பழந்தமிழ் இலக்கியத்தின் பாடல்களை இளம் தலைமுறைக்குச் சொல்ல வேண்டுமென்றால், இப்படி சமகாலக் காட்சிகளுடன் விளக்கியாக வேண்டி இருக்கிறது. இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட தொழில் துறையில் பணிபுரிந்தாலும், மனதைப் பண்படுத்தும் இலக்கியத்தை மென்மையாக எடுத்துச் சொல்கிறார், எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதன். இதோ அவரது குறுந்தொகை பற்றிய குறுங்கட்டுரை...
Author: vamumurali
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 12
தமிழ் இலக்கியங்களில் அக்கால வரலாற்றை மன்னர் கொடிவழியுடன் பதிவு செய்துள்ள ஒரே நூல், பதிற்றுப்பத்து. எட்டுத்தொகை நூல்களுள் புறப்பாடல் இலக்கியமான இந்நூல், சேர மன்னர்கள் பத்துப் பேரைப் பற்றி, பத்து புலவர்கள் பாடிய பத்துப் பாடல்களின் தொகுப்பாகும். இந்நூலில் நல்லாட்சி, செங்கோல் குறித்துப் பயின்றுவரும் பாடல்களைக் காண்போம்...
ஒற்றைக் கொம்பனும் தாமரைத் தடாகமும்
இந்தப் பரந்த உலகம் மானிடனுக்கானது மட்டுமல்ல என்பதை எப்போது உணரப் போகிறோம்? ஒற்றைக் கொம்பன்கள் மின்வேலியில் சிக்கி உயிரை இழப்பதும், மயக்க ஊசியால் மரணிப்பதும் எதைக் காட்டுகின்றன, நமது மனிதநேயத்தையா? எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவனின் கவிதை, ஒற்றைக் கொம்பன்களுக்கானது மட்டுமல்ல....
குழந்தைக் கதை (எ) நித்திய கல்யாணி
கதை, கவிதை, கட்டுரை எதை எழுதினாலும், அதில் வாசகரின் அறிவை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணமும், தேசிய சிந்தனையைச் சிறிதேனும் ஊட்டிவிட வேண்டுமென்ற தாகமும் கொண்டு இயங்கியவர் மகாகவி பாரதி. ஒரு சிறு குழந்தையுடனான கதாசிரியரின் வேடிக்கையான விளையாட்டு பதிவாகியுள்ள இக்கதையிலும் கூட, கர்ஸன் பிரபுவை கதையின் இறுதியில் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார் பாரதி…
கோபாலய்யங்காரின் மனைவி
இறந்தகாலத்தை உயிர்ப்பிக்க வல்லவன்; நிகழ்காலத்தின் எல்லையைக் கடந்தவன்; எதிர்காலத்தை எழுத்தில் வடிப்பவனே உண்மையான எழுத்தாளன். இதோ, மகாகவி பாரதி எழுதிய, முடிவு பெறாத ‘சந்திரிகையின் கதை’ நாவலின் ஒரு திவலையை தனது எழுத்தென்னும் உருப்பெருக்கியால் மீள் உருவாக்கம் செய்கிறார் சிறுகதைச் சக்கரவர்த்தி புதுமைப்பித்தன்...
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 11
நமக்குக் கிடைத்திருக்கும் 22 பரிபாடல்கள், மாலவன், முருகன், வைகை ஆறு ஆகியவை பற்றிய பாடல்களே. இதில் மாலவனின் அறக்கோலாக செங்கோல் இடம் பெறும் கருத்து பரிபாடல்-3இல் வருகிறது.... அறத்திற்கு ஆதியாக விளங்குவது மன்னவனின் செங்கோல்; அந்த மன்னவனுக்கும் ஆதியாக நிற்பது கார்மேகவண்ணனின் அறக்கோல்.
‘தந்தை பெரியார்’ வாழ்க!
இந்திய விடுதலைக்காக உழைத்த உத்தமர்; எதிர்கால இந்தியா எந்த அடிப்படையில் அமைய வேண்டும் என்று கனவு கண்ட சிந்தனையாளர்; சமூகம் உயர சீர்த்திருத்தங்களை முன்னெடுத்த முன்னோடி; கல்வியே முன்னேற்றும் என்று அறிந்து பல்கலைக்கழகம் அமைத்த பெருமகன்; அறிவுத் திறத்தால் ஆங்கிலேயரையும் வசப்படுத்திய இதழாளர்- பண்டித மதன்மோகன் மாளவியாவை ’தந்தை பெரியார்’ என்று கட்டுரையாளர் திரு. டி.எஸ்.தியாகராஜன் போற்றுகிறார். ஏன்? படியுங்கள், விடை கிடைக்கும்....
