பழைய உலகம்

இவ்வாறு அய்யர் சொல்லிய உபாயம் செட்டிக்கு ரஸப்படவில்லை. எனக்கும் பயனுடையதாகத் தோன்றவில்லை. அடுத்த ஜன்மத்தில் நான் மற்றொரு மனிதனாகப் பிறந்து வாழ்க்கையிலே செல்வமுண்டானால், இப்போதுள்ள எனக்கு எவ்விதமான லாபமும் இல்லை. அதைப் பற்றி எனக்கு அதிக சிரத்தையில்லை. இந்த ஜன்மத்தில் பணம் தேடுவது தான் நியாயம். வரும் ஜன்மத்து ரூபாய்க்கு இப்போது சீட்டுக் கட்டுவது புத்திக் குறைவு.

உடம்பு

நானாவிதமான விலையுயர்ந்த உணவுப் பொருள்களைத் தின்றால்தான் உடம்பிலே பலம் வருமென்று சிலர் நினைக்கிறார்கள். இது தவறு. காரஸாரங்களும் வாஸனைகளும் உண்டாக்கி ருசியை அதிகப் படுத்தும் வஸ்துக்கள் தேக பலத்திற்கு அவசியமில்லை. கேப்பைக்களி, கம்பஞ்சோறு இவற்றால் பலமுண்டாவது போல் பதிர்ப்பேணியிலும், லட்டுவிலும், வெங்காய ஸாம்பாரிலும் உண்டாகாது.

மிருகங்களை நாகரீகப்படுத்தும் வழி       

இரண்டு சிக்கிமுக்கிக் கல்-துண்டுகளை ஒன்றுக் கொன்று தட்டினால் தீயுண்டாக்கி விடலாம். இத்தனை கோடானுகோடி அடிமை ஜந்துக்களுக்கும் இன்று வரை இந்த சாதாரண யுக்தி புலப்படாமல் போனது வியப்புக்குரிய செய்தி யன்றோ? இதுபற்றியே, முற்கால ரிஷிகள் தீயை முதற் கடவுளாகப் போற்றினர் போலும். மனிதனுக்கு இங்ஙனம் கிடைத்த வெற்றியையும் பூமண்டலாதிக்கத்தையும் அவன் நியாயமான வழியில் உபயோகப் படுத்தவில்லை.

குரு

காசுக்கும் அதிகாரத்திற்கும் எல்லாருந்தான் வாயைப் பிளக்கிறார்கள். ஆனாலும்,ரோமபுரியில் கிறிஸ்தவக் குருக்கள் ஐரோப்பா எல்லை முழுதிலும் பூமியாட்சி விவகாரங்களில் தலையிட்டு, ராஜாக்களுடன் கூடியும் பகைத்தும் கலகங்கள் ஏற்பட்டுத்தியது போல் நமது தேசத்துப் புரோஹிதரும் குருக்களும் செய்ததில்லை.

தென் ஆப்பிரிக்காவில் பெண்கள் விடுதலை

...எல்லா தேசங்களிலும் பெண்கள் மேன்மேலும் சுதந்திரம் பெற்று மனித ஜாதியை மேன்மைப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.  தமிழ்நாட்டு ஸ்திரீகள் மாத்திரம் தமது மனுஷ்ய பதவியை ருசுப்படுத்துவதற்கு யாதொரு வழியும் செய்யாமல் இருக்கிறார்களே! ஏன்? என்ன காரணம்?

நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்

...நம்முடைய ஸ்திரீகளின் நிலைமையை நவீன ருஷ்யாவில் ஸ்திரீகளின் விஷயமாக ஏற்பட்டிருக்கும் சட்டங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போதுதான் நம்மை ஐரோப்பிய நாகரீகம் எந்த சக்தியினாலே கீழே வீழ்த்திற்று என்பதும், எந்த அம்சங்களில் நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் வழியைப் பின்பற்றத் தகும் என்பதும் தெளிவுறப் புலப்படும்....

பெண்கள் ஸம்பாஷணைக் கூட்டம்

பெண்ணுரிமைக்கான கூட்டம் நிகழ்வதையும் கூட செய்தியாக்கி மகிழும் இதழாளர் பாரதியை இங்கே நாம் தரிசிக்கிறோம். அது மட்டுமல்ல, தனது புதல்வி தங்கம்மாளைக் கொண்டு, சீனப் பெண் புரட்சியாளர் (சியூ சீன்) தொடர்பாக வெளிநாட்டுப் பத்திரிகையில் வெளியான விவரத்தை தமிழாக்கிப் படிக்க வைத்திருக்கும் பாரதியின் தீவிர உணர்வு கவனித்தற்பாலது. மேலும், சியூ சீன் எழுதிய புரட்சிக் கவிதையைத் தமிழாக்கி தனது புதல்வியையே வாசிக்கச் செய்திருப்பது, அவரது பெண்ணுரிமை தாகத்தைக் காட்டுகிறது....

தமிழ்நாட்டு நாகரீகம்

...ஔவையின் நூலோ மிகத் தெளிந்த, மிக எளிய தமிழ்நடையில் எல்லா ஜனங்களுக்கும் பொருள் விளங்கும்படியாக எழுதப்பட்டிருக்கின்றது. ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ என்பது கவிதைத் தொழிலில் மிகவும் உயர்ந்த தொழில். இதில் ஔவை ஒப்பற்றவள். இத்துடன் மிகவும் அருமையான நுட்பமான விஷயங்களை யாவருக்கும் அர்த்தமாகும்படி மிகவும் எளிய நடையில் சொல்வதாகிய அற்புதத் தொழிலை உயர்ந்த கவியரசர்களே தெய்வீகத் தொழில் என்றும் தெய்வசக்தி பெறாத சாதாரணக் கவிகளுக்கு சாத்தியப்படாத தொழில் என்றும் கருதுகிறார்கள். இந்த அற்புதத் தொழிலிலும் ஔவை நிகரற்ற திறமை வாய்ந்தவள்....

