‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய ஆன்மநேய அருளாளர், வடலூர் திருவருட்பிரகாச ராமலிங்க வள்ளலார். கடும் பஞ்சத்தில் தமிழகம் துயருற்றபோது, அன்னசாலையைத் துவங்கி லட்சக் கணக்கான மக்களின் பசிப்பிணி தீர்த்தவர் வள்ளலார். அவரது பிறந்த தின இருநூற்றாண்டு இன்று (அக். 5) தொடங்குகிறது.
Tag: வாழ்க்கை வரலாறு
சுயசரிதங்கள்: ஒரு பார்வை
மனிதர்களின் அடிப்படை உணர்வுகளில் ஒன்று தன்னைப் பற்றிப் பேசுவது. மற்றொன்று, இன்னொருவர் கதையைக் கேட்பது. இதுவும் சுய வரலாற்றை எழுத ஒரு காரணம். பொதுவாக சுய வரலாறு என்பது படிப்பவர்களுக்கு நம்பிக்கையும் தம் தவறுகளைச் சரிசெய்து கொள்ளவும் உதவுகிறது. ... அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் பொதுவாக சுய சரித்திரம் எழுதுவதில்லை. காரணம் அவர்கள் மேலிடத்துக் கட்டளையை நிறைவேற்றுபவர்கள் என்பதைத் தவிர சொல்லும்படியான முகமில்லை அவர்களுக்கு. ஆனால் இப்போது அவர்களுடைய எழுத்துதான் அரசியல்வாதிகளின், அதிகாரத்தில் இருப்பவர்களின் விளையாட்டுகளை வெளிப்படுத்துகிறது. எனவேதான் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் அரசின் அனுமதி பெற்றுத் தான் சுய வரலாற்றை வெளியிட வேண்டும் என நிபந்தனை வந்துள்ளது. ....