‘குடியுரிமைச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை’

சில ஆண்டுகளுக்கு முன்பு இச்சட்டம் குறித்து பாஜக (முன்னாள்) எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி விளக்கிப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சுப்பிரமணியன் சுவாமி கூறி இருப்பதாவது:

இதயம்  கூடவா இல்லை?

CAA, மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானவர்களை விரைவுக்கரம் நீட்டி ஆறுதல் தருகிறது. ஏனென்றால் மத ரீதியான துன்புறுத்தல், மானமுள்ள மனிதரின்  கால்களில் தார் ஊற்றுவது போல. எங்கும் நகர விடாது, எதையும் விருப்பத்துக்கு செய்ய விடாது. அதற்கு ஆறுதல் தரும் மருந்து CAA.

சி.ஏ.ஏ.: மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை

சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான விதிமுறையில், குடியுரிமை கோரும் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பது மற்றும் அதன்மீது இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசு அதிகாரிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் தஞ்சமடைந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கும் மத்திய அரசின் முடிவை மாநில அரசுகள் தடுப்பதற்கான வாய்ப்பே இல்லை.

நடைமுறைக்கு வந்தது குடியுரிமை திருத்தச் சட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 நாடு முழுவதும் 2024 மார்ச் 11ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலமாக, மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டு அகதிகளாக இந்தியா வந்தபோதும், பல்லாண்டுகளாக இந்தியக் குடியுரிமை பெற முடியாமல் ஏங்கித் தவித்த லட்சக் கணக்கான மக்கள் பயன் பெற வாய்ப்புக் கிடைத்துள்ளது.

குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்- 7

இஸ்லாமிய நாடுகளிலிருந்து தப்பிவந்த அகதிகளின் மறுவாழ்வுக்காக நரேந்திர மோடி அரசு கொண்டு வந்திருப்பதுதான் 2019ஆம் வருடத்திய குடியுரிமை திருத்தச் சட்டம். அந்த அகதிகள் கோருவது சுயமரியாதையுடன் வாழ்வதற்கான குடியுரிமை மட்டுமே. அவர்கள் நமது பூர்வீக குடிமக்களும் கூட. அவர்களுக்கான உரிமையை அளிக்கிறது நாட்டு மக்களின் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசு. அதனைத் தடுக்கவோ, குறை கூறவோ, கண்டிக்கவோ எவருக்கும் உரிமை இல்லை.

குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்- 6

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்த சட்ட மசோதா-2019க்கு டிச. 12இல் ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். அதையடுத்து அன்றே இந்த சட்டம் (CAA) அமலாகி விட்டது. தற்போது, இந்தச் சட்டமானது, மக்களால் மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகிவிட்டது. இதை மீறுவதும், விமர்சிப்பதும் ஜனநாயகத்தையே அவமதிப்பதாகும்.

குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்- 5

பிரிக்கப்படாத பாரதத்தில் அன்று நாடு முழுவதும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் விகிதாச்சார பரப்பளவு நிர்ணயிக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. அந்த நாடு தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால், இந்தியாவில் இருந்த கோடிக்கணக்கான முஸ்லிம்கள் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. எனவே, முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்கலாம் என்றும், இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கும் என்றும் இந்திய அரசு அறிவித்தது....

குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்- 4

இதுவரை ஆறுமுறை திருத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது இந்திய குடியுரிமை சட்டம். ஆறாவது திருத்தம் தான் மூன்று இஸ்லாமிய நாடுகளிலிருந்து தப்பி வந்த அகதிகளின் நிலைக்காக வருந்தி இருக்கிறது. இதனை மதச்சார்பின்மை பேசும் சிலரால் ஏற்க முடியவில்லை. அவர்கள், இதனை சட்டப்பூர்வமானதல்ல என்றும், மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும் பிரசாரம் செய்து வருகிறார்கள். உண்மை என்ன?

குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம் – 3ஆ

நாடு முழுவதும் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, 15வது மக்கள்தொகை கனக்கெடுப்பு (2010-11) எடுக்கப்பட்டது. அப்போது சில தகவல்களையும் கூடுதலாக அரசு திரட்டியது. அதன் அடிப்படையில் தேசிய மக்கள்தொகை பதிவேடு 2010இல் உருவாக்கப்பட்டது. National Population Register- NPR என்பதே இந்தப் பதிவேடு ஆகும். அதாவது இந்தப் பதிவேடு இந்நாட்டின் குறிப்பிட்ட பகுதியில் 6 மாதங்களுக்கு மேலாக வசிக்கும், அடுத்த 6 மாதங்கள் வசிக்கப் போகிற மக்களின்  பட்டியலாகும். 2015இல் இப்பதிவேடு புதுப்பிக்கப்பட்டது.

குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம் – 3அ

இதுவரை நமது உண்மையான குடிமகன்களின் எந்த விவரமும் அரசிடம் தெளிவாக இல்லை. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே அரசின் ஆதாரமாக உள்ளது. இதுவரையிலான பிழைகளைச் சரிசெய்ய வேண்டுமானால், இனியேனும் தே.கு.பதிவேடு தயாரிக்கப்பட வேண்டும். இப்போது ஏதேனும் ஒரு அடையாள அட்டை உள்ள அனைவரும் இதில் சேர முடியும். இனிவரும் நாட்களில், புதிய பதிவேடு தயாரான பிறகு மக்களைக் கண்காணிப்பதும், அவர்களுக்கான நலத் திட்டங்களைத் தீட்டுவதும் அரசுக்கு சுலபமாக இருக்கும்.

குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம் – 2

‘உண்மை வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன் பொய் ஊரைச் சுற்றி வந்து விடும்’ என்ற பழமொழி உண்டு. அது முற்றிலும் உண்மை என்பதைத்தான், அண்மையில் (டிசம்பர் 2019) நாட்டின் பல பகுதிகளில் எதிர்க்கட்சிகளும் வன்முறையாளர்களும் இணைந்து நடத்திய கலவரங்கள் காட்டுகின்றன....

குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம் – 1

இதற்கு முந்தைய குடியுரிமைத் திருத்தச் சட்டங்கள் குடியுரிமையின் வேறு பல சிக்கலான பரிணாமங்களை அணுகின. ஆயினும், நாட்டில் இதுவரை முழுமையாக குடிமக்களாக அங்கீகரிக்கப்படாமல் இருக்கும் அகதிகளை என்ன செய்வது என்பதில் தெளிவான திசை காட்டப்படவில்லை. அந்தக் குறைபாட்டைப் போக்க நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சியால் உருவானதே குடியுரிமைத் திருத்தச் சட்டம்-2019.

குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்

விதமாக, எழுத்தாளர் திரு. சேக்கிழான் எழுதிய நூல், ‘குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்’ . இந்நூலின் பகுதிகள் இங்கே தொடராக வெளியாகின்றன...