வேணு முதலி விசித்திரம்‌

வேணு முதலி என்ற ஒருவரைப்‌ பற்றி முந்தைய கதையில்‌ பாரதி குறிப்பிடுகிறார்‌. இந்த வேணு முதலியின்‌ ஞானானுபவங்‌களைப்‌ பற்றியது இந்தக்‌ கதையும்‌. வேதபுரமென்பது புதுவையின்‌ பெயர்‌. இக்‌ கதையும்‌ முதலில்‌ ௬தேசமித்திரனிலும்‌, பிறகு 1920-ஆம்‌ ஆண்டு நவம்பர்‌ மாதம்‌ மித்திரன்‌ காரியாலயம்‌ வெளியிட்ட ‘கதாமாலிகா’ என்ற நூலிலும்‌ பிரசுரமாயிற்று.