பாவியும் யோகி ஆகலாம்!

கிரிஷின் வாழ்க்கை நெறி தவறி, வழி தவறிச் சென்றவர்களுக்கு நம்பிக்கை தருவதாக இருக்கிறது. எந்தப் பாவியும் மனதார பகவானின் நாமத்தை உச்சரித்தால், தன் தவறுகளுக்காக வருந்தி புதிய பாதையை நோக்கிப் பயணித்தால் இறைவன் தன் அன்புக் கரம் நீட்டுவார். கிரிஷ் என்றுமே கோழையாக இருந்தது இல்லை. தன் பாவச் செயல்களை ஒருபோதும் மற்றவரிடம் மறைக்கவில்லை. கள்ளங் கபடம் இன்றி வெளிப்படையாகச் சொன்னார்.

காயத்ரி மந்திரம்- 1

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் நிறுவனரான பூஜ்யஸ்ரீ சுவாமி சித்பவானந்தர் (1920-1985), தமிழகத்தில் அண்மைக்காலத்தில் ஆன்மிகப்பயிர் வளர்த்த அருளாளர். பாரதத்தின் முதன்மை மந்திரமான காயத்ரி மந்திரம் குறித்த சுவாமிகளின் சிறிய நூல் (காயத்ரீ), இங்கு நான்கு பாகங்களாகக் கொடுக்கப்படுகிறது.

உலக வாழ்க்கையின் பயன்

நாயைக் குளிப்பாட்டி நல்ல உணவளித்து நடு வீட்டில் வைத்தால் அது மறுபடியும் அசுத்த உணவு விரும்பி வாலைக் குழைத்துக்கொண்டு ஓடத்தான் செய்கிறது. எத்தனை புதிய இன்பங்களைக் காட்டிய போதிலும், மனம் அவற்றில் நிலைபெறாமல், மீண்டும் ஏதேனும் ஒரு துன்பக் குழியிலே கண்ணைத் திறந்து கொண்டுபோய் விழுந்து தத்தளிக்கத் தொடங்குகிறது.

புத்தொளியில் தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் இந்திய ஜனநாயகத்தில் தனித்துவமும் சுயாட்சியும் பெற்ற அமைப்பு. இந்தியாவில் தேர்தல்களை சுதந்திரமாக நடத்தும் இந்த அமைப்பு முன்னர் எப்படி இருந்தது, இப்போது எப்படி மாறி இருக்கிறது என்று அலசுகிறது இக்கட்டுரை....

புனர்ஜன்மம் (2)

மிருகங்களைப் போன்ற மனிதர்களை நாம் பார்த்ததில்லையா? நம்மை நாம் கவனிக்குமிடத்து, எத்தனை விதமான மிருகங்களாயிருந்திருக்கிறோம் என்பது தெரியும்.

புத்தொளியில் மதச்சார்பின்மை

பாரதத்தில், மதச்சார்பின்மை என்றால் ஹிந்துக்களை தாழ்த்துவதும் மதச் சிறுபான்மையினரை உயர்த்துவதும் என்ற போலித்தனம் இருந்தது. அனைத்து மதங்களையும் அரவணைத்துச் செல்வது, ஆதரிப்பது என்பதுதான் சரியான மதச்சார்பின்மை. அதுவே ஹிந்துத்துவம். மோடி அதனை சரியாக நடைமுறைப்படுத்தி  வருகிறார்.

லோக குரு

ரவீந்திர கவியின் உபந்யாஸத்தை ஜப்பான் தேசத்தார் மிகவும் பக்தியுடன் கொண்டாடுகிறார்கள். பத்திரிகைகள் உயர்ந்த புகழ்ச்சி பேசுகின்றன. நல்ல காரியம் செய்தார். இப்படியே இங்கிலாந்து முதலிய எல்லாத் தேசங்களிலும் போய், பாரத தேசத்தின் அறிவு மஹிமையை மற்றொரு முறை விளக்கி வரும்படி புறப்பட்டிருக்கிறார் போலும்.

இருமையின் இறைவன்

இன்பமும் துன்பமும் இறைவன் தருவது. அவனது நினைவே அமைதி அளிக்கிறது. திருவாய்மொழியில் நம்மாழ்வார் கூறுவதும் இது தானே?

இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை

20-6-20, ஞாயிற்றுக்கிழமை மாலையில், பொட்டல் புதூரிலே தெற்குப் புது மனைத் தெருவில், எல்லா வகைகளிலும் பெருமை பொருந்திய ஒரு முஸ்லீம் ஸபையின் முன்னே, ‘இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை’ என்ற விஷயத்தைக் குறித்து ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி செய்த பிரசங்கத்தின் ஸாரம் இது...

ஒருவன் வாளி

தியாகராஜர் “ஒக்க மாடமு ஒக்க பாணமு, ஓக்க பத்தினி வ்ரதுடே” என்ற ஹரி காம்போஜி  ராக கீர்த்தனையை அழகாக கம்பீரமாக பாடியிருக்கிறார். “ஒரு சொல், ஒரு வில், ஒரு பத்தினி என்ற கொள்கை கொண்டவன் ராமன், அவனை மறவாதே என்று”...

எல்லோரும் இன்புற்றிருக்கட்டும்!

எழுதியது யார் என்று தெரியவில்லை. எல்லா ஜீவராசிகளையும் வாழ்த்தி அரவணைக்கும் சனாதன அன்பு வெள்ளத்தில் திளைத்த பலரும் பலகாலமாக உச்சரிக்கும் மந்திரம் இது.  இதுவே பாரதபூமியின் பண்பாடு.

யேசு கிருஸ்துவின் வார்த்தை

தெய்வமில்லை என்று எந்தத் தவறு செய்தாவது பணந் தேடுவோர் பணத்தையே தெய்வமென்று கொண்டோர். இவ்வினத்தார் எல்லாத் தேசங்களிலும் இருக்கிறார்கள். இவர்கள் மனத்திலே தம்மை மேதாவிகளாக நினைத்திருக்கிறார்கள். இவர்களுடைய மேதாவித் தனம் மடத்தனம். 'தெய்வத்தை நம்பி, எப்போதும் உண்மை சொல்ல வேண்டும்; பயப்படக் கூடாது. எது நியாயமென்று தோன்றுகிறதோ, அதை அச்சமில்லாமல் செய்து முடிக்க வேண்டும்' என்று காந்தி சொல்வதை நான் வேதவாக்காக ஒப்புக் கொள்ளுகிறேன்.

ஓம் சக்தி

எங்கிருந்தோ வந்து இவ்வுலகத்தில் சில நாள் வாழ்கிறோம். செத்த பிறகு நம்முடைய கதி என்ன ஆகுமோ? கடவுளுக்குத் தான் தெரியும். மூன்றே முக்கால் நாழிகை உயிர் வாழ்வது, சந்தோஷத்துடன் இருந்துவிட்டுப் போகக் கூடாதா? அடடா! இந்தப் பூமியில் மனித உயிருக்கு எத்தனை கஷ்டம், எத்தனை பயம், எத்தனை இடையூறு, எத்தனை கொலை, எத்தனை துரோகம், எத்தனை பொய், எத்தனை கொடுமை, எத்தனை அநியாயம், ஐயோ பாவம்!

தர்மம்

'அட போ. பழமொழிகளை நம்பி ஒழுக்கத்தை நடத்துவோமென்று நினைப்பதும் பயனில்லை' என்று மேற்படி வாடியா சொல்லுகிறார். 'பதறின காரியம் சிதறும் என்பதாக ஒரு பழமொழி சொல்லுகிறது. 'சோற்றுக்கு முந்திக்கொள்' என்று மற்றொரு பழமொழி சொல்லுகிறது. எந்தப் பழமொழியை நம்பலாம்?

அமிர்தம் தேடுதல்

‘அடுத்த நிமிஷம் நிச்சயமில்லை’ என்று தீர்ந்துவிட்டால் எதைக் கொண்டாடுவது? இது கட்டிவராது. எப்படியேனும், தேகத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். நமது காரியம் முடிந்த பிறகுதான் சாவோம்; அதுவரை நாம் சாக மாட்டோம். நம் இச்சைகள், நம்முடைய தர்மங்கள் நிறைவேறும்வரை நமக்கு மரணமில்லை.