இல்லறம் என்பது நல்லறம்.... இரு மனம் இணைவதே இல்வாழ்க்கை.... தம்பதியரிடையே நம்பிக்கை குலையக் கூடாது.... விளையாட்டிற்கும் கூட பொய் சொல்லக் கூடாது... இவற்றையெல்லாம் போதனையாகச் சொல்ல வேண்டியதில்லை; ஒரு சிறுகதையாகவும் எழுதலாம். 1958இல் ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை -அல்ல அற்புதமான பாடம் - இது.
Tag: சிறுகதை
பாரதி தரிசனம்
மகாகவி பாரதி குறித்த தரிசனமாக கவிதை, சிறுகதை, கட்டுரை ஆகிய மூன்று வடிவங்களில் எழுத்தாளர் திரு. பத்மன் எழுதியவை இங்கே பதிவாகின்றன. இவை விஜயபாரதம் பிரசுரத்தின் 2024 ஆண்டுவிழா மலரில் இடம் பெற்றுள்ளன...
வேதாந்தம் (சிறுகதை)
தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பின்புல அரசியலை நையாண்டி செய்து தமிழில் வெளியான படைப்புகளில் எழுத்தாளர் அமரர் சுஜாதாவின் இக்கதையும் ஒன்று. அவருக்கே உரித்தான எள்ளலுடனும், விறுவிறுப்பான நடையிலும், இந்த உண்மைக் கதையைப் பதிவு செய்திருக்கிறார்…
இரண்டு உலகங்கள்
‘ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பது பழமொழி. அதுபோலவே தான், மனித உணர்வுகள் அற்ற அறிவியலும் இலக்கியமும் வாழ்வின் இனிமைக்கு உதவாது என்கிறாரோ புதுமைப்பித்தன்?
தவறுகள், குற்றங்கள் அல்ல…!
தவறி விழுவது குற்றமல்ல, அதையே வாடிக்கையாகக் கொள்ளும்போது அதுவே குற்றமாகிறது. வீழ்வது தவறு என்பதை மனசாட்சிப்படி உணர்பவன் தவறிழைத்தாலும், குற்றமிழைக்க மாட்டான். தவறிழைப்பதற்கான தூண்டுதல் எங்கேனும் இருந்து வந்துகொண்டே தான் இருக்கும்; நமது மனம் தவறிழைக்கத் தயாராகாத வரை அதனால் குற்றமில்லை- என்றெல்லாம் தோன்றுகிறது, திரு. ஜெயகாந்தன் அவர்களின் இச்சிறுகதையைப் படிக்கும்போது…
ஆற்றங்கரைப் பிள்ளையார்
சிறுகதைச் சக்கரவர்த்தி புதுமைப்பித்தனின் அற்புதமான உருவகக் கதை இது... 1934ஆம் ஆண்டு ‘மணிக்கொடி’ இதழில் வெளியான இக்கதை சொல்ல வருவது என்ன என்று உங்களுக்குப் புரிகிறதா?
கண்ணன் குழல்
சிறுகதைச் சக்கரவர்த்தி புதுமைப்பித்தனின் சினனஞ்சிறு சிறுகதை இது. ஆனால் உட்பொருள் சிறியதல்ல...
கோபாலய்யங்காரின் மனைவி
இறந்தகாலத்தை உயிர்ப்பிக்க வல்லவன்; நிகழ்காலத்தின் எல்லையைக் கடந்தவன்; எதிர்காலத்தை எழுத்தில் வடிப்பவனே உண்மையான எழுத்தாளன். இதோ, மகாகவி பாரதி எழுதிய, முடிவு பெறாத ‘சந்திரிகையின் கதை’ நாவலின் ஒரு திவலையை தனது எழுத்தென்னும் உருப்பெருக்கியால் மீள் உருவாக்கம் செய்கிறார் சிறுகதைச் சக்கரவர்த்தி புதுமைப்பித்தன்...
அவதாரம்
அவதாரம் என்றால் மேலிருந்து கீழிறங்குதல் என்று பொருள். இக்கதையில், ஒருவன் கீழிருந்து மேலே செல்கிறான். மனித வாழ்வின் புரிபடாத சிக்கல்களையும் தவிப்புகளையும் பூடகமாகச் சொல்லிச் செல்லும் எழுத்தாளர், இங்கே இசக்கிமுத்துவின் மனமும் உருவமும் சிறிது சிறிதாக மாறி வருவதை அவதாரத்திற்கு முந்தைய கணங்களாக முன்வைக்கிறார். ஆன்மிக வேட்கை கொண்ட இக்கதையை புதுமைப்பித்தன் எழுதிய ஆண்டு 1947...
ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்
மானிடப் பிறப்பில் உயர்வு- தாழ்வு இல்லை. அது அவனது குனத்தில் தான் இருக்கிறது என்று அழுத்தம் திருத்தமாக நிறுவுகிறது சிறுகதை வேந்தர் ஜெயகாந்தன் அவர்களின் இக்கதை. எல்லோரும் அம்மாசியாகிவிட முடியாது தான். ஆனால், மனிதம் என்ற கனவை நோக்கிய பயணத்தில் பாசஞ்சர் வண்டிகள் வந்துகொண்டே இருக்கும்.
கடிதம்
நல்ல எழுத்துகளைப் பாராட்டுவது அதனை மேலும் வளர்க்கும். இல்லாவிடில், இக்கதையில் வரும் எழுத்தாளர் சிங்காரவேலு போல வெறுமையில் தான் வாட வேண்டி இருக்கும். இக்கதையில் வரும் எழுத்தாளர் யார், புதுமைப்பித்தனே தானா, அல்லது இதனை இங்கு பதிவேற்றும் நானா?
பிரயாணம்
1969-இல் எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய திகிலூட்டும் அற்புதமான புனைகதை இது. அபத்தத்தின் எல்லையில், மானுட எல்லையைத் தாண்டிய ஒரு சக்தி இங்கே தரிசனமாகிறது....
இலக்கியாசிரியரின் மனைவி
1955-ஆம் ஆண்டு க.நா.சு. எழுதிய இச்சிறுகதை, ‘இல்லறம் அல்லது நல்லறமன்று’ என்பதை எளிதாக நிலைநாட்டுகிறது. இலக்கியாசிரியையின் கணவன் என்ற பெருமிதத்தை விட, இலக்கியாசிரியன் என்பது சற்று மாற்றுக் குறைவு தானே? இக்கதையைப் படித்து முடிக்கையில் உங்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தால், அதுவே இலக்கியாசிரியனின் பேறு!
ஒரு பிரமுகர்
கட்டெறும்பை கதாநாயகனாகக் கொண்ட இந்தச் சிறுகதை ஒரு நையாண்டிக் கதை என்பது கதையின் தலைப்பைப் பார்க்கும்போதே தெரிந்திருக்கும். நேரடிக் கதை சொல்வதில் மட்டுமல்ல, உருவகக் கதையிலும் ஜெயகாந்தன் தனது சமூகப் பார்வையை முன்வைக்கிறார்...
சிட்டுக்குருவி
1955-இல் க.நா.சு. எழுதிய சிறுகதை இது... கொல்லையில் குருவி கட்டிய கூடு ஒரு சிறுகதையை மட்டும் உருவாக்கவில்லை, உறவுகளிடையிலான பந்ததையும் போகிற போக்கில் வெளிப்படுத்தி இருக்கிறது...