சென்னை வெள்ளம்: சில சிந்தனைகள்-2

‘மிக்ஜம்’ புயலால் சென்னை மாநகரமும், புறநகர்ப் பகுதிகளும் சீரழிந்து கிடக்கின்றன. புயல் கடந்து, மழை நின்று நான்கு நாட்களாகியும், இன்னமும் பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை; சென்னையில் வாழும் மக்கள் பரிதவிக்கிறார்கள். அரசுக்காகக் காத்திருப்பதால் பயனில்லை என்பதை உணர்ந்து, மூன்று நாள் பட்டினி இருந்த களைப்புடன் வீடுகளைக் காலி செய்துவிட்டு வெளியேறும் மக்களைக் காண்கையில் வேதனையாக இருக்கிறது. இதற்கு யார் காரணம், என்ன தான் தீர்வு? இங்கு சில சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன…. (பகுதி-2)