பெண்களின் கண்களை வேல்விழி, மலர்விழி, மைவிழி, மான்விழி, மீன்விழி, சேல்விழி, சுடர்விழி என்று கொண்டாடுவது கவிஞர்களின் இயல்பு. மலர் போன்ற மென்மையைக் கொண்டிருந்தாலும், வேல் போன்ற கூர்மையை உடையவை இக்கண்கள். கவியரசர் கண்ணதாசன் ஒரு திரைப்பாடலில் நாயகியின் கண்களை அம்புவிழி என்று நாயகன் பாடுவதாக எழுதி இருக்கிறார். அதையொட்டிய சிறு ஆய்வுப் பதிவு இது…. மனம் கனிய, இலக்கியம் பயில்வோம்.
Day: July 16, 2024
திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -60
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது அறுபதாம் திருப்பதி...