கொன்றைக் கண்ணியர், கொன்றை மாலையர், இடபவாகனர், இடபத் துவசர், நீலகண்டர், மாதிருக்கும் பதியர், மதி முடிக் கடவுள் ஆக விளங்கும் சிவபெருமான் சடாதாரியாக இருக்கிறார்.சடாதாரி என்ற மாத்திரத்திலே தவமுனிவர் திருக்கோலந்தான் நம் நினைவுக்கு வருகிறது. மற்ற கடவுளரின் கோலங்களில் இத்தனை தவச் சிறப்புடைய அடையாளங்களைக் காண முடியாது. திருநீறும், தோலாடையும், சடா பாரமும் ஆகியவை தவக் கோலத்தைச் சார்ந்தவை. ஆகவே சிவபிரானை அருந்தவர் என்று சொல்வது வழக்கம். ‘அருந்தவ முதல்வன்’ (கலி.100:7) என்று கலித்தொகை பேசுகிறது....
Category: கருவூலம்
அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- முகவுரை
பழந் தமிழ் இலக்கியத்தின் சிறந்த நூல்களின் ஒன்றான புறநானூறில் சில பாடல்களை மட்டும் எடுத்துக்கொண்டு அதற்கு இனிய சொற்சித்த்ரத்தைத் தீட்டுகிறார் அமரர் கி.வா.ஜ. வாருங்கள் அந்த இனிய தமிழில் தோய்வோம்...
திருநாளைப்போவார் நாயனார் புராணம்
பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் புராணத்தை சேக்கிழார் பெருமான் இயற்றி அருளினார். ஈசன் அடியார் எப்பிறப்பாயினராயினும் இணையானவரே என்பதை இந்நூல் உறுதிபடக் கூறுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே சமூக சமத்துவம் நாடிய அருளாளரான சேக்கிழார் பெருமானின் இந்நூல், அனைவரும் படித்தேற வேண்டியதாகும். இதில் இடம்பெற்றுள்ள ‘திருநாளைப்போவார் நாயனார் புராணம்’ (நந்தனார் சரிதம்) தற்காலத்தின் தேவை கருதி இங்கே பதிவாகிறது...
வெற்றிகரமான வாழ்க்கைக்கு விவேக வழி!
ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் விவாதம் செய்து தம் கருத்துக்களை நிறுவுவதில் அவர் கைதேர்ந்தவர். அவர் ஆன்மிகவாதி மட்டுமல்ல. மிகச் சிறந்த உளவியல் நிபுணரும் கூட.
பூந்தேனில் கலந்து… பொன் வண்டு எழுந்து…
இசையமைப்பாளர் திரு. கே.வி.மகாதேவன் அவர்களின் இறுதிக் காலத்தில் இசை அமைத்த பாடம் ‘ஏணிப்படிகள்’. அதில் இடம் பெறும், ஒரே மெட்டில் அமைந்த, ஒரே பல்லவியுடன், இரு வகையான சரணங்களுடன் கூடிய இரு பாடல்கள் இங்கே…திரைக்கதையின் போக்கிற்கு ஏற்பவும், கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையிலும், ஆண்- பெண் ஆகியோரின் இருவேறு மனக் கற்பனைகளில் கவியரசர் எழுதிய வண்ண வரிகள் இதோ…
காயத்ரி மந்திரம்- 4
உலகம் முழுவதும் பரவ வேண்டிய அமுத மந்திரம் காயத்ரி என்பது சுவாமி சித்பவானந்தரின் உள்ளக் கிடக்கை. இதன் விரிவான விளக்கத்தை இந்த அத்தியாயத்தில் காணலாம்…
காயத்ரி மந்திரம்- 3
நமது அறிவை புடம் போட்ட தங்கமாக மாற்றும் சக்தி படைத்தது காயத்ரி மந்திரம். இதன் பொதுவான விளக்கத்தை இந்த அத்தியாயத்தில் சுவாமி சித்பவானந்தர் முன்வைக்கிறார்…
காயத்ரி மந்திரம்- 2
நம்முடைய தேசிய மந்திரமாக இருப்பது, தேசிய லட்சியமாக இருப்பது, மானுட வர்க்கத்துக்கே லட்சியமாக இருப்பது காயத்ரி மந்திரம். இதற்கு ஒவ்வொரு சொல்லாக விளக்கம் அளிக்கிறார் சுவாமி சித்பவானந்தர்…
காயத்ரி மந்திரம்- 1
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் நிறுவனரான பூஜ்யஸ்ரீ சுவாமி சித்பவானந்தர் (1920-1985), தமிழகத்தில் அண்மைக்காலத்தில் ஆன்மிகப்பயிர் வளர்த்த அருளாளர். பாரதத்தின் முதன்மை மந்திரமான காயத்ரி மந்திரம் குறித்த சுவாமிகளின் சிறிய நூல் (காயத்ரீ), இங்கு நான்கு பாகங்களாகக் கொடுக்கப்படுகிறது.
