இரண்டாம் அத்தியாயமான ஸாங்கிய யோகத்தில் ஞான (புத்தி) யோக மார்க்கத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்த கண்ணன், மூன்றாவது அத்தியாயமான கர்ம யோகத்தில், “தொழில் செய்வது மட்டுமே உன் கடமை” என்று நினைவூட்டி, போர்த்தொழில் புரியுமாறு ஏவுகிறார். இதனை “கர்மங்களைச் செய்யும்போது, ‘இந்நிலைமை எனக்கு பிரகிருதி சம்பந்தத்தால் வந்தேறியதென்றும் ஈசுவரனுடைய கட்டளையினால் அவனுதவியைக் கொண்டு அவனுடைய பிரீதிக்காகவே செய்கிறோம்’ என்றும் எண்ணிச் செய்ய வேண்டும்” என்று மகாகவி பாரதி உரைவிளக்கத்தின் உள்ளடக்கத்தில் கூறுகிறார்…
Day: April 10, 2023
அகமும் புறமும் -4
‘பழங்கதைகள் பேசுவதிற் பயனில்லை’ எனச் சிலர் கூறக் கேட்கிறோம். அதுவுண்மையே. ஆனால், பழமை பேசுவதால், ஓர் ஊக்கம் பிறக்குமேல், சோம்பர் ஒழியுமேல், ஆண்மை விளங்குமேல் புதிய வாழ்வு தோன்றுமேல், பழமை பேசுவதால் இழுக்கொன்றுமில்லை. நாம் இருக்கும் நாடு நமதென்று அறியவும், இது நமக்கே உரிமையாம் என்பதுணரவும், பழங்கதைகள் வேண்டத்தான் வேண்டும். அதுவும் தமிழரைப் பொறுத்த வரை மிகுதியாக வேண்டும்.