சென்னை வெள்ளம்: சில சிந்தனைகள்

‘மிக்ஜம்’ புயலால் சென்னை மாநகரமும், புறநகர்ப் பகுதிகளும் சீரழிந்து கிடக்கின்றன. புயல் கடந்து, மழை நின்று இரண்டு நாட்களாகியும், இன்னமும் பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை; சென்னையில் வாழும் மக்கள் பரிதவிக்கிறார்கள். அரசு காக்க வரும் என்று காத்திருந்து பயனில்லை என்பதை உணர்ந்து, மூன்று நாள் பட்டினி இருந்த களைப்புடன் வீடுகளைக் காலி செய்துவிட்டு வெளியேறும் மக்களைக் காண்கையில் வேதனையாக இருக்கிறது. இதற்கு யார் காரணம், என்ன தான் தீர்வு? இங்கு சில சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன….

மாலை      

நாம் விரதம் எடுத்தவுடனே, அதை நிறைவேற்றத் தக்க மன உறுதி நமக்குண்டா என்று பார்ப்பதற்காக, இயற்கைத் தெய்வம் எதிர்பாராத பல ஸங்கடங்களைக் கொண்டு சேர்க்கும். அந்த ஸங்கடங்களை யெல்லாம் உதறி யெறிந்து விட்டு நாம் எடுத்த விரதத்தை நிறைவேற்ற வேண்டும். விரதம் இழந்தார்க்கு மானமில்லை. விரதத்தை நேரே பரிபாலனம் பண்ணினால் சக்தி நிச்சயம்.