கிழக்கிலிருந்து மீண்டும் ஒரு ஒளிக்கீற்று

விவேகானந்தம்150.காம் இணையதளத்தில் திரு. ம.கொ.சி.ராஜேந்திரன் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது....

கல்வி :இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு…

அரசுப் பள்ளி ஆசிரியரும் எழுத்தாளருமான திரு. ஆதலையூர் த.சூரியகுமார் சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதியுள்ள கட்டுரை இது...

ஸ்ரீமத் ஸ்வாமி விவேகாநந்த பரமஹம்சர்- 2

சுவாமி விவேகானந்தரின் திவ்ய சரிதத்தை, தான் ஆசிரியராகப் பணியாற்றிய  ‘சக்ரவர்த்தினி’ என்ற மகளிருக்கான மாத இதழில் தொடராக எழுத முற்பட்டார் மகாகவி பாரதி.  அந்த மகத்தான சரிதம் முற்றுப் பெறாமல் இரு அத்தியாயங்களுடன் நின்றுவிட்டது. அந்தத் தொடரின் இரண்டாவது அத்தியாயம் இது...

ஸ்ரீமத் ஸ்வாமி விவேகாநந்த பரமஹம்சர்-1

சுவாமி விவேகானந்தரின் திவ்ய சரிதத்தை, தான் ஆசிரியராகப் பணியாற்றிய  ‘சக்ரவர்த்தினி’ என்ற மகளிருக்கான மாத இதழில் தொடராக எழுத முற்பட்டார் மகாகவி பாரதி.  அந்த மகத்தான சரிதம் முற்றுப் பெறாமல் இரு அத்தியாயங்களுடன் நின்றுவிட்டது. எனினும், இந்த இரு அத்தியாயங்களில் சுவாமிஜி குறித்த மகாகவியின் துல்லியமான பார்வையும் தெளிவான கண்ணோட்டமும் புலப்படுகின்றன. அந்தப் பகுதிகள் இங்கே, அவரது நடையிலேயே….

தொண்டு செய்வதே வாழ்வின் நோக்கம்

சுவாமி விவேகானந்தர் குறித்து பத்திரிகையாளர் திரு. நீதிராஜன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...

சுவாமிஜியின் சுதந்திர தாகம்!

பத்திரிகையாளர் திரு. நெல்லை விவேகநந்தா, சுவாமி விவேகானந்தர் குறித்து 2014இல் எழுதிய கட்டுரை இது...

விவேகானந்தர் – 25

பத்திரிகையாளர் திரு. ப.திருமாவேலன் எழுதிய இக்கட்டுரை ஆனந்தவிகடன் இதழில் (2013) வெளியானது. சுவாமி விவேகானந்தரின் 25 அம்சங்களை இக்கட்டுரையில் தொகுத்திருக்கிறார்....

அக்னிப் புயல்

சுவாமி விவேகானந்தர் குறித்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு. கிருஷ்ணாவின் இனிய கட்டுரை இது...

இளைய பாரதத்தின் சூரியன்

பத்திரிகையாளர் திரு. எஸ்.ஆர். செந்தில்குமாரின், சுவாமி விவேகானந்தர் குறித்த சுருக்கமான, இனிய கட்டுரை இது...

ஒரு கதையும் நான்கு கட்டுரைகளும்…

பத்திரிகையாளர் திரு. எல்.முருகராஜ், சுவாமி விவேகானந்தர் குறித்து 2014-இல் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது.

9/11-க்கு முன்பே 9/11 இருந்தது!

சுவாமி விவேகானந்தர் குறித்த பத்திரிகையாளர் திரு. டி.ஐ.அரவிந்தனின் கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது...

நாடகக் கலை -3 ஆ

‘கள்ளிப் புதர்களும் கற்றாழைக் காடுகளும் நிறைந்திருந்த கலைத் துறையை நாங்கள் கைப்பற்றி விட்டோம்; இனி இங்கே இதிகாசங்களும், புராணங்களும் இடம் பெற இயலாது’  என நண்பர்கள் சிலர் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில்  ‘இராமாயணம்’ திரைப் படத்தை வெற்றிப் படமாகக் கொண்டு வந்து தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரிலும் அப்படத்தை நூற்றுக் கணக்கான நாட்கள் ஓட்டிக் காட்ட முடிந்தது என்றால் அந்தக் காப்பியத்தின் அழியாத் தன்மைக்கு வேறென்ன சிறப்பு வேண்டும்?

நாடகக் கலை – 3 அ

சமுதாயத்தை உயர்த்துவது எப்படி என்பதில்தான் கருத்து வேற்றுமைகள் ஏற்படுகின்றன. ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். சமுதாயத்தை உயர்த்துவதாக நினைத்துக்கொண்டு அறிவுப் பிரசாரம் என்ற பெயரால் அழிவுப் பிரசாரம், அபத்தப் பிரசாரம் முதலியவற்றைச் செய்வதால் யாருக்கும் நன்மையேற்படாது. அப்படிச் செய்யத் தொடங்கும்போது கலை மறைந்து நாடக மேடை வெறும் பிரசார மேடையாகி விடுகிறது. அதற்காக நம் கலையில் பிரசாரக் கருத்துக்களே கூடாது என்ற முடிவுக்கு வந்து  ‘கலை கலைக்காகவே’ என்னும் கோஷ்டியில் சேர்ந்துவிட முயல்வது தவறாகும்.

நாடகக் கலை – 2 – ஆ

இசைக் கலைஞன் ஒருவன் இல்லத்தில் தனித்திருந்து இசைபாடி இன்புறுவான். மெய்மறந்து இசைச்சுவையோடு அவன் ஒன்றிவிடவும் முடியும். ஓவியக் கலைஞன் இதற்கு விலக்கன்று. தனது சுவைக்காகவே, தனது உள்ளுணர்ச்சியின் அமைதிக்காகவே கூட ஓவியம் தீட்டத் தொடங்கி விடுவான்; உணர்விழந்து நிற்பான். சிற்பக் கலைஞனும் இப்படித்தான். ஆனால் நடிப்புக் கலை தனித்தன்மை வாய்ந்தது. நடிகன் தனித்திருந்து நடித்து இன்புற இயலாது. எதிரே வீற்றிருக்கும் ரசிகர் கூட்டம் அவ்வப்போது காட்டும் மெய்ப்பாட்டுணர்ச்சிகள் மேடையில் நடிக்கும் நடிகனின் உணர்ச்சிகளோடு ஒருமைப்படும் போது தான் நடிப்புக்கலை அதன் உச்சநிலைக்கு வருகிறது. இது அனுபவத்தின் வாயிலாக நான் கண்ட உண்மை.

நாடகக் கலை – 2 -அ

நடைமுறை வாழ்க்கையில் நம்மில் எத்தனையோ பேர் அபூர்வமாக நடிக்கிறார்களே; இந்த நடிப்பையெல்லாம் அவர்கள் எந்தப் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொண்டார்கள்? வணிகர்கள், வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள், தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், இவர்களில் பலர் தம் சொந்த வாழ்க்கையில் எப்படியெல்லாம் திறமையாக நடிக்கிறார்கள்?