அயோத்யா பயணம் – ஓர் இனிய அனுபவம்

சேலத்தில் வசிக்கும் திரு. முரளி சீதாராமன், ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது அயோத்தி பயண அனுபவம் இங்கே பதிவாகிறது...

நந்தனார்  கதையில் கற்பனை ஏறிய கதை!

நந்தனார் கதை தெரிந்த எல்லோரும் அவர் ஒரு ஈவிரக்கமில்லாத பிராம்மணர் பண்ணையாரிடம் படாதபாடுபட்டவர் என்று தீர்மானமாக நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் வாஸ்தவத்தில் அறுபத்து மூவர் சரித்திரங்களுக்கு அதாரிட்டியான பெரிய புராணத்தில் வருகிற நந்தனார் கதையில் அந்த வேதியர் பாத்திரமே கிடையாது.

வாட்ராப்பும்  வைத்தமாநிதியும்- 2

சரி பீடிகை போதும்… தலைப்பின் பொருளுக்கு (subject matter) வருவோம். ஆங்கிலேயனுக்கு வாட்ராப் watrap - உள்ளூருக்கு வத்திராப்பு - கற்றவனுக்கு வற்றாயிருப்பு.  இப்படியாக ஒரு ஊருக்கு பல பெயர்கள் சொல் வழக்காக இருக்கலாம். பொருள்  புரிந்து கொள்வோம். வாருங்கள். 

மலையாளம்- 2

“தமிழ்நாட்டிலேயும் இதுபோலவே ஜாதி விரோதங்களை வளர்த்துவிட வேண்டுமென்று சில கயவர் பாடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டு வேளாளருக்கும், பார்ப்பாருக்கும் முதலியாருக்கும், தொழிலாளிகளுக்கும் சொல்லுகிறேன். ஜாதி விரோதத்தை உடனே கைவிடுக” என்று சாஸ்திரி சொன்னார்.

மலையாளம்-1

ஒரு நாள் இந்த நாராயணஸ்வாமி ரயில் யாத்திரை செய்கையில் இவர் ஏறியிருந்த வண்டியில் ஒரு நம்பூரி பிராமணர் வந்து சேர்ந்தார். அந்த நம்பூரி இவரை நோக்கி இடது கைச் சிறு விரலை நீட்டிக்கொண்டு, ‘பெயரென்ன?’  என்று கேட்டார்.  ‘என் பெயர் நாணு என்று ஜனங்கள் சொல்லுவார்கள்’ என்று நாராயணஸ்வாமி சொன்னார். ’தீயர்களுக்குக் கோயில் கட்டிக்கொடுக்கும் ஸந்யாஸி நீர் தானோ?’  என்று நம்பூரி கேட்டார்.  ‘ஆம்’ என்று ஸ்வாமி சொன்னார்.  ‘பிரமணர் பிரதிஷ்டை செய்து பூஜிக்க வேண்டிய தெய்வத்தை நீர் பிரதிஷ்டை செய்யும்படி உமக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?’ என்று நம்பூரி கேட்டார். அதற்கு நாராயணஸ்வாமி:-   ‘பிராமணர்களுடைய சிவனை நான் பிரதிஷ்டை செய்யவில்லை. நான் பிரதிஷ்டை செய்தது தீயர்களுடைய சிவன். இதில் தாங்கள் வருத்தப்பட வேண்டாம். தங்களுடைய சிவன் வழிக்கே நாங்கள் வரவில்லை’ என்றார்.    

ராகவ சாஸ்திரியின் கதை

அதற்கு ராகவ சாஸ்திரி சொல்லுகிறார்:-  “நான், மலையாளி என்று குப்பு சாஸ்திரியிடம் சொன்னேன். ஸம்ஸ்கிருதம் பேசுவதிலிருந்து நம்பூரி பிராமணராகத்தான் இருக்க வேண்டும் என்று குப்பு சாஸ்திரி தாமாகவே ஊகித்துக் கொண்டார் போலும். நான் ஜாதியில் தீயன். மலையாளத்தில் தீயரென்றால் தமிழ் நாட்டில் பள்ளர் பறையரைப் போலேயாம். தீயன் சமீபத்தில் வந்தால் பிராமணர் அங்கே ஸ்நாநம் செய்து பாவத்தை நிவர்த்தி செய்து கொள்வது வழக்கம்” என்றார்.      

வாட்ராப்பும்  வைத்தமாநிதியும் -1

நடுங்கும் குளிரில், தரையில் அமர்த்தி சூடான இலவச உணவு. தங்குவதற்கு தகரக் கொட்டாய். படுக்கப் பாயாக கோணிப்பை. போர்த்திக்கொள்ள கோணிப் பையால் கோர்த்த போர்வை. ஊளையிடும் வாடைக்காற்று. உண்ட களைப்பில் உடல் கொண்ட உறக்கம் சொர்க்கானுபவம். வந்த அதிதிகளுக்கு அன்னமிட்டு, தங்க இடமளித்து அன்பு உபசரிப்பு செய்த அந்த அன்னமிட்ட கைகளுக்கு அவசியம் உண்டு சிவானுபூதி…

டிண்டிம சாஸ்திரியின் கதை

கதை சொல்வது போல சரித்திர நிகழ்வுகளையும் சமூக அவலங்களையும் வாசகர் மனதில் பதிய வைப்பது மகாகவி பாரதிக்கு கைவந்த கலை. அவரது தராசுக் கடை, வேதபுரத்து அனுபவங்கள் போன்றவை இதற்கு சிறந்த உதாரணங்கள். இதோ, வேதபுரக் கதையாக ஒரு செய்தி அனுபவம்...

திருந்துமா திமுக?

