‘பொது சிவில் சட்டத்திற்கு’ ஆதரவாக டாக்டர் அம்பேத்கரும், நீதிமன்றங்களும் கூறியதையே, மேற்கண்ட வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்தும் வழிமொழிந்துள்ளார். ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்னும் இலக்கை நோக்கி நாடு முன்னேறவும், டாக்டர் அம்பேத்கர் கனவை நனவாக்கவும், பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயமாகும்.
Tag: ஜனனி ரமேஷ்
நீதிபதி பதவி நீக்கம் சாத்தியமா?
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நீதிபதி திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களை பதவிநீக்கம் செய்யுமாறு கோரி நாடாளுமன்றத்தில் இண்டி கூட்டணி எம்.பி.க்கள் 107 பேர் அறிவிக்கை அளித்துள்ளது அனைவரும் அறிந்ததே. திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் அநீதியை நிலைநாட்டத் துடிக்கும் தமிழக அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்தவர் என்பதால்தான் திரு. ஜி.ஆர்.எஸ்.ஸை இண்டி கூட்டணி எதிர்க்கிறது. இந்நிலையில் நீதிபதி பதவிநீக்கம் எளிதல்ல என்கிறார் எழுத்தாளர் திரு. ஜனனி ரமேஷ்…
இந்தியா ‘வளர்ந்த’ பொருளாதாரம் தான்!
மிக விரைவில் உலகின் 3ஆவது மிகப் பெரிய பொருளாதார வல்லரசு நாடாக உருவெடுக்கப் போகும் இந்தியாவை, ‘இறந்த பொருளாதாரம்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சிப்பதை வயிற்றெரிச்சல் என ஒதுக்கி விடலாம். ஆனால், பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் அவரை வழிமொழிவதையும், உண்மை எனப் பாராட்டுவதையும், என்னவென்று சொல்ல?