இது ஒரு தவம்

சென்னை, சங்கர நேத்ராலயா மருத்துவக் குழுமத்தின் நிறுவனரும், பிரபல கண் மருத்துவ நிபுணருமான, பதம பூஷண் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் 21.11.2023 அன்று காலமானார். அவருக்கு நமது கண்ணீர் அஞ்சலி. இக்கட்டுரை, அவரது சீடரும் மருத்துவ சமூக சேவகருமான திரு. அ.போ.இருங்கோவேளால் எழுதப்பட்டது....

தமிழ்நாட்டு மாதருக்கு

குடும்ப வழக்கங்களாயினும் தேச வழக்கங்களாயினும் ஜாதி வழக்கங்களாயினும் அவற்றுள் முக்கியத்தன்மையுடையன எவை, இல்லாதனவை எவை என்ற ஞானம் நம்முடைய ஸ்திரீகளுக்கு ஏற்பட வேண்டுமாயின், அதற்குக் கல்வியைத் தவிர வேறு ஸாதனமில்லை. ஆண்களுக்கு ஸமானமான கல்வித் திறமை பெண்களுக்குப் பொதுப்படையாக ஏற்படும் வரை, ஆண் மக்கள் பெண்மக்களைத் தக்கபடி மதிக்க மாட்டார்கள்;  தாழ்வாகவே நடத்துவார்கள். தமிழ்நாட்டு ஸஹோதரிகளே! கணவன்மார், உடன் பிறந்தார், புத்திரர் முதலியவர்களால் நன்கு மதிக்கப்பெறாமல் இழிவாகக் கருதப்பட்டு உயிர் வாழ்வதைக் காட்டிலும் இறந்து விடுதல் நன்று.

பெண் விடுதலைக்கு தமிழ்ப் பெண்கள் செய்யத் தக்கது யாது?

புதுச்சேரியில் ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதியின் குமாரி ஸ்ரீ தங்கம்மாவால் ஒரு பெண்கள் கூட்டத்தில் படிக்கப் பெற்ற கட்டுரை இது...

பெண் விடுதலை- 2

நமது பெண்களுக்கு ஆரம்பப்படிகள் காட்டினோமானால், பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரண விடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றுவார்கள். அப்போதுதான் நமது தேசத்துப் பூர்வீக ரிஷி பத்தினிகள் இருந்த ஸ்திதிக்கு நமது ஸ்திரீகள் வர இடமுண்டாகும். ஸ்திரீகளை மிருகங்களாக வைத்து நாம் மாத்திரம் மஹரிஷிகளாக முயலுதல் மூடத்தனம். பெண் உயராவிட்டால் ஆண் உயராது.

பெண் விடுதலை- 1

இதைக் கேட்டவுடன் ராமராயர்,  “நான் வீட்டுக்குப் போய்விட்டு வருகிறேன்” என்று சொல்லி எழுந்து நின்றார். நான் இரண்டு கட்சியையும் சமாதானம் பண்ணிக் கடைசியாக வேதவல்லியம்மை பொதுப்படையாக ஆண் பிள்ளைகளை எவ்வளவு கண்டித்துப் பேசியபோதிலும் ராமராயரைச் சுட்டிக் காட்டி ஒரு வார்த்தையும் சொல்லக் கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டோம்.

பெண்

''ஹிந்துக்கள் முற்காலத்தில் நல்ல மேதாவிகளாக இருந்தனர். இன்னும் அதிசீக்கிரத்தில் மேலான நிலைமைக்கு வரப் போகிறார்கள். ஆனால், இந்தத் தேதியில், பண்டிதர்களாக வெளிப்பட்டு பிரஸங்கங்களும், கதைகளும், காலக்ஷேபங்களும் நடத்தும் ஹிந்துக்களிலே நூற்றுக்குத் தொண்ணூறு பேர் சமையல் வேலைக்குப் போக வேண்டியவர்கள். அதை விட்டு உலகத்துக்கு ஞானோபதேசம் பண்ணக் கிளம்பிவிட்டார்கள். இதுபெரிய தொல்லை, உபத்திரவம், தொந்திரவு, கஷ்டம், ஸங்கடம், ஹிம்ஸை, தலைநோவு. இந்தத் தேதியில், ஹிந்து ஜாதி முழுமூடமாக இருக்கிறது. நம்மவர்கள் மூளைக்குள்ளே கரையான் பிடித்திருக்கிறது. எனக்கு ஹிந்துக்களின் புத்தியை நினைக்கும்போது வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. படகோனியா தேசத்தில் கூட சராசரி நூற்றுக்கு இத்தனை பேர் மூடர்களாக இருப்பார்களென்று தோன்றவில்லை”....

