கம்பன் விழாவில் வம்பனின் பேச்சு- பகுதி 5

சென்னையில் நடந்த கம்பன் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றத்தும் அதில் அவர் சர்ச்சைக்குரிய் வகையில் பேசியதும், கம்பனின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திராவிட மாடல் அரசின் அதிகாரத்திற்கு அஞ்சி அவர்களின் ஆசி பெற்ற வைரமுத்துவைக் கண்டிக்க இயலாமல் அவர்கள் மனதினுள் குமைகின்றனர். ஆனால், முக்காலமும் வாழும் தமிழுக்கு முன் எக்காளமிடுபவன் எவனும் தூசி தான் என்பதை இங்கு வெளியாகும் கண்டனப் பதிவுகள் நிரூபிக்கின்றன. இது ஐந்தாம் பகுதி…

அச்சமில்லை… அச்சமில்லை..!

திரு. இரா.மாது, திருச்சி தேசிய கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய அமரர் திரு. இரா.ராதாகிருஷ்ணன் அவர்களது புதல்வர்;  திருச்சியில் ஆசிரியராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். பட்டிமன்ற மேடைகளை அலக்கரிக்கும் தமிழகம் அறிந்த, இனிய மேடைச்  சொற்பொழிவாளர். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது அற்புதமான கட்டுரை இது…