பாரதி போற்றும் தேசியக் கல்வி- 2

திருவள்ளுவரையும் சுவாமி விவேகானந்தரையும் தனது ஆதர்ஷ நாயகர்களாகக் கருதியவர் மகாகவி பாரதி. இது, அவரது படைப்புகளில், சிந்தனைகளில் வெளிப்பட்டபடியே இருக்கிறது. பாரதியின் கல்விச் சிந்தனைகள் பலவும் வள்ளுவரும் விவேகானந்தரும் கூறியவையே. வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட நாயகரான பாரதி, இக்கருத்துகளையே தனது பாணியில் முன்வைக்கிறார்.

ராமாயண சாரம் (17-18)

தன் மகன் அங்கதனை அழைத்து  “ராமன் என்னை முடித்துவிட்டான் என்ற எண்ணம் எப்பொழுதும் உன் மனதில் எழக் கூடாது. நடந்தது தர்மத்தின் படியே நடந்திருக்கிறது. எனவே நீ  “தருமம் நோக்கி, மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலர் அடி சுமந்து வாழ்தி” என்று அங்கதனிடம் சொல்லிவிட்டு  “ராமா இவன் மற்று உன் கையடை ஆகும்” என்று ராமனிடம் ஒப்புவித்து விட்டு மேலுலகம் செல்கிறான் வாலி.

பாரதி போற்றும் தேசியக் கல்வி- 1

வைரத்தின் ஒவ்வொரு முகப்பும் ஒளியுடன் திகழ்வது போல, மகாகவி பாரதியின் கவிதைகளும் கட்டுரைகளும் தேசநலனை மட்டுமே ஒளியாக உமிழ்கின்றன. அவற்றில் கல்விக்கு அவர் அளிக்கும் இன்றியமையாமையை மட்டும் இங்கு நாம் தொடராகத் தொகுத்துக் காணலாம்....

ராமாயண சாரம் (15-16)

ராமன், ஜடாயுவுக்கு அந்திமக்கிரியை செய்துவிட்டு, “தந்தையை இழந்தேன். இப்பொழுது சீதையும் பிரிந்து விட்டாள்” என்று வருந்தி, நெஞ்சில் கோபக்கனலுடன கையில் வில்லுடனும் மனதில் அரக்கர் கூட்டத்தை அழிக்க வேண்டும் என்ற உறுதியுடனும் தெற்கு நோக்கி, ராவண சாம்ராஜ்யம் முடியப்போகும் என்பதற்கான முதல் அடியை ராமன் எடுத்து வைக்கிறான்.

ராமாயண சாரம் (13-14)

ராமன் இருக்குமிடம் வந்து சீதை முன் பொன் மானாகத் தோன்றுகிறான் மாரீசன். மானைக் கண்ணால் கண்டால் மனத்தால் விரும்பாதவர் யார்? அதுவும் இது கண்ணைக் கவரும் பொன் மான். இதுவரை ராமனிடம் எதுவும் கேட்காத சீதை அந்த மானைப் பிடித்துத் தருமாறு வேண்டுகிறாள்.

ராமாயண சாரம் (11-12)

மேலும் விளையாட்டாக சூர்ப்பணகை ‘எனக்கு மூக்கு இல்லையே இப்பொழுது. மூக்கில்லாத இவளுடன் எப்படி குடும்பம் நடத்துகிறான் என்று ஊர் பழிக்கும் என்று அஞ்சுகிறாயா, ராமா? யாரவது கேட்டால் சொல். இடையே இல்லாத சீதையுடன் இத்தனை நாள் குடும்பம் நடத்தினேனே. அப்படித்தானே இதுவும் என்று சொல் ராமா” என்று கொஞ்சி விளையாடப் பார்க்கிறாள். ரணகளத்திலும் அவளுக்கு கிளுகிளுப்பு.

ராமாயண சாரம் (9-10)

அயோத்தி நீங்கிய ராமனை இளவல் பரதன் சந்திக்கும் காட்சி மிகவும் உணர்ச்சிகரமானது. அப்போது பரதனுக்கும் ராமனுக்கும் ஒரு அழகான உரையாடல் நடக்கிறது. கம்பனின், மிகச் சிறந்த, உரையாடல்களில் இதுவும் ஒன்று.

