தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் வழியில் தமிழ்ப்பேரை தீட்சிதர் – நூல் அறிமுகம்

ஒவ்வொரு பாடலுக்கும், பதவுரை, விளக்கவுரை ஆகியவற்றுடன், ஆழ்வார்கள் வாக்கு என்ற ஒப்பீடுப் பகுதியையும் இணைத்து, முப்பரிமாணத்தில் நூலைத் தொகுத்திருப்பது மிகவும் சிறப்பு. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நூலாசிரியரின் தேர்ச்சி ஒப்பீடுகளில் வெளிப்படுகிறது. அந்த வகையில்,  ‘தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் வழியில் தமிழ்ப்பேரை தீட்சிதர்’ என்ற இந்நூல், ஆழ்வார்களின் பாசுரங்களின் துணையுடன் மிளிர்கிறது.

வீர சாவர்க்கர் ஒரு தீர்க்கதரிசி

திருவாளர்கள் உதய் மஹூர்கர், சிராயு பண்டிட் ஆகியோர் எழுதிய ‘Savarkkar: The man who could have prevented partition’ என்ற நூலுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் ப.பூ. மோகன் பாகவத் அளித்துள்ள அணிந்துரையே இக்கட்டுரை….

சங்கரநயினார் கோயில் தலபுராணம் – நூல் மதிப்புரை

இந்த நூல் இதுவரை பல பதிப்புகள் கண்டிருந்தாலும் செம்மையான பதிப்புக் காணவில்லை என்ற குறையை நீக்கி இருக்கிறது குகபதி பதிப்பகம். கீழவயலி அம்பிகைதாசன் அளித்த உரையுடன் சங்கரநயினார் கோயில் புராணத்தை மீளாக்கம் செய்திருக்கும் நண்பர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதுபோலவே ஒவ்வொரு தலபுராணமும் முழுமையாக அச்சிடப்பட்டால், நமது தமிழ் மொழி, மாநில வரலாறு செழுமையுறும் என்பதில் ஐயமில்லை.

கோமதி சதரத்ன மாலை- நூல் அறிமுகம்

சங்கரன்கோவில் திருத்தலத்தில் உறையும் தேவி  கோமதி அம்மன். சைவ - வைணவ ஒற்றுமைக்குப் பாலமாகத் திகழும் இத்தலத்து அம்மையை தமது செந்தமிழால் பாடிப் பரவுகிறார், சென்ற நூற்றாண்டின் மையத்தில் சைவத்தமிழ் வளர்த்த சைவ சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுவரமூர்த்திப் பிள்ளையவர்கள். கோமதி அம்மனின் பெருமைகளை விவரிக்கும் இந்த நூறு பாடல்களும் ரத்தினம் போல மிளிர்கின்றன.

பேராபுரி மஹாத்ம்யம்- நூல் அறிமுகம்

தென்திருப்பேரை தமிழ்ப் புலவர்கள் பலர் வாழ்ந்த தலம். இத்தலத்து இறைவனான மகரநெடுங்குழைக்காதரை அவர்கள் பலரும் பாடி மகிழ்ந்திருக்கின்றனர். அவ்வாறு  எழுதப்பட்ட பல தமிழ் இலக்கியங்களையும் மிகவும் கடினமாக உழைத்து, ஒன்றுசேர்த்து, அரிய, புனிதமான படையலாக அளித்திருக்கிறார் திருவாளர் மகர சடகோபன்.

சங்க செயல்முறையின் வளர்ச்சி – நூல் அறிமுகம்

சங்கம்- அமைப்பு; ஸ்வயம்சேவகர் - உறுப்பினர்; ஷாகா - அடிப்படை செயல்முறை. இந்த சங்க திட்டம் படிப்படியாக வளர்ந்து கொண்டே செல்வதை இந்நூலில் காணும் போது மகிழ்கிறோம். ஒரு மொட்டு  பூவாக மலர்வது போல,  ஒரு சிசு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்வது போல, சங்க செயல்முறை இயல்பாக வளர்ந்தது. இதனை விவரிக்கிறது இந்நூல். ஆர்.எஸ்.எஸ்.ஸின் நூற்றாண்டு நெருங்கும் வேளையில், இந்த நூல் வெளிவருவது மிகவும் சிறப்பு.

நூற்றெட்டு திருப்பதி களஞ்சியம்- நூல் அறிமுகம்

வைணவர்கள் போற்றி வழிபடும் தலங்களில் பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பட்டவை (மங்களா சாசனம் செய்யப்பட்டவை) 108 திவ்ய தேசங்களாகும். இந்த 108 திருப்பதிகளுக்கும் சென்று வழிபடுவது ஒவ்வொரு வைணவரின் லட்சியக் கனவாகும். இந்த தலங்கள் பற்றி தமிழில் பல நூல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நூல், அவற்றிலிருந்து வேறுபட்டது. 108 திவ்ய தேசங்கள் குறித்த இலக்கியப் பதிவுகள் அனைத்தையும் ஒரே நூலில் தொகுத்திருக்கும் அற்புத முயற்சி இது.

