அபயம்

காரணம் இல்லாமல் மகாகவி பாரதி எதுவும் எழுதவில்லை. இக்கதையை ஏன் எழுதியிருப்பார்?

அர்ஜுன சந்தேகம்

ஒரே கேள்விதான். ஆனால் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு பதில்கள். ஆனால் அனைத்திலும் லோக நன்மை தான் பிரதானம். இது சிறிய கதை தான். ஆனால், இந்த சிரு வித்துக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம் பிரமாண்டமானது.

குதிரைக் கொம்பு

மகாகவி பாரதி காலத்திலேயே ஹிந்துப் புராணங்களையும் இதிகாசங்களையும் மனம் போன போக்கில் எழுதி தூஷிக்கும் கும்பல் இருந்தது. இன்று தமிழகத்தில் இருக்கும் நாத்திகக் கும்பலின் தொடக்கம் அது. அநேகமாக மகாகவி பாரதி அயோத்திதாச பண்டிதரின் புளுகுமூட்டைகளைப் படித்திருப்பார் போலிருக்கிறது. ‘குதிரைக்கொம்பு’ என்னும் இந்தச் சிறுகதை வேடிக்கையாக எழுதப்பட்டிருந்தாலும், இப்படிச் சிந்திக்கும் முட்டாள்களும் இருப்பதையே பாரதி பகடியாகப் பதிவு செய்திருக்கிறார்....

இருள்

கடமையைச் செய்- செய்துகொண்டே இரு. இதுவே மகாகவி பாரதியின் இக்கதை உபதேசிக்கும் மந்திரம்.

தேவ விகடம்

தேச விடுதலை, சமூக சீர்த்திருத்தம், தமிழ் மீது தணியாத பற்று, பண்பாட்டுச் சீரழிவு குறித்த கவலை, உலக நாடுகளின் வளர்ச்சி - என்றெல்லாம் ஓயாமல் சிந்தித்தும் எழுதியும் வந்த மகாகவி பாரதியின் மனதில் இருந்த குழந்தைத்தனமும் நகைச்சுவை உணர்வும் இக்கதையில் வெளிப்படுகின்றன...

கிளிக் கதை

நமது சமூகத்தில் நிலவும் மூடத்தனங்களையும், மோசடிப் பேர்வழிகளை நம்பி மோசம் போகும் மக்களையும் கண்டிக்க இதழாளர் என்றும் தவறியதில்லை. தீவிர மத நம்பிக்கை கொண்டவராயினும், சமுதாயத்தில் நிலவிய தவறான போக்குகளை அவர் அவ்வப்போது விமர்சித்து வந்தார். தனது எழுத்தையே அதற்கு ஆயுதமாக்கிய பாரதி எழுதிய நையாண்டிக் கதை இது...

அந்தரடிச்சான் ஸாஹிப் கதை

நையாண்டியும் கற்பனையும் கலந்து செய்த இக்கதை, யாரையோ மறைமுகமாகச் சாடுகிறது. அது யாராயிருக்கும்?

சிறு கதை

கர்மயோகி தான் ஒரு தொழில் செய்யத் தொடங்கி, இடையிலே அது தனக்குப் பயனில்லையென்று தோன்றினால், அதை அப்படியே நிறுத்திவிடமாட்டான். பிறருக்குப் பயன் தருமென்பதைக் கொண்டு, தான் எடுத்த வேலையை முடித்த பிறகே வேறு காரியம் தொடங்குவான்.....

துளஸீ பாயி என்ற ரஜ புத்ர கன்னிகையின் சரித்திரம்

மகாகவி பாரதி எழுதிய முதல் குறுங்கதை இது. ‘ஷெல்லிதாஸ்’ என்ற புனைபெயரில் இச் சிறுகதையை பாரதி, மகளிருக்காக தாம் நடத்திய ‘சக்கரவர்த்தினி’ என்னும் மாத இதழில் (1905 நவம்பர்) எழுதினார். இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காகவும், உடன்கட்டை ஏறும் வழக்கம் அவசியமற்றது என்பதை உணர்த்துடன் காதலின் பெருமையைச் சுட்டிக்காட்டவும், பாரதி பிரசார நோக்கத்துடன் இந்தக் கதையை எழுதி இருக்கிறார். ஹிந்து சமயத்தில் மிகுந்த நாட்டமும், தேர்ச்சியும் உடைய மகாகவி பாரதியின் பாரம்பரியச் சிந்தனை, இக்கதை எழுதுவதைத் தடுக்கவில்லை. ஏனெனில், மகாகவி பாரதி- காளிதாசன் மட்டுமல்ல, ஷெல்லிதாசனும் கூட.

வைசாக்தன் என்ற பண்டாரத்தின் கதை

மகாகவி பாரதி பாண்டிசேரியில் இருந்த சமயம், வேடிக்கையாக பல சின்னக் கதைகளை எழுதினார். படித்தால் சாதாரணமாகத் தோன்றும் இக்கதைகளில் ஆழ்ந்த பொருள் இருக்கும். அந்தக் கதைகளுள் ஒன்று இது...

சில வேடிக்கைக் கதைகள்

சீன தேசத்திலிருந்து ஒரு ராஜகுமாரன் அமெரிக்காவுக்குப் போயிருந்தானாம். அப்போது ஒரு பிரபுவின் மனைவி சீனத்து விருந்தாளியுடன் பேசிக் கொண்டிருக்கையிலே அவள்,  ‘உங்களுடைய சீன தேசத்தில் கலியாணமாகும் வரை மணப்பெண் தனது புருஷன் முகத்தைப் பார்ப்பது வழக்கமில்லையாமே! மெய்தானா?’ என்று கேட்டாள். அதற்கு ராஜகுமாரன்: 'உங்கள் தேசத்தில் சில பெண்கள் கலியாணமான பிறகு தனது புருஷன் முகத்தைப் பார்ப்பதில்லையென்று கேள்விப்படுகிறேன். அது மெய்தானா?’ என்றான்....

காக்காய்ப் பார்லிமெண்ட்

நேற்று சாயங்காலம் என்னைப் பார்க்கும் பொருட்டாக உடுப்பியிலிருந்து ஒரு சாமியார் வந்தார்.  “உம்முடைய பெயரென்ன?” என்று கேட்டேன்.  “நாராயண பரம ஹம்ஸர்” என்று சொன்னார்.  “நீர் எங்கே வந்தீர்?” என்று கேட்டேன். “உமக்கு ஜந்துக்களின் பாஷையைக் கற்பிக்கும் பொருட்டாக வந்தேன். என்னை உடுப்பியிலிருக்கும் உழக்குப் பிள்ளையார் அனுப்பினார்” என்று சொன்னார்.  “சரி, கற்றுக் கொடும்” என்றேன். அப்படியே கற்றுக் கொடுத்தார். காக்காய்ப் பாஷை மிகவும் சுலபம். இரண்டு மணி நேரத்திற்குள் படித்து விடலாம்.

The Fox with the Golden Tail (Short Story)

மகாகவி பாரதி எழுதிய ஆங்கிலச் சிறுகதை - The Fox with the Golden Tail. 1914இல் பொன்வால் நரி என்ற தலைப்பிலான இந்த ஆங்கில நையாண்டிக் கதையை பாரதி எழுதி வெளியிட்டார். அக்கதை, அன்னிபெசண்ட் அம்மையாரின் தியாசபிக்கல் சங்கக் கொள்கைகளை நையாண்டி செய்வதாக அமைந்திருப்பதாக விமர்சகர்கள் கூறுவர்.