விடுதலை

சேர்க்கப்படுவது செல்வம். மனிதனுக்கு இன்பம் தரும் பண்டங்களையும் அவற்றைக் கொள்வதற்கு நல்ல கருவியாகிய பொன்னையும் சேகரித்து வைக்க வேண்டும். இடைவிடாமல் சேர்க்க வேண்டும். கை பற்றின படியாகவே இருக்க வேண்டும். ஆனால் தீயகாரியம் செய்து, கெட்ட தொழில் செய்து சேர்த்த செல்வம் நிற்காது. செல்வம் சேர்த்த பிறகு அதன் உரத்தால் பிறர்க்குத் தீங்கு செய்வாரும் விரைவிலே கெடுவார்.

ப்ராயச்சித்தம்

ராமராயர் இங்கிலாந்தில் போய்ப் பத்து வருஷ காலம் இருந்து வியாபாரம் பண்ணிவிட்டுக் கொஞ்ச காலத்துக்கு முன்பு, வேதபுரத்துக்கு வந்து சேர்ந்தார். இங்கே அவர் கையில் கொஞ்சம் காசிருப்பதைக் கண்டு சில வைதிகர்கள் அவரைப் பிராயச்சித்தம் செய்து கொள்ளும்படி சொன்னார்கள். அவர் பண்னிக் கொள்ளவில்லை. .....போன மாஸம் மேற்படி ராமராயர் என்னிடம் ஊர்க்காரருடைய திருப்தியை உத்தேசித்துத் தான் ப்ராயசித்தம்  பண்ணிக்கொள்ள இஷ்டப்படுவதாக அறிவித்தார். நான் உடனே மேற்படி விஷயத்தை இந்த ஊர் வைதிகர்களுக்கெல்லாம் சிரோமணியாகிய ரங்கநாத சாஸ்திரிகளிடம் போய்ச் சொன்னேன்.....

குழந்தைகள்

நமக்கு நல்ல காலம் எப்போது வருமோ தெய்வத்துக்குத்தான் தெரியும். அதுவரை அதிகாரிகள் எப்படியிருந்த போதிலும், அதைப் பொருட்டாக்காமல் நாட்டிலுள்ள பணக்காரர் மற்றெல்லாவித தர்மங்களைக் காட்டிலும், ஜனங்களுக்கு அறிவு விருத்தியும், தைரியமும், தேச பக்தியும் உண்டாக்கத் தகுந்த சுதேசியக் கல்வி ஏற்படுத்திக் கொடுப்பதைப் பெரிய தர்மமாகக் கருதி, அதிலே பணம் செலவிட முற்படும்படி மேற்படி பணக்காரருக்கு நல்ல புத்தி ஏற்படுத்திக் கொடுக்குமாறு தெய்வத்தை வேண்டுகிறோம்....

வேதபுரத்தின் இரகஸ்யம்

மகாகவி பாரதி எழுதிய ‘கிரைம் கதை’ இது. இக் கதை  ‘கதா ரத்னாகரம்’ மாதப் பத்திரிகையில் 1920 ஆகஸ்ட், செப்டம்பர் இதழ்களில் பிரசுரமானது. பின்னர், நூலாக்கம் பெற்ற  ‘கால வரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ தொகுதியில் இடம்பெற்றது. பாரதி எழுதிய கதைகளில் இது ஒரு வித்தியாசமான கதை. சூழ்நிலை ஒரு மனிதனை எப்படியெல்லாம் மாற்றி விடுகின்றது என்பதே கதையின் முக்கியக் கருத்தாக அமைந்துள்ளது. குற்றத்தைப் புலனாய்வு செய்ய வந்த காவல் அதிகாரி கடைசியில் அந்த விவகாரத்தையே மறந்துவிட்டார் என்று முடிக்கும் பாரதியின் குறுப்பு ரசிக்கத் தக்கது....

