இது...

இன்று (ஒரு ரிஷி குமாரன் எழுதியது)

மகாகவி பாரதி ‘கலைகள்’ எனும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையைக் கீழே கொடுத்திருக்கிறோம். நாம் பல யாகசாலைகளுக்குச் சென்றிருக்கிறோம். அங்கு நடக்கும் யாகங்களைக் கண்டிருக்கின்றோம். அங்கு தீயில் ஆஹூதியிட்டு மந்திரங்கள் சொல்லி, பூர்ணாஹூதி செய்து தீபாராதனை முடியும் வரை இருந்து கண்டு மனம் மகிழ்ந்து வருகின்றோம். இங்கு பாரதி ஒரு யாகத்தைச் செய்கிறார். கண்களை மூடி அவர் இங்கு செய்யும் யாகமொன்றை மனக்கண்ணால் காண்கிறீர்கள். யாக குண்டம் வைத்து, அதில் அக்னியை மூட்டி, கணபதியை வணங்கிப் பின்னர் பஞ்ச பூதங்களை வேண்டி, அந்தத் தீயில் தேன் முதலான பண்டங்களை இட்டு மந்திரங்களைச் சொல்லி நடைபெறும் அந்த யாகத்தில் என்ன வேண்டப்படுகிறது. அந்த மந்திரங்களின் பொருள் என்ன? சிந்தனையை ஓட்டுங்கள். பாரதியின் வாசகங்கள் மட்டும் காதில் விழுந்து கொண்டிருக்கட்டும். யாகத்தின் வேண்டுதல் என்ன? நமக்குப் புரியும் பைந்தமிழில்தான் அவனது வேண்டுதல்கள் இருக்கின்றன. அவற்றைப் படியுங்கள். இது குறித்து ஓர் அரிய செய்தி. பாரதி, மகான் அரவிந்தரிடம் ‘ரிக் வேதத்தில்’ பல ஸ்லோகங்களுக்கு விளக்கம் கேட்டுக்கொண்டவர் என்றும், ‘ரிக் வேதம்’ பழமையான வேதம் மட்டுமல்லாமல், இயற்கையை வணங்கும் பல ஸ்லோகங்களைக் கொண்டது என்றும் பெரியோர் சொல்வார்கள். ஆனால் கீழ்வரும் வசனங்கள் அந்த ரிக் வேத மந்திரங்களின் கருப்பொருளா என்பது நமக்குத் தெரியவில்லை. - இது பாரதி இலக்கிய பயிலரங்கின் நிறுவனர் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்களின் முன்னுரை....

சித்தக் கடல்

பராசக்தீ, இந்த உலகத்தின் ஆத்மா நீ! உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா? … தாயே! என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப் படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால் -  உன்னை எப்படிப் பாடுவேன்?

சுந்தர.ஜோதி: சில நினைவுகள்

அண்மையில் சென்னையில் காலமான ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரசாரகரும் ‘விஜயபாரதம்’ முன்னாள் ஆசிரியருமான திரு. சுந்தர.ஜோதி அவர்களுக்கு நினைவஞ்சலிக் கட்டுரை இது…