சமூகத்தை எதிர்கொள்வது எப்படி என்று யாரும் நமக்கு கற்றுத் தருவதில்லை. அப்படி சரியாகக் கற்றுக் கொள்ளவும் இயலாது. நாமே கற்றுக் கற்றுத் தெளிய வேண்டிய பாடம் இது. கடைசிவரையில் கற்றுக்கொண்டே இருக்க வேண்டிய பாடமும் கூட. கோட்பாடுகள் வழியே, கொள்கைகள் வழியே, அரசியல் சார்புநிலைகளின் வழியே இதன் பாதை துலங்குவதில்லை. வாழ்வதன் மூலமாக மட்டுமே இதன் புகைமூட்டங்கள் அகலும்.