நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்

...நம்முடைய ஸ்திரீகளின் நிலைமையை நவீன ருஷ்யாவில் ஸ்திரீகளின் விஷயமாக ஏற்பட்டிருக்கும் சட்டங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போதுதான் நம்மை ஐரோப்பிய நாகரீகம் எந்த சக்தியினாலே கீழே வீழ்த்திற்று என்பதும், எந்த அம்சங்களில் நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் வழியைப் பின்பற்றத் தகும் என்பதும் தெளிவுறப் புலப்படும்....

பெண்கள் ஸம்பாஷணைக் கூட்டம்

பெண்ணுரிமைக்கான கூட்டம் நிகழ்வதையும் கூட செய்தியாக்கி மகிழும் இதழாளர் பாரதியை இங்கே நாம் தரிசிக்கிறோம். அது மட்டுமல்ல, தனது புதல்வி தங்கம்மாளைக் கொண்டு, சீனப் பெண் புரட்சியாளர் (சியூ சீன்) தொடர்பாக வெளிநாட்டுப் பத்திரிகையில் வெளியான விவரத்தை தமிழாக்கிப் படிக்க வைத்திருக்கும் பாரதியின் தீவிர உணர்வு கவனித்தற்பாலது. மேலும், சியூ சீன் எழுதிய புரட்சிக் கவிதையைத் தமிழாக்கி தனது புதல்வியையே வாசிக்கச் செய்திருப்பது, அவரது பெண்ணுரிமை தாகத்தைக் காட்டுகிறது....

தமிழ்நாட்டு நாகரீகம்

...ஔவையின் நூலோ மிகத் தெளிந்த, மிக எளிய தமிழ்நடையில் எல்லா ஜனங்களுக்கும் பொருள் விளங்கும்படியாக எழுதப்பட்டிருக்கின்றது. ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ என்பது கவிதைத் தொழிலில் மிகவும் உயர்ந்த தொழில். இதில் ஔவை ஒப்பற்றவள். இத்துடன் மிகவும் அருமையான நுட்பமான விஷயங்களை யாவருக்கும் அர்த்தமாகும்படி மிகவும் எளிய நடையில் சொல்வதாகிய அற்புதத் தொழிலை உயர்ந்த கவியரசர்களே தெய்வீகத் தொழில் என்றும் தெய்வசக்தி பெறாத சாதாரணக் கவிகளுக்கு சாத்தியப்படாத தொழில் என்றும் கருதுகிறார்கள். இந்த அற்புதத் தொழிலிலும் ஔவை நிகரற்ற திறமை வாய்ந்தவள்....

தமிழ்நாட்டு மாதருக்கு

குடும்ப வழக்கங்களாயினும் தேச வழக்கங்களாயினும் ஜாதி வழக்கங்களாயினும் அவற்றுள் முக்கியத்தன்மையுடையன எவை, இல்லாதனவை எவை என்ற ஞானம் நம்முடைய ஸ்திரீகளுக்கு ஏற்பட வேண்டுமாயின், அதற்குக் கல்வியைத் தவிர வேறு ஸாதனமில்லை. ஆண்களுக்கு ஸமானமான கல்வித் திறமை பெண்களுக்குப் பொதுப்படையாக ஏற்படும் வரை, ஆண் மக்கள் பெண்மக்களைத் தக்கபடி மதிக்க மாட்டார்கள்;  தாழ்வாகவே நடத்துவார்கள். தமிழ்நாட்டு ஸஹோதரிகளே! கணவன்மார், உடன் பிறந்தார், புத்திரர் முதலியவர்களால் நன்கு மதிக்கப்பெறாமல் இழிவாகக் கருதப்பட்டு உயிர் வாழ்வதைக் காட்டிலும் இறந்து விடுதல் நன்று.

பெண் விடுதலைக்கு தமிழ்ப் பெண்கள் செய்யத் தக்கது யாது?

புதுச்சேரியில் ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதியின் குமாரி ஸ்ரீ தங்கம்மாவால் ஒரு பெண்கள் கூட்டத்தில் படிக்கப் பெற்ற கட்டுரை இது...

பெண் விடுதலை- 2

நமது பெண்களுக்கு ஆரம்பப்படிகள் காட்டினோமானால், பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரண விடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றுவார்கள். அப்போதுதான் நமது தேசத்துப் பூர்வீக ரிஷி பத்தினிகள் இருந்த ஸ்திதிக்கு நமது ஸ்திரீகள் வர இடமுண்டாகும். ஸ்திரீகளை மிருகங்களாக வைத்து நாம் மாத்திரம் மஹரிஷிகளாக முயலுதல் மூடத்தனம். பெண் உயராவிட்டால் ஆண் உயராது.

பெண் விடுதலை- 1

இதைக் கேட்டவுடன் ராமராயர்,  “நான் வீட்டுக்குப் போய்விட்டு வருகிறேன்” என்று சொல்லி எழுந்து நின்றார். நான் இரண்டு கட்சியையும் சமாதானம் பண்ணிக் கடைசியாக வேதவல்லியம்மை பொதுப்படையாக ஆண் பிள்ளைகளை எவ்வளவு கண்டித்துப் பேசியபோதிலும் ராமராயரைச் சுட்டிக் காட்டி ஒரு வார்த்தையும் சொல்லக் கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டோம்.

