‘பட்டுப் பாதை’ என்று பள்ளி பாடநூல்களில் படித்திருக்கிறோம். அது சீனா உலகத்துடன் வர்த்தகம் செய்ய ஏற்படுத்திய தரைவழிப் பாதை என்று கூறப்படுகிறது. இது ஒரு பொய் என்கிறார் வில்லியம் டால்ரிம்பிள். இவர் பிரிட்டிஷ் வரலாற்றாளர். பல நூல்களை எழுதி உள்ளார். பட்டுப்பாதை என்ற பொய்க்கு மாறாக இந்தியாவின் கடல்வழி உலக வர்த்தகப் பாதை ஒன்று இருந்தது. ‘தங்கத் தடம்’ என்று அதற்குப் பெயரிட்டுள்ளார் வில்லியம் டால்ரிம்பிள். இந்த உண்மைக்கு (இந்தியாவின் கடல்வழிப் பாதைக்கு) ஆதாரங்கள் உலகமெங்கும் கிடைத்து வருகின்றன. அதைப்பற்றிப் பேசுகிறது இவரது அண்மை (செப்டம்பர் 2024-இல் வெளிவந்த) நூலான ‘தங்கத்தடம்’ (Golden Road) . அதை ஒட்டி அவரது நேர்காணல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் (நேர்காணல்: தேவ்யானி ஒனியல்) வெளிவந்தது. அதன் தமிழாக்கம் இது.