புதுவையில் பூத்த யோக மலர்- 16

ஒருவருக்கு ஸ்ரீ அரவிந்தர் எழுதிய கடிதத்தில்,  “இது நாடுகள் மற்றும் அரசுகள் இடையே நடக்கும் போர் என்று நாம் நினைக்கக் கூடாது. இது தெய்வ சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே நடக்கும் போர். நேச நாடுகள் பக்கம் பல்வேறு குறைகள் இருக்கலாம். ஆனால் அவற்றின் வெற்றி மானுட இனத்தின் பரிணாம முன்னேற்றத்திற்கான பாதையை அமைக்கும். அதற்கு எதிரான சக்திகள் வெற்றி பெற்றால் மனித இனம் பின்னடைவைச் சந்திக்கும். பரிணாம வளர்ச்சி தடைபடும்” என்று குறிப்பிட்டிருந்தார்...