கொள்கைக்கும் செய்கைக்குமுள்ள தூரம்

ஒரு கொள்கை என்பதென்ன? இதை நாம் ஆராய்ந்து அறிவது அவசியம். ஏனெனில், கொள்கையின்றிக் காரியங்களைச் செய்து திரியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள். பகுத்தறியும் சக்தி இல்லாத எவனுக்கும் கொள்கையென்று ஒன்று இருக்காது. ஒரு கொள்கையை யுடையவன் பகுத்தறியும் சக்தி உடையவனாகவே இருக்க வேண்டும்.

சநாதன தர்மமே சங்கரர் தரும் நெறி

எதற்கும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும்; அதுவே நல்லதும்கூட. எதிர்ப்பு இருந்தால்தான் நம் நிறை குறை சரியாக வெளியாகும். நம்மை ரக்ஷித்துக் கொள்வதில் விழிப்பும் இருக்கும். ஆனால் எதிர்ப்பு என்கிற பெயரில் இல்லாத கெடுதல்களைச் சொல்லி, நல்லதைத் தூக்கில் போடக் கூடாது. (சநாதனம் குறித்து காஞ்சி பரமாச்சாரியாரின் அருளுரை)...

காயத்ரி மந்திரம்- 4

உலகம் முழுவதும் பரவ வேண்டிய அமுத மந்திரம் காயத்ரி என்பது சுவாமி சித்பவானந்தரின் உள்ளக் கிடக்கை. இதன் விரிவான விளக்கத்தை இந்த அத்தியாயத்தில் காணலாம்…

புராணங்கள்

நமது வேதங்களிலும் புராணங்களிலும் கூறியிருப்பனவற்றை விட எல்லாம் அறிந்தவர்களாக, அதீத ஞானம் வாய்ந்தவர்களாக, இப்போது மட்டுமல்ல, எப்போதும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். அவர்களுக்காகவே மகாகவி பாரதி எழுதிய அற்புதமான கட்டுரை இது. “ஹிந்துக்களே, பிளவுண்டு மடியாதீர்கள்! வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழி தேடுங்கள்!” என்று எச்சரிக்கிறார் மகாகவி...

காயத்ரி மந்திரம்- 3

நமது அறிவை புடம் போட்ட தங்கமாக மாற்றும் சக்தி படைத்தது காயத்ரி மந்திரம். இதன் பொதுவான விளக்கத்தை இந்த அத்தியாயத்தில் சுவாமி சித்பவானந்தர் முன்வைக்கிறார்…

புத்தொளியில் நீதிமன்றங்கள்

2014 முதல் மத்தியில் ஆட்சியில் இருந்துவரும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நீதித்துறை அத்துமீறிச் செயல்பட்டாலும் எவ்வாறு பொறுமையுடன் செயல்படுகிறது என்பதை முந்தைய அனுபவங்களுடன் ஒப்பிடுகிறார் கட்டுரையாளர்....

காயத்ரி மந்திரம்- 2

நம்முடைய தேசிய மந்திரமாக இருப்பது, தேசிய லட்சியமாக இருப்பது, மானுட வர்க்கத்துக்கே லட்சியமாக இருப்பது காயத்ரி மந்திரம். இதற்கு ஒவ்வொரு சொல்லாக விளக்கம் அளிக்கிறார் சுவாமி சித்பவானந்தர்…

உழைப்பு

உழைப்பே உயர்வு தரும் என்று சொல்ல வந்த மகாகவி பாரதி, இந்தக் கட்டுரையின் இறுதியில் 4 வெண்பாக்களையும் இயற்றி வழங்கி இருக்கிறார். இவை பாரதியின் புதிய பாடல்களில் இடம் பெறுபவை.

‘கங்கா ஸ்நானம் ஆயிற்றா?’

ஒவ்வொரு ஹிந்துவும் ராமேஸ்வரத்தில், சேதுமாதவர் என்று சொல்லப்படுகிற பெருமாள் முன்பு தனுஷ்கோடி, ராமேஸ்வரம் மணலை எடுத்து பூஜித்து, யாத்திரை செய்து, அலஹாபாத்தில் சுத்த கங்கையில் வேணி மாதவன் சந்நிதியில் பூஜித்து, உடன் எடுத்து வந்த மணலை சுத்த கங்கையில் விட்டுவிட வேண்டும். அங்கிருந்து சுத்த கங்கையை எடுத்து ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து பூஜிக்க வேண்டும். (காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தீபாவளி ஆசியுரை...)