சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி

அண்மையில் கேரளத்தின் கொச்சியில் இருந்து கர்நாடகத்தின் பெங்களூருக்கு வந்தேபாரத் ரயில் தொடங்கப்பட்டபோது, அந்த ரயிலில் பயணித்த கேரள மாணவிகள் குழு மலையாளத்தில் ஒரு தேசபக்திப் பாடலைப் பாடினர். அது ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பாடல் என்றும், அதை ரயிலில் மாணவிகள் பாடியிருக்கக் கூடாது என்றும், கேரள முதல்வர் பிணராயி விஜயன் கண்டித்திருந்தார். அது என்ன பாடல்? இதோ அப்பாடலின் தமிழ் வடிவம். இந்த அற்புதமான பாடல் தான் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிணராயிக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ்!

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) நூற்றாண்டை ஒட்டி, இன்று (நவ. 2) முதல் நவ. 23 வரை வீடுதோறும் சென்று மக்கள் தொடர்பு இயக்கம் நடத்தப்படுகிறது. அதையொட்டி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரம் இது...