இது ஒரு தவம்

சென்னை, சங்கர நேத்ராலயா மருத்துவக் குழுமத்தின் நிறுவனரும், பிரபல கண் மருத்துவ நிபுணருமான, பதம பூஷண் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் 21.11.2023 அன்று காலமானார். அவருக்கு நமது கண்ணீர் அஞ்சலி. இக்கட்டுரை, அவரது சீடரும் மருத்துவ சமூக சேவகருமான திரு. அ.போ.இருங்கோவேளால் எழுதப்பட்டது....

தமிழ்நாட்டு மாதருக்கு

குடும்ப வழக்கங்களாயினும் தேச வழக்கங்களாயினும் ஜாதி வழக்கங்களாயினும் அவற்றுள் முக்கியத்தன்மையுடையன எவை, இல்லாதனவை எவை என்ற ஞானம் நம்முடைய ஸ்திரீகளுக்கு ஏற்பட வேண்டுமாயின், அதற்குக் கல்வியைத் தவிர வேறு ஸாதனமில்லை. ஆண்களுக்கு ஸமானமான கல்வித் திறமை பெண்களுக்குப் பொதுப்படையாக ஏற்படும் வரை, ஆண் மக்கள் பெண்மக்களைத் தக்கபடி மதிக்க மாட்டார்கள்;  தாழ்வாகவே நடத்துவார்கள். தமிழ்நாட்டு ஸஹோதரிகளே! கணவன்மார், உடன் பிறந்தார், புத்திரர் முதலியவர்களால் நன்கு மதிக்கப்பெறாமல் இழிவாகக் கருதப்பட்டு உயிர் வாழ்வதைக் காட்டிலும் இறந்து விடுதல் நன்று.

பெண் விடுதலைக்கு தமிழ்ப் பெண்கள் செய்யத் தக்கது யாது?

புதுச்சேரியில் ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதியின் குமாரி ஸ்ரீ தங்கம்மாவால் ஒரு பெண்கள் கூட்டத்தில் படிக்கப் பெற்ற கட்டுரை இது...

பெண் விடுதலை- 2

நமது பெண்களுக்கு ஆரம்பப்படிகள் காட்டினோமானால், பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரண விடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றுவார்கள். அப்போதுதான் நமது தேசத்துப் பூர்வீக ரிஷி பத்தினிகள் இருந்த ஸ்திதிக்கு நமது ஸ்திரீகள் வர இடமுண்டாகும். ஸ்திரீகளை மிருகங்களாக வைத்து நாம் மாத்திரம் மஹரிஷிகளாக முயலுதல் மூடத்தனம். பெண் உயராவிட்டால் ஆண் உயராது.

பெண் விடுதலை- 1

இதைக் கேட்டவுடன் ராமராயர்,  “நான் வீட்டுக்குப் போய்விட்டு வருகிறேன்” என்று சொல்லி எழுந்து நின்றார். நான் இரண்டு கட்சியையும் சமாதானம் பண்ணிக் கடைசியாக வேதவல்லியம்மை பொதுப்படையாக ஆண் பிள்ளைகளை எவ்வளவு கண்டித்துப் பேசியபோதிலும் ராமராயரைச் சுட்டிக் காட்டி ஒரு வார்த்தையும் சொல்லக் கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டோம்.

பெண்

''ஹிந்துக்கள் முற்காலத்தில் நல்ல மேதாவிகளாக இருந்தனர். இன்னும் அதிசீக்கிரத்தில் மேலான நிலைமைக்கு வரப் போகிறார்கள். ஆனால், இந்தத் தேதியில், பண்டிதர்களாக வெளிப்பட்டு பிரஸங்கங்களும், கதைகளும், காலக்ஷேபங்களும் நடத்தும் ஹிந்துக்களிலே நூற்றுக்குத் தொண்ணூறு பேர் சமையல் வேலைக்குப் போக வேண்டியவர்கள். அதை விட்டு உலகத்துக்கு ஞானோபதேசம் பண்ணக் கிளம்பிவிட்டார்கள். இதுபெரிய தொல்லை, உபத்திரவம், தொந்திரவு, கஷ்டம், ஸங்கடம், ஹிம்ஸை, தலைநோவு. இந்தத் தேதியில், ஹிந்து ஜாதி முழுமூடமாக இருக்கிறது. நம்மவர்கள் மூளைக்குள்ளே கரையான் பிடித்திருக்கிறது. எனக்கு ஹிந்துக்களின் புத்தியை நினைக்கும்போது வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. படகோனியா தேசத்தில் கூட சராசரி நூற்றுக்கு இத்தனை பேர் மூடர்களாக இருப்பார்களென்று தோன்றவில்லை”....

கொள்கைக்கும் செய்கைக்குமுள்ள தூரம்

ஒரு கொள்கை என்பதென்ன? இதை நாம் ஆராய்ந்து அறிவது அவசியம். ஏனெனில், கொள்கையின்றிக் காரியங்களைச் செய்து திரியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள். பகுத்தறியும் சக்தி இல்லாத எவனுக்கும் கொள்கையென்று ஒன்று இருக்காது. ஒரு கொள்கையை யுடையவன் பகுத்தறியும் சக்தி உடையவனாகவே இருக்க வேண்டும்.