சென்னை, சங்கர நேத்ராலயா மருத்துவக் குழுமத்தின் நிறுவனரும், பிரபல கண் மருத்துவ நிபுணருமான, பதம பூஷண் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் 21.11.2023 அன்று காலமானார். அவருக்கு நமது கண்ணீர் அஞ்சலி. இக்கட்டுரை, அவரது சீடரும் மருத்துவ சமூக சேவகருமான திரு. அ.போ.இருங்கோவேளால் எழுதப்பட்டது....
Day: November 22, 2023
தமிழ்நாட்டு மாதருக்கு
குடும்ப வழக்கங்களாயினும் தேச வழக்கங்களாயினும் ஜாதி வழக்கங்களாயினும் அவற்றுள் முக்கியத்தன்மையுடையன எவை, இல்லாதனவை எவை என்ற ஞானம் நம்முடைய ஸ்திரீகளுக்கு ஏற்பட வேண்டுமாயின், அதற்குக் கல்வியைத் தவிர வேறு ஸாதனமில்லை. ஆண்களுக்கு ஸமானமான கல்வித் திறமை பெண்களுக்குப் பொதுப்படையாக ஏற்படும் வரை, ஆண் மக்கள் பெண்மக்களைத் தக்கபடி மதிக்க மாட்டார்கள்; தாழ்வாகவே நடத்துவார்கள். தமிழ்நாட்டு ஸஹோதரிகளே! கணவன்மார், உடன் பிறந்தார், புத்திரர் முதலியவர்களால் நன்கு மதிக்கப்பெறாமல் இழிவாகக் கருதப்பட்டு உயிர் வாழ்வதைக் காட்டிலும் இறந்து விடுதல் நன்று.