வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் விஷயங்களைக் கதை போலே எழுதுவதில் மகாகவி பாரதி சமர்த்தர். நம் தமிழ்நாட்டுச் சமூகத்தின் உயர்வும் தாழ்வும் யாவும் இந்தக் கதைகளில் பளிச்செனத் தெரிகின்றன. ‘ஆவணி அவிட்டம்’ என்ற இக்கதை முதலில் சுதேசமித்திரனில் வெளியாகி, பிறகு மித்திரன் காரியாலயம் 1920-இல் வெளியிட்ட ‘கதாமாலிகா’ நூலில் பிரசுரமாயிற்று.
Day: May 30, 2023
தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 2
‘செங்கோன்மை’ அதிகாரத்தில் மன்னரின் இலக்கணத்தை நேர்மறையாக கூறியவர், ‘கொடுங்கோன்மை’ அதிகாரத்தில் எதிர்மறையாகக் கூறுகிறார். இவ்வாறு நேர்மறை- எதிர்மறையாகக் கூறி ஒரு கருத்தை மிகவும் ஆழமாக விளக்குவது திருவள்ளுவருக்கு புதியதல்ல. இதோ, ஒரு கொடுங்கோலன் எவ்வாறு இருப்பான், அதற்கான காரணங்கள் என்ன என்று பத்து குறட்பாக்களில் கூறுகிறார் திருவள்ளுவர்...