வந்தே பாரத் வரலாறு- நூல் அறிமுகம்

வந்தே பாரத் ரயிலின் சிற்பியான சுதாஷு மணி எழுதிய நூல் இது. இதனை சிறப்புற தமிழாக்கம் செய்துள்ள திரு. பி.ஆர்.மகாதேவன் எழுதிய அறிமுக உரை இது…

தமிழ் வளர்த்த முருக பக்தர்கள்: நூல் அறிமுகம்

இந்நூலில் 15 அத்தியாயங்கள் இதில் உள்ளன. முதல் அத்தியாயம் முருக வழிபாடு கௌமார சமயமாக - முருகனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுவது - தனித்து விளங்கியதையும் பின்னர் பகவத் பாதரால் அது இன்றைய ஹிந்து மதத்தின் ஒரு அங்கமாக ஆனதையும் சொல்கிறது. மற்ற அத்தியாயங்கள் 14 முருக பக்தர்களைப் பற்றியும் அவர்கள் இயற்றிய நூல்களையும் கூறுகின்றன.

அர்ச்சகக்குடி காத்த ஆசானின் வரலாறு

ஆலய வழிபாட்டின் அருமை பெருமை உணர்ந்தவர்களுக்கு அர்ச்சகக் குடியின் சிரமங்கள் தெரியும்; அர்ச்சகர்களுக்கு அவர்களும் உடனிருந்து உதவுவார்கள். அதற்கு பழனி ஈசான சிவாசாரியார் போன்றவர்களின் சரிதங்கள் இன்றைய தலைமுறைக்கு சொல்லப்பட  வேண்டும். இவரைப் போன்றவர்களின் அரும் முயற்சியால்தான் அர்ச்சகக் குடிகளுக்குத் தேவையான சிவாகமப் பயிற்சியும் அதற்குத் தேவையான அச்சிட்ட நூல்களும் வாழையடி வாழையாகத் தொடர்கின்றன.

ரத்தத்தில் முளைத்த என் தேசம் – ஒரு பார்வை

வரலாற்றை மறந்தவனும் அறியாதவனும் நிகழ்காலத்தில் தவறிழைத்து எதிர்காலத்தை இழந்து விடுகிறார்கள். எனவேதான் வரலாறு முக்கியமானதாகிறது. ஆனால், நாம் பயிலும் வரலாறு உண்மையானதா? வரலாறு என்ற பெயரில் நமது கல்வி நிறுவனங்களில் புகுத்தப்படும் பல பொய்மைகளைத் தோலுரிக்கிறது, திரு. பி.பிரகாஷ் எழுதிய ‘ரத்தத்தில் முளைத்த என் தேசம்’ என்ற இந்த நூல். இதுகுறித்து எழுத்தாளர் திரு. ஆமருவி தேவநாதன் தனது வலைப்பக்கத்தில் எழுதிய கட்டுரை இங்கே மீள்பதிவாகிறது....

பாரதியின் கருத்துப்படங்கள்- அற்புதமான அரிய ஆவணம்

மகாகவி பாரதியின் படைப்புகளில் மிகவும் முக்கியமான தொகுப்பு, பாரதியின் கருத்துப் படங்கள் என்ற இந்த அற்புதமான தொகுப்பாகும். ‘இந்தியா’ பத்திரிகையில் மகாகவி பாரதி அறிமுகம் செய்த கருத்துப்படங்கள் குறித்த விவரங்களுடன், அரிதின் முயன்று சேகரித்த கருத்துப்படங்களைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார் ஆ.இரா.வேங்கடாசலபதி.

கருணைமிகு திருக்கருவையம்பதி- இனிய தொகுப்பு

கரிவலம்வந்தநல்லூரின் தலப்பெருமைகள், இத்தலம் குறித்து எழுதப்பட்ட இலக்கியங்கள் குறித்துத் தொகுக்கப்பட்டுள்ள இனிய நூல், ‘கருணைமிகு திருக்கருவையம்பதி’. திருக்கருவையம்பதி என்பது கரிவலம்வந்தநல்லூரின் இலக்கியப் பெயர். தங்கள் ஊர் சிவன் கோயிலின் பாரம்பரிய வரலாற்றையும் தற்போதைய நடைமுறைகளையும் சீராகத் தொகுத்து அளித்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

சுவாமி சகஜானந்தரின் வாழ்க்கைப் போராட்டம்- 3

சுவாமி சகஜானந்த சரஸ்வதியின் ‘என் வாழ்க்கைப் போராட்டம்’ நூலை முன்வைத்து, நூல் அறிமுகமாக மட்டுமல்லாது, அக்கால சமூக வரலாற்றையும், மூன்று பகுதிகள் கொண்ட இத்தொடரில் எழுதி இருக்கிறார், திரு. திருநின்றவூர் ரவிகுமார்…. (இது இறுதிப் பகுதி)…

சுவாமி சகஜானந்தரின் வாழ்க்கைப் போராட்டம் -2

சுவாமி சகஜானந்த சரஸ்வதியின் ‘என் வாழ்க்கைப் போராட்டம்’ நூலை முன்வைத்து, நூல் அறிமுகமாக மட்டுமல்லாது, அக்கால சமூக வரலாற்றையும், மூன்று பகுதிகள் கொண்ட இத்தொடரில் எழுதி இருக்கிறார், திரு. திருநின்றவூர் ரவிகுமார்…. (இது இரண்டாம் பகுதி)…