குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 நாடு முழுவதும் 2024 மார்ச் 11ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலமாக, மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டு அகதிகளாக இந்தியா வந்தபோதும், பல்லாண்டுகளாக இந்தியக் குடியுரிமை பெற முடியாமல் ஏங்கித் தவித்த லட்சக் கணக்கான மக்கள் பயன் பெற வாய்ப்புக் கிடைத்துள்ளது.
Day: March 12, 2024
வாழ்ந்து வழிகாட்டிய மகாத்மா புலே
1954-இல் டாக்டர் அம்பேத்கர், மகாத்மா புலேவின் வாழ்க்கை வரலாற்றை தான் எழுத விரும்புவதாக, தனஞ்செய் கீரிடம் தெரிவித்துள்ளார். தனஞ்செய் கீர் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். டாக்டர் அம்பேத்கர் அவ்வாறு கூறக் காரணம், மகாராஷ்டிர மாநிலத்தில் அரிஜனங்களுக்காகவும் பெண்களுக்காகவும் முதன்முதலில் பள்ளிக்கூடம் துவங்கி, சமூகப் புரட்சிக்கு, மாற்றத்துக்கு வித்திட்டவர் அவர்.