புதுவையில் பூத்த யோக மலர்- 17

“விடுதலைக்குப் பிறகு நம் நாடு பல பிரச்சினைகளைச் சந்திக்கும். அதிலிருந்து மீண்டு வருவோம். தொழில்துறையில், வர்த்தகத்தில், ராணுவத் துறையில், அரசியல் களத்தில் அது மற்ற நாடுகளைப் போல மகத்தான முன்னேற்றத்தை நிகழ்த்தும். ஆனால் இந்த லௌகீக முன்னேற்றத்திற்காக தனது ஆன்மாவை - ஸ்வதர்மத்தை – இழக்கக் கூடாது. இழப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வாறு இழந்தால் அது நம் நாட்டிற்கு மட்டுமல்ல, உலகிற்கே பெரும் இழப்பாகும். எனவே எப்பாடுபட்டாவது இந்தியாவின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்கு புறவுலக முன்னேற்றம் மட்டுமல்ல அகத்திலும் (மனத்திலும்) முன்னேற்றமும் வலிமையும் பெறவேண்டும்”