திருப்பரங்குன்றம்: வெற்றி வரலாறு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் டிச.3-இல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை  டிச. 1ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. அதனை எதிர்த்து மாநில அரசு செய்த மேல் முறையீட்டையும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்து விட்டது. எனவே திருப்பரங்குன்றம் மலையுச்சியில் கார்த்திகை தீபத்தை இன்று கோயில் நிர்வாகம் ஏற்றியாக வேண்டும். இந்து மக்களின் தொடர் போராட்டம் வெல்லும் இந்த இனிய தருணத்தில், இதுதொடர்பாக நமது தளத்தில் வெளியான முருக பக்தர்கள் மாநாடு, நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்த பிற பதிவுகளையும், திருப்பரங்குன்றம் திருக்கோயில் உரிமை மீட்புப் போராட்டம் குறித்து இந்து முன்னணியின் மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான திரு. கா.குற்றாலநாதன் எழுதியுள்ள நூலையும் இங்கே தொகுத்துள்ளோம்.