காற்றிடைச் சாளரம் -2

-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம் பிறந்த போதே தொப்புள் தழும்பு போல ஒட்டிக்கொண்டது காலம்.  . துயிலெழவும் துயில்கொள்ளவும் உணவுண்ணவும் கழிவு நீக்கவும் கற்றறியவும் கலை புரியவும் என ஒவ்வொன்றுக்கும்  உடனிருந்தது காலம். . காலம் பார்த்து கல்வி  காலம் பார்த்து காரியம்  காலம் பார்த்து உணவு காலம் பார்த்து உறவு காலம் பார்த்து பிரிவு  கலவியிலும் நுழையும் காலம்.  காலம்... காலம்... காலம். . பரமனின் கரத்திலொட்டிய  பிரம்மனின் கபாலமாய்  மனதிலொட்டிய காலத்தை  சுமந்தலைகிறது வாழ்வு. . வேறு … Continue reading காற்றிடைச் சாளரம் -2

காற்றிடைச் சாளரம் -1

திருப்பூரில் வசிக்கும் கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம், பின்னலாடை சார்ந்த உபதொழிலில் ஈடுபடுபவர். ஆரம்பக்காலத்தில் இடதுசாரியாக இருந்தவர்; பல சிற்றிதழ்களில் பங்கேற்றவர். எளிமையான, கவித்துவம் மிக்க கவிதைகள் இவரது சிறப்பு. இவரது கவிதைகள் இனி நமது தளத்தில் தொடர்ந்து வெளியாகும். இது இவரது ‘காற்றிடைச் சாளரம்’ கவிதைத் தொடரின் முதல் கவிதை....