மகரிஷி அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை ‘பொருள் புதிது’ இணையதளத்தில் ஏற்கனவே தொடர் வெளிவந்தது. தற்போது, பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கை தொடராக உருப்பெறுகிறது. 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதுகிறார்.
Tag: திருநின்றவூர் ரவிகுமார்
டிரம்ப் செய்தது குற்றம் தான்… ஆனால்…..
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெனிசூலா அதிபரை சட்டவிரோதமாக கைது செய்தது இப்போது உலக தலைப்புச் செய்திகளில் மறைந்துவிட்டது. அமெரிக்காவின் ஆணவப் போக்கை உலகம் விரும்பாமல் இருந்தாலும் அமைதி காக்கிறது. அதன் காரணம் என்ன என்று அலசுகிறார், தில்லியில் உள்ள இந்தியா ஃபவுண்டேசனின் தலைவர் திரு. ராம் மாதவ்…
கம்யூனிஸ்டுகளால் கைவிடப்பட்ட கம்யூனிசம்
இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் ஏன் கரைந்து வருகிறார்கள் என்ற கேள்விக்கான பதிலை, ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில், பாஜகவின் முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினர் ராகேஷ் சின்ஹா தனது கட்டுரையில் அளித்துள்ளார். இதோ அக்கட்டுரை…
குறி சாரும் வரை…
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு (1919) உத்தரவிட்ட ஆங்கிலேய அதிகாரி சர் மைக்கேல் பிரான்சிஸ் ஓ டையரை பிரிட்டன் தலைநகர் லண்டனிலேயே சுட்டுக் கொன்ற (1940) வீர இளைஞன் சர்தார் உதம் சிங் பற்றி நமது வரலாற்று பாடப் புத்தகத்தில் இருக்கிறதா?
தளும்பி வழியும் பிற்போக்குத்தனம், தில்லி தற்கொலை தாக்குதல்
பயங்கரவாதமானது, வறுமையின் பிள்ளை அல்ல, அது (மத) நம்பிக்கை பெற்று வளர்த்த குழந்தை.... மிகவும் படித்த தனி மனிதன் எப்படி மிக தீவிரமான வன்முறையை ஏற்றுக் கொள்கிறான்? எது அந்த நம்பிக்கையை உறுதியாக்கியது? எந்தக் கருத்தியல் சூழல் வன்முறையை நியாயப்படுத்துகிறது, அல்லது வன்முறையை புனிதச் செயலாகக் கருதுகிறது?
ஷட்பதீ ஸ்தோத்திரம் – விளக்கம்
ஆதி சங்கரர் எனப்படுகின்ற பகவத்பாதர் தக்ஷிண பாரதத்தில் திராவிட தேசத்தில் உள்ள காலடியில் (அன்றைய தமிழகம், இன்றைய கேரள மாநிலத்தில்) பிறந்தவர். அத்வைத வேதாந்தத்தை முன்னிறுத்திய சங்கர பகவத்பாதர் எழுதிய ‘ஷட்பதீ ஸ்தோத்திரம்’ என்கின்ற பக்தி நூலைப் பற்றி இங்கு பார்ப்போம்.
ஆங்கிலத்தை அல்ல, மெக்காலே மனோபாவத்தை நிராகரிப்போம்!
சசி கரூர் ஐ.நா. சபை மேனாள் துணை செயலாளர்; காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் . திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். இந்தக் கட்டுரையில், ஆங்கில மொழி ஒரு கருவி. அது நமக்கு தேவை. ஆனால் ஆங்கிலேய உளநிலை தேவையில்லை. ஆங்கில இலக்கியங்களை, மரபுகளைத் தெரிந்து கொள்வதற்கு இணையாக நம் மண் சார்ந்த இலக்கியங்களை, புராணங்களை நம் தாய்மொழியில் கற்க முடியாவிட்டால் ஆங்கில மொழியிலாவது கற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை
ஒட்டுமொத்தமாக ஒரு மதத்தைச் சார்ந்த அனைவரையும் பயங்கரவாதிகள் என்று கூறுவது தவறு. ஆனால் நெருடலாக இருக்கிறது என்பதற்காக உண்மையைப் போர்வையிட்டு மறைக்க முடியாது. இந்த இடத்தில்தான் முஸ்லிம் அறிஞர்கள், படித்தவர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது.