பட்டியல் சமுதாய மக்களின் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து!
ஹிந்து பட்டியலின சகோதரர்களின் இட ஒதுக்கீட்டுச் சலுகைகளில் பங்கு கேட்டு, மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் அரசியல்ரீதியாக நிர்பந்தம் செய்து வருகிறார்கள். அந்தக் கோரிக்கை நியாயமற்றது என்பதை விளக்கி, ஹிந்து பட்டியலின சகோதரர்களின் இட ஒதுக்கீட்டு உரிமை பறிபோகக் கூடாது என்று வலியுறுத்துகிறது, இக்கட்டுரை. ஆந்திர பிரதேசத்தில் இயங்கும் ‘எஸ்.சி., எஸ்.டி. ஹக்குல சம்க்ஷேம வேதிகா’ வெளியிட்ட ஆங்கில நூலின் சுருக்கம் இது. சென்னையில் உள்ள நந்தனார் அறக்கட்டளை சிறு நூலாக வெளியிட்டுள்ள இக்கட்டுரையை, நமது தளத்தில் பதிவு செய்கிறோம்…
அம்பிகையின் வாளில் ரத்தம்
கொரோனா தொற்று அபாயம் நீங்கி உலகம் இப்போது வேகமாகப் பயணிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால், அந்தக் கொடிய தொற்றுக்கு என்ன காரணம்? இனிமேல் அத்தகைய கொடுமை நிகழாமல் தடுப்பது எங்ஙனம்? இக்கேள்விகளுக்கு ஆன்மிகரீதியாகவும் தார்மிக ரீதியாகவும் பதில் அளிக்கிறார் பேரா. இளங்கோ ராமானுஜம்…
எனது பாட்டி
மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது...
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 10
எட்டுத்தொகை நூல்களில் அகப்பாடல்கள் கொண்ட ஐந்து நூல்களில் (நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு) பயின்று வரும் செங்கோல் குறித்த செய்திகளைக் காணலாம்…
அகமும் புறமும் – 8 (ஆ)
கல் தோன்றி மண் தோன்றாத காலத்தே தோன்றினர் தமிழர்; பிற நாட்டார் தோன்றுவதற்கு முன்னர்த் தோன்றினர் இம்மண்ணில். அந்நாட்டார்கள் சாதாரண நாகரிகம் அடையு முன்னரே தமிழர் மிக உயர்ந்த நாகரிகத்தைப் பெற்றுவிட்டனர். இவர் பேசும் மொழியும் இவரைப் போல் தொன்மை வாய்ந்தது; எனவே, இவருடைய வாழ்வும் பண்பாடும், எண்ணமும், கருத்தும் மிகு பழமையானவை. புற உலக வாழ்க்கைக்குத் தேவையான அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலியவற்றில் சிறந்து விளங்கிய நம் முன்னோர் அகஉலக வாழ்க்கையிலும் (சமய வாழ்க்கை) சிறந்து விளங்கினர் என்பது சொல்லாமலே விளங்கும்.
மன்னரின் அடையாளமா செங்கோல்?
மூத்த பத்திரிகையாளர் திரு. மாலன் நாராயணன் இந்த வார ‘ராணி’ இதழில் எழுதியுள்ள அற்புதமான கட்டுரை நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது. மக்களாட்சி முறையில் செங்கோலுக்கு இடமில்லை என்று கூறும் அதி புத்திசாலிகளுக்கு பதில் அளிக்கிறது இக்கட்டுரை.
அகமும் புறமும் – 8அ
கடமை நிறைவேற்றத்தில் உயிர் போவதாயினும் அதனை மகிழ்வுடன் ஏற்பவன் அவன் கடமையைச் செய்யாமலோ, தவறான வழியில் நடந்தாலோ, அதனால் பெருலாபம் வருவதாயினும் அதனைச் செய்ய மாட்டான். பழி வருகின்ற செயலைப் பெரியோர்கள் செய்ய மாட்டார்கள். இனி அவன் இவ்வுலகில் செய்யும் பெரிய முயற்சிகள் அனைத்தும் தனக்கு என்றில்லாமல், பிறர் பொருட்டே அமையுமாம். அத்தகையவர்கள் உள்ளமையினாலேதான் இவ்வுலகம் வாழ்கிறது என்கிறான் புலவன்....
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 9
பத்துப்பாட்டு இலக்கியத்தில் ஆற்றுப்படை நூல்களில் இடம்பெற்ற செங்கோல் தொடர்பான செய்திகளை சென்ற அத்தியாயத்தில் கண்டோம். அவை தவிர்த்த பிற பத்துப்பாட்டு நூல்கள் குறித்தும், அவற்றில் பயின்று வரும் செங்கோல் கருத்துகள் குறித்தும் இங்கு காண்போம்.