தமிழக முன்னாள் முதல்வர் அமரர் திரு. மு.கருணாநிதி (1924- 2018), சுவாமி விவேகானந்தர் மீது கொண்டிருந்த அளப்பரிய மரியாதை இக்கட்டுரையில் தெளிவாக வெளிப்படுகிறது. அவர் தமிழக முதல்வராக இருந்த காலகட்டத்தில் தான் குமரிமுனையில் விவேகானந்தர் பாறையில் அவருக்கு உயரிய நினைவு மண்டபம் விவேகானந்த கேந்திரத்தால் அமைக்கப்பட்டது. அப்பொழுது அவர் எழுதிய கட்டுரையே இந்தக் கட்டுரையாகும்.