பரமபூஜனீய டாக்டர் ஹெட்கேவாரின் கடிதங்கள்: நூல் மதிப்புரை
ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஆரம்பித்த டாக்டர் ஹெட்கேவாரின் 72 கடிதங்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அவர் எழுதிய சுமார் 1000 கடிதங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் தேர்ந்தெடுத்த கடிதங்களின் தொகுப்பானது 1964 இல் தமிழில் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் நூற்றாண்டுக் காலத்தில் மறுபதிப்பு கண்டுள்ளது.
மனிதர்களின் அறிவார்ந்த வாழ்க்கையில் ஏ.ஐ.யின் குறுக்கீடு ஓர் அபாயம்!
இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர் பிரிட்ஜோப் காப்ரா (86). மேற்கத்திய அறிவியலையும் கீழையஞானத்தையும் இணைக்கும் பாலமாகக் கருதப்படுவது, இவர் எழுதிய ‘தாவோ ஆஃப் பிசிக்ஸ்’ (இயற்பியலின் வழி). அது மிக அதிக விற்பனையான நூல் மாத்திரமன்று, உலகின் பார்வையை மாற்றிய நூல்களில் ஒன்று. இது வெளிவந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், இன்றைய எண்ம உலகில் தொன்மையான ஆசிய ஞானத்தின் பொருத்தம் பற்றி இந்த நேர்காணலில் அவர் விவாதிக்கிறார். நேர்காணல் செய்த கார்லோ பிஸ்ஸாட்டி பிரபல எழுத்தாளர்.
என்.ஜி.ஓ.க்களின் பணத்தைப் பின்தொடர்வோம்!
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பெறும் வெளிநாட்டு நிதியுதவி பல பிரச்னைகளுக்கு வித்திடுகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் திரு. பல்பீர் புன்ச் அவர்களின் ஆங்கிலக் கட்டுரை இங்கு தமிழில் வெளியாகிறது.
ஏ .ஐ. தொழில்நுட்பத்திற்கு மோடி காட்டும் வழி
பிரதமர் மோடி ஏ.ஐ. பயன்பாட்டில் தார்மிகத்தை வலியுறுத்தியது மகாத்மா காந்தியின் கொள்கையான அகிம்சையை எதிரொலிக்கிறது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பற்றிய இந்தியாவின் செயல்திட்டம் பொறுப்புணர்வு , பாதுகாப்பு , மனித மாண்பு என்ற மூன்றையும் அடித்தளமாகக் கொண்டது.
முஸ்லிம் ஒருவர் ஆர்எஸ்எஸ் தலைவராக முடியுமா?
முஸ்லிம் ஒருவர் ஆர்எஸ்எஸ் தலைவராக முடியுமா? ஹிந்துவா, முஸ்லிமா என்பது பொருட்டல்ல. அந்தப் பொறுப்புக்கான தகுதி இருக்க வேண்டும் என்கிறார் ராம் மாதவ் . இவர், பாஜகவின் தேசிய செயலாளராக இருந்தவர். ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் ‘அவுட்லுக்’ பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் தமிழாக்கம் இது…. பொருள் புதிது தீபாவளி மலரின் ஏழாவது இதழ் இது...
நூற்றாண்டு காணும் சிந்தனை
மற்ற அமைப்புகளிலிருந்து ஆர்.எஸ்.எஸ். வேறுபடுவதற்கு காரணம் அதன் மற்றொரு பரிமாணமான சுயநலமற்ற சேவை . இது ஆறு தலைமுறைகளாக தொடர்ந்து அதன் தொண்டர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. பணம், பதவி, அங்கீகாரம் எதையும் தேடாமல் பல தலைமுறைகளாக குடும்பம் குடும்பமாக சேவை செய்வதை உலகில் வேறு எங்கேயாவது பார்த்ததுண்டா? திரு. அகிலேஷ் மிஸ்ரா ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெற்றியை அலசுகிறார்....
விடுதலைக்கான பயணப் பாதை
சங்கம் பல விஷயங்களுக்கு பெயர் பெற்றது. அதில் முதன்மையானது அதன் நேரம் தவறாமை. அது இந்தியர்களின் தளர்வான நேரத்தைப் பின்பற்றுவதில்லை. இங்கு நேரம் வீணடிக்கப்படுவதில்லை. எப்போது எந்த நிகழ்ச்சி தொடங்க வேண்டும், எப்போது முடிய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இப்போது என்னால் அவர்களைப் பின்பற்ற முடிகிறது. ஆனால் முதல் முறை எனக்கு அதெல்லாம் புதிதாக இருந்தது.... ஆங்கில புதின எழுத்தாளர் அத்வைத கலாவின் அனுபவம் இங்கே....