அகல் விளக்கு- 27
சிறிது பொறுத்து மறுபடியும் அதே போக்கில் பேசலானான். "நீ மண் அகலாக இருந்த காலத்தில் நான் பித்தளை அகலாக இருந்தேன். சிறிது காலம் பளபள என்று மின்னினேன். என் அழகையும் அறிவையும் அப்போது எல்லோரும் விரும்பினார்கள்; பாராட்டினார்கள். என்ன பயன்? வர வர, எண்ணெயும் கெட்டது, திரியும் கெட்டது. சிட்டமும் பிடித்தது. ஒளி மங்கியது. மங்கிவிட்டேன். நீதான் நேராகச் சுடர்விட்டு அமைதியாக எரியும் ஒளி விளக்கு" என்றான்.... மு.வ.வின் அகல் விளக்கு- நிறைவு....
அகல் விளக்கு- 26
“என்ன உலகம் இது? பெண்கள் இருவர் பழகினால், உடம்பைக் கடந்து உள்ளத்தின் உறவுகொண்டு பழகவில்லையா? நீங்கள் ஆண்கள் இருவர் பழகும்போதும் அப்படி உள்ளத்தால் பழகவில்லையா? ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பழகும்போது மட்டும் உள்ளம் இல்லையா? ஏன் இந்தத் தடுமாற்றம் ஏமாற்றம் எல்லாம்?" என்றாள். அந்த வினாவுக்கு விடையாக நான் ஒன்றும் கூறவில்லை. அவர் என்னிடம் விடை எதிர்பார்க்கவும் இல்லை. படைத்தவனையே கேட்ட வினாவாக இருந்தது அது....
அகல் விளக்கு- 25
தங்கையின் அறிவு நுட்பத்தையும் தெளிவையும் உணர்ந்து போற்றினேன். "சாரதாமணி கணவருடைய நெறிக்கே திரும்பிவிட்டார். அதனால் இராமகிருஷ்ணர் தம்முடைய உயர்ந்த தவத்திற்கும் துணையாக்கிக் கொண்டார். ஆனால் மீராவின் கணவன் அவ்வாறு திருந்தாதிருக்கலாம்; உயராதிருக்கலாம் தன் வழிக்கு வராத கணவனை வைத்துக்கொண்டு என்ன செய்வது?" என்றேன். என்ன விடை வரப்போகிறது என்ற ஆவலாலேயே விளையாட்டுப் போல் கேட்டேன்....
அகல் விளக்கு- 24
ஊருக்கு வந்ததும், தங்கையை ஏன் அழைத்து வரவில்லை என்ற கேள்வியைத்தான் முதலில் அம்மா கேட்டார். பிறகு தங்கையின் குடும்ப வாழ்க்கையைப் பற்றிக் கேட்டார். தையல் பொறி வாங்கும் முயற்சிக்கு நான் பண உதவி செய்யப்போவதைக் கூறியவுடன் அம்மாவின் முகத்தில் ஒரு தனி மகிழ்ச்சி ஏற்பட்டது.
அகல் விளக்கு- 23
"சே! என்ன பேச்சு இது! தெருவில் போகிற ஒருவன் அழகாக இருந்தால், அதனால் அவன்மேல் ஆசை தோன்றி விடுமா? நம் அம்மாவைவிட இன்னொருத்தி அழகாக இருந்தால் அவள்மேல் ஆசை வளருமா? அழகு குறைவாக இருந்தாலும் என்னைப் பெற்று வளர்த்தவள்தான் எனக்கு வேண்டும். அவள்தான் எனக்குத் தாய். அப்படித்தான் நீங்களும் எனக்கு."
அகல் விளக்கு- 21
சான்றோர்கள் நூற்றுக்கணக்காகப் பிறந்த நாடு, உயர்ந்த நூல்கள் பற்பல தோன்றிய நாடு, கோயில்களும் அறநிலையங்களும் மலிந்த நாடு என்று பெருமை பேசிக் கொள்கிறோம். தொன்றுதொட்டே இந்த நாடு ஒன்றுதான் பாரமார்த்த நாடு என்றும், மற்ற நாடுகள் இன்று வரையில் உலகாயதப் போக்கிலேயே உழன்று வருகின்றன என்றும் மற்ற நாடுகளைக் குறை கூறிப் பெருமை கொள்கிறோம். ஆனால், படித்த இளைஞர்களும் பண்புள்ள அழகிகளும் பணத்துக்காக விலைபோகும் கொடுமை வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மலிந்துள்ளதாகக் கூற முடியாது. திருமணக் காலங்களில் குடும்பங்களில் நடக்கும் பேச்சைச் செவி கொடுத்துக் கேட்டால் இந்த நாட்டிற்கு ஆத்மீகத் தொடர்பு மிகுதி என்று சொல்வதற்கு வாய் கூசும்.