பெண்

''ஹிந்துக்கள் முற்காலத்தில் நல்ல மேதாவிகளாக இருந்தனர். இன்னும் அதிசீக்கிரத்தில் மேலான நிலைமைக்கு வரப் போகிறார்கள். ஆனால், இந்தத் தேதியில், பண்டிதர்களாக வெளிப்பட்டு பிரஸங்கங்களும், கதைகளும், காலக்ஷேபங்களும் நடத்தும் ஹிந்துக்களிலே நூற்றுக்குத் தொண்ணூறு பேர் சமையல் வேலைக்குப் போக வேண்டியவர்கள். அதை விட்டு உலகத்துக்கு ஞானோபதேசம் பண்ணக் கிளம்பிவிட்டார்கள். இதுபெரிய தொல்லை, உபத்திரவம், தொந்திரவு, கஷ்டம், ஸங்கடம், ஹிம்ஸை, தலைநோவு. இந்தத் தேதியில், ஹிந்து ஜாதி முழுமூடமாக இருக்கிறது. நம்மவர்கள் மூளைக்குள்ளே கரையான் பிடித்திருக்கிறது. எனக்கு ஹிந்துக்களின் புத்தியை நினைக்கும்போது வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. படகோனியா தேசத்தில் கூட சராசரி நூற்றுக்கு இத்தனை பேர் மூடர்களாக இருப்பார்களென்று தோன்றவில்லை”....

புராணங்கள்

நமது வேதங்களிலும் புராணங்களிலும் கூறியிருப்பனவற்றை விட எல்லாம் அறிந்தவர்களாக, அதீத ஞானம் வாய்ந்தவர்களாக, இப்போது மட்டுமல்ல, எப்போதும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். அவர்களுக்காகவே மகாகவி பாரதி எழுதிய அற்புதமான கட்டுரை இது. “ஹிந்துக்களே, பிளவுண்டு மடியாதீர்கள்! வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழி தேடுங்கள்!” என்று எச்சரிக்கிறார் மகாகவி...

உழைப்பு

உழைப்பே உயர்வு தரும் என்று சொல்ல வந்த மகாகவி பாரதி, இந்தக் கட்டுரையின் இறுதியில் 4 வெண்பாக்களையும் இயற்றி வழங்கி இருக்கிறார். இவை பாரதியின் புதிய பாடல்களில் இடம் பெறுபவை.

உலக வாழ்க்கையின் பயன்

நாயைக் குளிப்பாட்டி நல்ல உணவளித்து நடு வீட்டில் வைத்தால் அது மறுபடியும் அசுத்த உணவு விரும்பி வாலைக் குழைத்துக்கொண்டு ஓடத்தான் செய்கிறது. எத்தனை புதிய இன்பங்களைக் காட்டிய போதிலும், மனம் அவற்றில் நிலைபெறாமல், மீண்டும் ஏதேனும் ஒரு துன்பக் குழியிலே கண்ணைத் திறந்து கொண்டுபோய் விழுந்து தத்தளிக்கத் தொடங்குகிறது.

புனர்ஜன்மம் (2)

மிருகங்களைப் போன்ற மனிதர்களை நாம் பார்த்ததில்லையா? நம்மை நாம் கவனிக்குமிடத்து, எத்தனை விதமான மிருகங்களாயிருந்திருக்கிறோம் என்பது தெரியும்.

லோக குரு

ரவீந்திர கவியின் உபந்யாஸத்தை ஜப்பான் தேசத்தார் மிகவும் பக்தியுடன் கொண்டாடுகிறார்கள். பத்திரிகைகள் உயர்ந்த புகழ்ச்சி பேசுகின்றன. நல்ல காரியம் செய்தார். இப்படியே இங்கிலாந்து முதலிய எல்லாத் தேசங்களிலும் போய், பாரத தேசத்தின் அறிவு மஹிமையை மற்றொரு முறை விளக்கி வரும்படி புறப்பட்டிருக்கிறார் போலும்.

இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை

20-6-20, ஞாயிற்றுக்கிழமை மாலையில், பொட்டல் புதூரிலே தெற்குப் புது மனைத் தெருவில், எல்லா வகைகளிலும் பெருமை பொருந்திய ஒரு முஸ்லீம் ஸபையின் முன்னே, ‘இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை’ என்ற விஷயத்தைக் குறித்து ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி செய்த பிரசங்கத்தின் ஸாரம் இது...

யேசு கிருஸ்துவின் வார்த்தை

தெய்வமில்லை என்று எந்தத் தவறு செய்தாவது பணந் தேடுவோர் பணத்தையே தெய்வமென்று கொண்டோர். இவ்வினத்தார் எல்லாத் தேசங்களிலும் இருக்கிறார்கள். இவர்கள் மனத்திலே தம்மை மேதாவிகளாக நினைத்திருக்கிறார்கள். இவர்களுடைய மேதாவித் தனம் மடத்தனம். 'தெய்வத்தை நம்பி, எப்போதும் உண்மை சொல்ல வேண்டும்; பயப்படக் கூடாது. எது நியாயமென்று தோன்றுகிறதோ, அதை அச்சமில்லாமல் செய்து முடிக்க வேண்டும்' என்று காந்தி சொல்வதை நான் வேதவாக்காக ஒப்புக் கொள்ளுகிறேன்.