‘சங்கி’ யார் என்பது குறித்து சமூக ஊடகங்களில் தீவிரமான பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. அது ஏதோ கெட்ட வார்த்தை போல தமிழகத்தில் சிலர் ஏளனமாக எழுதுகிறார்கள். அவர்களுக்கு பதில் அளிக்கும், இரு சங்கிகளின் கவிதைகள் இவை….
Month: January 2024
குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்- 7
இஸ்லாமிய நாடுகளிலிருந்து தப்பிவந்த அகதிகளின் மறுவாழ்வுக்காக நரேந்திர மோடி அரசு கொண்டு வந்திருப்பதுதான் 2019ஆம் வருடத்திய குடியுரிமை திருத்தச் சட்டம். அந்த அகதிகள் கோருவது சுயமரியாதையுடன் வாழ்வதற்கான குடியுரிமை மட்டுமே. அவர்கள் நமது பூர்வீக குடிமக்களும் கூட. அவர்களுக்கான உரிமையை அளிக்கிறது நாட்டு மக்களின் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசு. அதனைத் தடுக்கவோ, குறை கூறவோ, கண்டிக்கவோ எவருக்கும் உரிமை இல்லை.
குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்- 6
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்த சட்ட மசோதா-2019க்கு டிச. 12இல் ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். அதையடுத்து அன்றே இந்த சட்டம் (CAA) அமலாகி விட்டது. தற்போது, இந்தச் சட்டமானது, மக்களால் மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகிவிட்டது. இதை மீறுவதும், விமர்சிப்பதும் ஜனநாயகத்தையே அவமதிப்பதாகும்.
மேற்கத்திய விஞ்ஞானிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வேதங்கள்
இன்று குவாண்டம் இயற்பியலில் நாம் காணுபவை புதியவை அல்ல. சில விஷயங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை; அடிப்படை தத்துவ தரிசனங்களில் இருந்து முளைத்து வந்தவை. சிந்தனைக்கு/ நினைவுகளுக்கு நிறை உண்டு, பிரபஞ்சம் நிலையானது, பிரபஞ்ச அறிவும் விழிப்புணர்வும் இல்லாமல் உயிர்கள் தோன்றாது என்பனவெல்லாம் பாரதத்தில் அல்லது புராதன இந்தியாவில் தோன்றிய கருத்துகள்.
குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்- 5
பிரிக்கப்படாத பாரதத்தில் அன்று நாடு முழுவதும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் விகிதாச்சார பரப்பளவு நிர்ணயிக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. அந்த நாடு தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால், இந்தியாவில் இருந்த கோடிக்கணக்கான முஸ்லிம்கள் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. எனவே, முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்கலாம் என்றும், இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கும் என்றும் இந்திய அரசு அறிவித்தது....
குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்- 4
இதுவரை ஆறுமுறை திருத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது இந்திய குடியுரிமை சட்டம். ஆறாவது திருத்தம் தான் மூன்று இஸ்லாமிய நாடுகளிலிருந்து தப்பி வந்த அகதிகளின் நிலைக்காக வருந்தி இருக்கிறது. இதனை மதச்சார்பின்மை பேசும் சிலரால் ஏற்க முடியவில்லை. அவர்கள், இதனை சட்டப்பூர்வமானதல்ல என்றும், மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும் பிரசாரம் செய்து வருகிறார்கள். உண்மை என்ன?
குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம் – 3ஆ
நாடு முழுவதும் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, 15வது மக்கள்தொகை கனக்கெடுப்பு (2010-11) எடுக்கப்பட்டது. அப்போது சில தகவல்களையும் கூடுதலாக அரசு திரட்டியது. அதன் அடிப்படையில் தேசிய மக்கள்தொகை பதிவேடு 2010இல் உருவாக்கப்பட்டது. National Population Register- NPR என்பதே இந்தப் பதிவேடு ஆகும். அதாவது இந்தப் பதிவேடு இந்நாட்டின் குறிப்பிட்ட பகுதியில் 6 மாதங்களுக்கு மேலாக வசிக்கும், அடுத்த 6 மாதங்கள் வசிக்கப் போகிற மக்களின் பட்டியலாகும். 2015இல் இப்பதிவேடு புதுப்பிக்கப்பட்டது.
குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம் – 3அ
இதுவரை நமது உண்மையான குடிமகன்களின் எந்த விவரமும் அரசிடம் தெளிவாக இல்லை. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே அரசின் ஆதாரமாக உள்ளது. இதுவரையிலான பிழைகளைச் சரிசெய்ய வேண்டுமானால், இனியேனும் தே.கு.பதிவேடு தயாரிக்கப்பட வேண்டும். இப்போது ஏதேனும் ஒரு அடையாள அட்டை உள்ள அனைவரும் இதில் சேர முடியும். இனிவரும் நாட்களில், புதிய பதிவேடு தயாரான பிறகு மக்களைக் கண்காணிப்பதும், அவர்களுக்கான நலத் திட்டங்களைத் தீட்டுவதும் அரசுக்கு சுலபமாக இருக்கும்.
குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம் – 2
‘உண்மை வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன் பொய் ஊரைச் சுற்றி வந்து விடும்’ என்ற பழமொழி உண்டு. அது முற்றிலும் உண்மை என்பதைத்தான், அண்மையில் (டிசம்பர் 2019) நாட்டின் பல பகுதிகளில் எதிர்க்கட்சிகளும் வன்முறையாளர்களும் இணைந்து நடத்திய கலவரங்கள் காட்டுகின்றன....
அயோத்தியாயணம்- 11
500 வருட ரணம், இன்று ஆறியிருக்கிறது. கோடி கோடி பக்தர்களின் மனங்களில் ஆட்சி செய்த ராமபிரான், தான் பிறந்த இடத்தில் ஒரு குடிசையில் இருந்து வந்தது விதியின் பிழையா? மனித மதியின் பிழையா? எது எப்படியிருப்பினும் நம் ராமன் திரும்பினான்.
ராமனுக்கு இங்கே என்ன சம்பந்தம்?
சமூக ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியங்கள் மூலமாக தேசிய சிந்தனையையும் சமய விழிப்புணர்வையும் உருவாக்கி வரும் இளைஞர் பா.இந்துவன். அவரது முகநூல் பதிவு ஒன்று இங்கே கட்டுரையாகிறது...
அயோத்தியாயணம்- 10
பிரிந்த கன்றைப் பார்த்த தாயாருக்கு எவ்வளவு மகிழ்ச்சி வருமோ அவ்வளவு மகிழ்ச்சி, ராமனை மீண்டும் பார்த்ததில். மாயையால் பிரிந்தவர்க்கு, ராமனைப் பார்த்த மாத்திரத்தில் பரப்பிரம்மத்தைக் கண்டது போல இருந்தது.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
கோவை சிறையில் 'வால்மேடு' பகுதியில் ஒரு வளாகத்தில் திறந்தவெளி சிறைக்கூடங்களில் நாங்கள் அடைக்கப்பட்டோம். உறங்க மட்டுமே சிறை அறைகளை தஞ்சம் புகுவோம். சிறைக்குள் தரக்குறைவான உணவு, சுகாதாரமற்ற சூழல் (கழிப்பறைகளை உபயோகப்படுத்தவே முடியாது), சிறைப்படுத்தப்பட்ட உணர்வு ஆகியவற்றை மீறி, தொண்டர்களின் ஒருங்கிணைந்த பயிற்சி முகாமாக அந்த நாட்கள் மாற்றப்பட்டன. தினமும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், பாடல்கள், அளவளாவல்கள், யோகாசனம், உடற்பயிற்சிகள், சிறைக்குளேயே ஷாகா என்று, சிறை நாட்கள் கழிந்தன.
ஆலயம் காணும் அயோத்தி நாயகன் – பதிப்புரையும் முன்னுரையும்
‘கலியுகத்தில் சங்கமே சக்தி’ என்பதையும், ‘ராமபக்தியால் சாதிக்க இயலாதது ஏதுமில்லை’ என்பதையும், நமது நாட்டிற்கு மட்டுமல்லாது உலகிற்கும் உணர்த்தி இருக்கிறது, புண்ணிய பூமியாம் அயோத்தியில், ராம ஜன்மபூமியில் அமைந்திருக்கும் பேராலயம். இனி வரப்போகும் நமது வாரிசுகளுக்கு ஸ்ரீராமனின் வில்லும் சொல்லும் என்றும் காவலாக இருக்கும் என்ற நம்பிக்கையே, இந்நூலை எழுதி முடிக்கும் போது தோன்றியது.
அயோத்தியாயணம் – 9
நம் தலை பட வேண்டும். கூப்பிய கைகள், கண்ணீர் திரையிடும் கண்கள், உணர்ச்சியிழக்கும் கால்கள், இப்படித்தான் இருப்போமா?