ராமாயண சாரம் (6-8)

ராமன்  “அது அரக்கர் வாழும் காடு; மலைகளைக் கடக்க வேண்டி வரும். உன் மலர்ப்பாதங்கள் அதைத் தாங்காது. உன் பாதங்கள் குளிர்ந்த அரக்குண்ட செம்பஞ்சு போன்றது. வனத்தில் நடப்பது உனக்கு கடினம்” என்கிறான். சீதையோ மனம் வெதும்பி  “நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?” என்று குமுறுகிறாள்.

ராமாயண சாரம் (4-5)

ராமச்சந்திரனே புவி ஆளத் தகும் என்றெண்ணி அழைத்து அவன் மார்பு இந்த பூபாரத்தை தாங்குமா என்று தன் மார்போடு அணைப்பது போல ராமனின் மார்பை அளந்து பார்க்கிறான் தசரத சக்கரவர்த்தி. 56 இன்ச் இருக்குமா என்று அளந்து பார்த்திருப்பானோ தசரதன்! அளந்ததில் சரியாக இருந்தது.... எழுத்தாளர் திரு. சண்முகநாதனின் ‘ராமாயண சாரம்’ தொடர்...

ராமாயண சாரம் (1-3)

எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதன் தனது முகநூல் பக்கத்தில் எழுதிவரும் இனிய தொடர் இது. ஆடிமாதம் முழுவதும் வெளியாகவுள்ள இத்தொடரின் பகுதிகள் நமது தளத்திலும் அவ்வப்போது வெளியாகும்…

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 21

காலந்தோறும் நமது தாய்மொழி எவ்வாறு வளர்ந்து வந்திருக்கிறது என்பதற்கான நிகழ் சாட்சியமாகவே, நமது ‘தமிழ் இலக்கியத்தில் செங்கோல்’ என்ற தேடலைக் கூற முடியும். நாட்டு மக்கள் நலம் பெற உதவும் மன்னரின் செங்கோலுக்கு நமது இலக்கியங்கள் சுமார் 2,500 ஆண்டுகளாக அளித்த முக்கியத்துவம் கடந்துபோன அத்தியாயங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் நிறைவாக, நல்லாட்சி, செங்கோல் குறித்து, தமிழ்த்தாயின் தவப்புதல்வர் மகாகவி பாரதியின் கருத்து என்னவாக இருந்தது என்று அறிவோம்.

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 20

தமிழ் இலக்கிய- இலக்கணங்களில் செங்கோலைத் தேடும் நமது இலக்கிய யாத்திரையின் நிறைவுப் பகுதி மகாகவி பாரதியே. எனினும் அவருக்கு முன்னோடியாக விளங்கியவர், தமிழகத்தின் தவச்செம்மல், சநாதனம் காக்க உதித்த அறச்செம்மலான வள்ளலாரே.

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 19

நமது நாட்டில், நல்லரசன் ஆளும் நாட்டில் மாதம் மும்மாரி பொழியும் என்ற நம்பிக்கை பாரம்பரியமாக நிலவுகிறது. செங்கோலாட்சியின் அடையாளமே மாதம் மும்மாரி மழை தான் என்கிறது ‘விவேக சிந்தாமணி’ என்னும் பிற்கால நீதிநூல்....

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 18

தமிழ் இலக்கியத்தின் என்றுமுள சீரிளமைக்கு அடையாளமான இனிய பாசுரங்கள் வைணவர்களின் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் காணப்படுகின்றன. அவற்றில் செங்கோல் ஏந்தி வரும் பாசுரங்கள் சிலவற்றை இங்கே நாம் காணலாம்...

தமிழ் இலக்கியத்தில் செங்கோல் -17

நமது தமிழ் மொழியின் வனப்பை மெருகேற்றிய இனிய பாடல்களை சைவர்களின் பன்னிரு திருமுறையும், வைணவர்களின் நாலாயிர திவ்ய பிரபந்தமும் அளித்துள்ளன. இப்பாடல்கள் அனைத்தும் இறைவனைப் போற்றுவதுடன், அக்கால மக்களின் வாழ்க்கை நிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் கொண்டுள்ளன. இவற்றில் பன்னிரு திருமுறைகள் குறித்தும், அதில் செங்கோல், நல்லாட்சி தொடர்பான செய்திகள் பயிலும் சில பாடல்களையும் முதலில் காண்போம்.