அன்றாட அரசியலில் பொருள்புதிது தளத்திற்கு ஆர்வம் இல்லை. ஆனால், தமிழ்ச் சமுதாயத்தைப் பாதிக்கும் எந்த ஒரு கருத்தாக்கம் குறித்தும் நாம் கவலைப்பட வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அண்மையில் நாடாளுமன்ற மக்களவையில் முட்டாள்தனமாக உளறிய தர்மபுரி எம்.பி. செந்தில்குமாரின் அசூயையான ஹிந்து வெறுப்புணர்வுப் பேச்சு அதற்கான எதிர்வினையைப் பெற்று, அவரும் மன்னிப்புக் கேட்டுவிட்டார். இனி திமுக என்ன செய்யப் போகிறது? பிரம்மரிஷியாரின் அற்புதமான கருத்தோட்டம் இதோ…

சென்னை வெள்ளம்: சில சிந்தனைகள்-2

‘மிக்ஜம்’ புயலால் சென்னை மாநகரமும், புறநகர்ப் பகுதிகளும் சீரழிந்து கிடக்கின்றன. புயல் கடந்து, மழை நின்று நான்கு நாட்களாகியும், இன்னமும் பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை; சென்னையில் வாழும் மக்கள் பரிதவிக்கிறார்கள். அரசுக்காகக் காத்திருப்பதால் பயனில்லை என்பதை உணர்ந்து, மூன்று நாள் பட்டினி இருந்த களைப்புடன் வீடுகளைக் காலி செய்துவிட்டு வெளியேறும் மக்களைக் காண்கையில் வேதனையாக இருக்கிறது. இதற்கு யார் காரணம், என்ன தான் தீர்வு? இங்கு சில சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன…. (பகுதி-2)

சென்னை வெள்ளம்: சில சிந்தனைகள்

‘மிக்ஜம்’ புயலால் சென்னை மாநகரமும், புறநகர்ப் பகுதிகளும் சீரழிந்து கிடக்கின்றன. புயல் கடந்து, மழை நின்று இரண்டு நாட்களாகியும், இன்னமும் பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை; சென்னையில் வாழும் மக்கள் பரிதவிக்கிறார்கள். அரசு காக்க வரும் என்று காத்திருந்து பயனில்லை என்பதை உணர்ந்து, மூன்று நாள் பட்டினி இருந்த களைப்புடன் வீடுகளைக் காலி செய்துவிட்டு வெளியேறும் மக்களைக் காண்கையில் வேதனையாக இருக்கிறது. இதற்கு யார் காரணம், என்ன தான் தீர்வு? இங்கு சில சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன….

வருங்காலம்    

வெளியுலகத்தில் நாம் சென்று மேம்பாடு பெற்றாலொழிய, இங்கே நமக்கு மேன்மை பிறக்க வழியில்லை. ஆதலால், தமிழ்ப் பிள்ளைகளே, வெளிநாடுகளுக்குப் போய் உங்களுடைய அறிவுச் சிறப்பினாலும், மனவுறுதியினாலும், பலவிதமான உயர்வுகள் பெற்றுப் புகழுடனும், செல்வத்துடனும், வீர்யத்துடனும், ஒளியுடனும் திரும்பி வாருங்கள். உங்களுக்கு மஹாசக்தி துணை செய்க.

பருந்துப் பார்வை

காசியிலே ஹிந்து ஸர்வகலா சங்கம் கட்டும் போது பல மாளிகைகள் ஹிந்து சிற்பத்தைத் தழுவியிருக்க வேண்டும். நவீன பாடசாலைகளுக்குரிய லக்ஷணங்கள் குறையக் கூடாது. ஆனால், சிற்பத்தின் மேனி சுதேசிய விஷயமாக இருக்க வேண்டும். பாரத தேசத்துச் சிற்பிகளிலே தமிழ்நாட்டு ஸ்தபதிகள் ஒரு முக்கியமான அங்கமாவர். வங்கத்திலே மஹா கீர்த்தியுடன் சோபிக்கும் நவீன சாஸ்திரிகளில் நாயகராகிய அவனீந்த்ர தாகூர் கூட இக்காலத்திலும் தமிழ்நாட்டில் வாழும் ஸ்தபதிகளிடம் உயர்ந்த தொழில் இருப்பதாக மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

விசாரணை

பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகளை அதிகப்படுத்தினால், சிறைச்சாலைகள் குறையும்  என்பதை அநேக நீதிசாஸ்திரக்காரர் தெரிந்து சொல்லுகிறார்கள். வாத்தியார்களின் தொகை அதிகப்பட்டால் போலீஸ் ஸேவகரின் தொகை குறையும். நியாயமான அதிகாரத்தின் கீழ் பள்ளிக்கூடமும் வாத்தியாரும் மிகுதிப்படும்; போலீஸ் ஸேவகமும் சிறைச்சாலையும் குறையும்.

பழைய உலகம்

இவ்வாறு அய்யர் சொல்லிய உபாயம் செட்டிக்கு ரஸப்படவில்லை. எனக்கும் பயனுடையதாகத் தோன்றவில்லை. அடுத்த ஜன்மத்தில் நான் மற்றொரு மனிதனாகப் பிறந்து வாழ்க்கையிலே செல்வமுண்டானால், இப்போதுள்ள எனக்கு எவ்விதமான லாபமும் இல்லை. அதைப் பற்றி எனக்கு அதிக சிரத்தையில்லை. இந்த ஜன்மத்தில் பணம் தேடுவது தான் நியாயம். வரும் ஜன்மத்து ரூபாய்க்கு இப்போது சீட்டுக் கட்டுவது புத்திக் குறைவு.