வேப்ப மரம்

இக் கதையை முதன்முதலாகக் கண்டறிந்து தமது ‘பாரதி தமிழ்’ நூலில் திரு. பெ.தூரன் அவர்கள் பதிப்பித்தார். வேப்ப மரம் பேசுமா? பேசினால் என்ன பேசும்? அற்புதமான கற்பனை... அகஸ்த்ய மஹரிஷியும், தாம்ரபர்ணி யம்மனும் ஜலக்கிரீடை செய்வதாக எழுதும் கற்பனைவளத்தை மீறும் வகையில், மகாகவி பாரதிக்கே உரித்தான வேதாந்தச் சாயல் இக்கதையில் உண்டு.

எதிர் ஜாமீன் அல்லது மாப்பிள்ளை விலை

வரதட்சிணைக் கொடுமைக்கு எதிரான மகாகவி பாரதியின் முழக்கம் இது. நூற்றாண்டுகளுக்கு (1915) முன்னர் பாரதி எழுதிய அவலம் இன்றும் நமது நாட்டில் தீரவில்லை. இந்த ‘ஊழலுக்கு’த் தீர்வாக மகாகவி முன்வைப்பது பெண் விடுதலையே. இரு பெண்களைப் பெற்றவரல்லவா? சரியாகத் தானிருக்கும்.

கொட்டையசாமி

இக் கதை பாரதி பிரசுராலயத்தார் வெளியிட்ட கட்டுரைகள் தொகுதியில் இடம் பெற்றது. அந்தக் காலத்து ஜமீன்தார்களின் பொதுவான குணாதிசயங்களை விளக்க பகடியாக எழுதிய இந்தக் கதையில் கொட்டையசாமி என்பவன் ஜமீன் சபையில் நிகழ்த்திய ஆட்ட பாட்டங்களைப் படித்து ரசிக்கலாம். பொழுதுபோக்குக் கதைகளில் இதுவும் ஒன்று.நெட்டையபுரம் வேறு- எட்டயபுரம் வேறல்ல என்பது பாரதியை அறிந்தோருக்குத் தெரியும்.

ஜப்பான் தொழிற்கல்வி

தெளிந்த அறிவும் இடைவிடாத முயற்சியும் இருந்தால் சக்தியுண்டாகும். தெளிந்த அறிவென்பது இரண்டு வகைப்படும் – ஆத்ம ஞானம், லெளகிக ஞானம் என. ஆத்ம ஞானத்தில் நமது ஜாதி சிறந்தது. லெளகிக ஞானத்தில் நம்மைக்காட்டிலும் வேறு பல தேசத்தார் மேன்மை யடைந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தேசங்களில் ஜப்பான் ஒன்று. புத்தகங்களாலும், பத்திரிகைகளாலும், யாத்திரைகளாலும் நாம் ஜப்பான் விஷயங்களை நன்றாகத் தெரிந்து கொள்ளுதல் பயன்படும். கூடியவரை பிள்ளைகளை ஜப்பானுக்கு அனுப்பிப் பலவிதமான தொழில்களும் சாஸ்திரங்களும் கற்றுக் கொண்டு வரும்படி செய்வதே பிரதான உபாயமாகும். தொழிற் கல்வியிலும் லெளகிக சாஸ்திரப் பயிற்சியிலும் நாம் மற்ற ஜாதியாருக்கு ஸமானமாக முயலுதல் அவசரத்திலும் அவசரம். 

விதி

நாட்டு விதி என்பது அர்த்த, நீதி சாஸ்திரங்களின் விதி. இதனைத் தற்காலத்தோர் அரசியல் விதியென்று சொல்லுகிறார்கள். அதுவும் சாஸ்திர விதியோடு சேர்ந்ததுதான். ஆனால் மற்ற இலக்கணம் முதலிய சாஸ்திரங்களின் விதிகளைக் காட்டிலும் அரசியல் விதிகள் மிகவும் விரைவுடன் மாறுபடுவதால் இதனைத் தனியாக ஒரு பகுதியாக்கும்படி நேரிட்டது. எனவே, தெய்வ விதிக்குப் பரிபூரணமாக உட்பட்டு சாஸ்திர விதிகளையும் நாட்டு விதிகளையும் மேன்மேலும் புத்திசாலித்தனமாகச் சீர்திருத்திக் கொண்டு வந்தால், மனுஷ்ய ஜாதிக்கு ஷேமமுண்டாகும்.

