சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து ஒருசிலரால் அவதூறுகள் கற்பிக்கப்படுகின்றன. அரசியல் களத்தில் சிலரின் தூக்கத்தை இவரது தீர்ப்புகள் கெடுத்ததன் விளைவு தான் இது என்பது நீதிமன்றத்தில் நிற்கும் எவருக்கும் தெரியும். ஆனால், தன்னைத் தானே விளக்கிக்கொள்ள சட்டத்தில் நீதிபதிக்கு இடமில்லை என்பதாலும், தமிழகத்தில் தீண்டத் தகாத ஜாதியான பிராமணராக அவர் அடையாளப்படுத்தப்படுவதாலும், பொதுத்தளத்தில் அநியாயக் குரல்களே ஆரோகணிக்கின்றன. இத்தருணத்தில் எழுத்தாளர் திரு. சோ.தருமன், கவிஞர் திரு. ரவி.சுப்பிரமணியன் ஆகியோரின் குரல்கள் தமிழர்களின் மனசாட்சியாக ஒலிக்கின்றன. இதோ கவிஞரின் அறச்சீற்றம் மிகுந்த எழுத்தோவியம்…