உண்மையான தீபாவளி!

மகாகவி பாரதி நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகையில், 1906-இல் அக்டோபர் 20-ஆம் தேதி இதழில் தலையங்கமாக வெளிவந்தது இந்தக் கட்டுரை. பின் ‘கலைமகள்’ பத்திரிகையில் 1941-இல் அக்டோபர் மாதம் வெளியாயிற்று.  நமது நேயர்களுக்கு மகாகவி பாரதியின் இக்கட்டுரையை தீபாவளிப் பரிசாக வழங்கி மகிழ்கிறோம்!

தாஸியும் செட்டியும்

பாரதி எழுதிய பொழுதுபோக்குக் கதைகளில் இதுவும் ஒன்று. இந்தக் கதையில் நீதி போதனையும் சொல்லப்படுகின்றது. இந்தக் கதை  ‘சுதேச மித்திரன்’ காரியாலயமே நடத்தி வந்த  ‘கதாரத்னாகரம்’ மாதப் பத்திரிகையில் 1920 ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் இதழ்களில் பிரசுரமானது.

தமிழ்

“இந்த நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி வெளியுலகத்திலே பரவாமல் இருப்பதை நான் அறிவேன். போன நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவொளி சற்றே மங்கியிருந்ததையும் நானறிவேன். ஆனால் போன நிமிஷம் போய்த் தொலைந்தது. இந்த நிமிஷம் ஸத்யமில்லை. நாளை வரப்போவது ஸத்யம். மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலக முழுவதிலும் பரவாவிட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள். அது வரையில் இங்கு பண்டிதர்களாக இருப்போர் தமக்குத் தமிழ்ச்சொல் நேரே வராவிட்டால் வாயை மூடிக்கொண்டு வெறுமே இருக்க வேண்டும். தமிழைப் பிறர் இழிவாகக் கருதும்படியான வார்த்தைகள் சொல்லாதிருக்க வேண்டும்” -மேற்படி சாட்டையடி வார்த்தைகள் மகாகவி பாரதியின் எழுதுகோலில் வெளிவந்தவை. காரணம் என்ன? படியுங்கள், தொடர்ந்து....

பேய்க் கூட்டம்

இது ஒரு கற்பனைக் கதைதான். அதிலும் தன்னையே ஒரு கதாபாத்திரமாக்கிக் கொண்டு, மேலும் தன்னைத் தானே பகடி செய்துகொண்டு, நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார் மகாகவி பாரதி. இரு பகுதிகளாக வெளியான இக்கதை, இங்கு ஒரே பகுதியாக்கிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யப் புரட்சி, கந்த புராணம், திருவாசகம், ஆற்காடு நவாபின் சரண், அச்சமில்லை என்ற மகாகவியின் பாட்டு- இவை எல்லாம் சமத்காரமாக கதையினிடையே உலா வருவதைப் படியுங்கள், ரசியுங்கள்!

கிச்சடி

பல்வேறு தகவல்களை ஒரே செய்திக் கட்டுரையாக்கி அதற்கு ‘கிச்சடி’ என்று தலைப்பிடும் உத்தியை மகாகவி பாரதி தான் தொடங்கி வைத்திருக்கிறார். அதிலும் இந்தக் கிச்சடி ‘மேற்கோள் கிச்சடி’ என்று அவரே நகைச்சுவையாகச் சொல்கிறார். தமிழ் இதழாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை. ஏனெனில் அவர்கள் கற்க வேண்டியது இன்னமும் நிறைய இருக்கிறது என்று நினவூட்டும் கட்டுரை இது.

மிளகாய்ப் பழச் சாமியார்

மகாகவி பாரதியின் வேதபுர நிகழ்வுக் கதைகளில் இதும் ஒன்று. பெண் விடுதலையை நேசிக்கும் கவிஞரின் கருத்தை அறிந்த பெண் சாமியாரான மிளகாய்ப் பழச் சாமியார் அவரை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கையை வைக்கிறார். அது என்ன?