யுக சந்தி

எரிந்து தகிக்கும் அவ்வெம்மையின் நடுவே சுகம் தரப் படர்ந்த அந்த நிழல் போலும், யந்திரங்களைத் தவிர எதையுமே நம்பாத இவ்விருபதாம் நூற்றாண்டில் - சென்ற நூற்றாண்டின் சின்னமாய்த் தன் சொந்தக் கால்களையே நம்பி நிற்கும்- காண்பதற்கரிதான அந்தக் கிழவியின் பிரசன்னம் போன்றும் மெல்லென வீசிய குளிர்காற்றில் வேப்பங் குழைகள் சிலிர்த்தன....

மனித யந்திரம்

அன்றாட வயிற்றுப்பாட்டுக்காக உழைத்து ஓடாய்த் தேய்பவனும்கூட தன்னிலை மாறுவதில்லை என்ற அரிய உண்மையை வெளிப்படுத்தும் சிறுகதை (1937) இது. இதன் நாயகன் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு பொய்க்கணக்கு எழுதும் வாய்ப்பு இருந்தும் அதனைச் செய்வதில்லை; ஒரே இடத்தில் 45 ஆண்டுகள் வேலை பார்ப்பதே மனித யந்திரமான அவருக்கு கௌரவம். அவருக்கும் சிறு சபலம் வருகிறது. ஆனால், அச்சம் அந்த சபலத்தை வென்று விடுகிறது. ஏழைக்கு தவறு செய்யும் வாய்ப்பு கூட கிடையாது என்கிறாரோ புதுமைப்பித்தன்? நேர்மையாக இருப்பவன் யாரைக்கண்டும் அஞ்ச வேண்டியதில்லை என்பது தான் இந்த சிறுகதையின் நீதியா? அக்காலத்திய வெளிப்புறச் சித்திரங்கள், நாணய விகிதங்கள், நெல்லைத் தமிழ் ஆகியவற்றையும் இக்கதையில் தரிசிக்கலாம்...

நடைபாதையில் ஞானோபதேசம்

எழுத்தாளர் என்ற சொல்லுக்கு ஏற்றம் தந்தவர் அமரர் ஜெயகாந்தன். தமிழ்ச் சிறுகதை உலகில் அவரது தாக்கம் மிகவும் பெரியது. ஆரம்பத்தில் இடதுசாரியாக இருந்த அவர் பின்னாளில் கனிந்த தேசியவாதியானார். ஆனால், பின்னாளில் தானே ஏற்றுக்கொண்ட விரதம் காரணமாக அவரது பிற்காலச் சிந்தனைகள் அதிக அளவில் எழுத்துவடிவம் பெறவில்லை. திரைத் துறையிலும் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டவர்; அரசியல்வாதிகளுக்கு அஞ்சாமல் தனது மனசாட்சிப்படி பேசியவர்; எழுத்துகளால் கிடைத்த வருவாயைக் கொண்டே வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டியவர் ஜெயகாந்தன். ஞானபீடம் (2002), சாஹித்ய அகாதெமி (1972) விருதுகளைப் பெற்றவர்.அவரது சொந்த அனுபவம் இங்கு சிறுகதை வடிவில் பதிவாகிறது....

பிரம்ம ராக்ஷஸ்

-புதுமைப்பித்தன்      நித்தியத்துவத்திற்கு ஆசைப்பட்டு, இடர்ப்பட்டு அழிவுற்றவர்களின் கடைசி எச்சரிக்கையாக இருந்தது அவன் கதை.      அவன் பொன்னை விரும்பவில்லை. பொருளை விரும்பவில்லை. போகத்தை விரும்பவில்லை. மனக் கோடியில் உருவம் பெறாது வைகறைபோல் எழும் ஆசை எண்ணங்களைத் துருவியறியவே ஆசைப்பட்டான். மரணத்தால் முற்றுப்புள்ளி பெறாது, ஆராய்ச்சியின் நுனிக் கொழுந்து வளர வேண்டுமென்ற நினைப்பினால் அவன் ஏற்றுக்கொண்ட சிலுவை அது. அன்றுமுதல் - ஆம், அது நடந்து வெகுகாலமாகிவிட்டது - இன்றுவரை, ஆசைகள் உந்த, அழிவு அவனைக் கைவிட, மரணம் என்ற … Continue reading பிரம்ம ராக்ஷஸ்

செல்லம்மாள்

சாமானியனுக்கு வாழ்க்கையே போராட்டம் தான். அன்றாடம் வேலை செய்தால் தான் வயிற்றுக்குச் சோறு என்ற நிலையில் வாழ்வோரின் ஆரோக்கியம் கெட்டால், அவர்களது வாழ்வே நித்தமும் நரகம் தான். அத்தகைய நிலையிலும் வாழ்க்கையை ஒரு பிடிப்புடன் நடத்தும் இரு சாமானிய ஜீவன்களின் கதை இது. 80 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுப் பதிவுகள் ஆங்காங்கே தூலமாய்த் தெரியும் இக்கதையில், வறுமையின் கோரம் மிகத் தெளிவாகவே வெளிப்படுகிறது. புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் முத்திரைக் கதையாக இக்கதை கொண்டாடப்படுவது ஏன் என்று, இதைப் படிக்கும்போதுதான் உணர முடியும். ஹூஊம்....

கபாடபுரம்

சந்திரோதயம் இதழில் புதுமைப்பித்தன் எழுதிய தொடர் சிறுகதை இது... புதுமைப்பித்தனின் புனைவுத் திறனும் நகைச்சுவை உணர்வும் இக்கதையில் போட்டியிடுகின்றன...

குளத்தங்கரை அரசமரம்

சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழின் முன்னோடி இதழாளருமான வ.வே.சு.ஐயர் எழுதிய ‘குளத்தங்கரை  அரசமரம்’  சிறுகதை, தமிழின் முதல் சிறுகதை (1915) என்று கூறப்படுகிறது. ஆனால் இவருக்கு முன்னமே மகாகவி பாரதி தமிழில் சிறுகதை எழுதி இருக்கிறார். அதேபோல, இக்கதை ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய  ‘கடேர் கதா’ என்ற சிறுகதையின் தழுவல் என்று கூறுவோரும் உள்ளனர். குளத்தங்கரையில் உள்ள அரசமரம் தன் வாழ்வில் கண்ட ருக்மணி எனும் பெண்ணின் கதையைச் சொல்வதாக அமைகிறது இச்சிறுகதை. “பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்க வேண்டாம்” என்ற  நீதி போதனையுடன் இக்கதை முடிகிறது.  அக்கால சுதந்திரப் போராளிகளின் சமூக சீர்திருத்த எண்ணங்களை வெளிப்படுத்துவதாக இக்கதை இருப்பதைக் கவனிக்கலாம். ஆங்கிலேயர் ஆட்சிக் கால இந்தியாவில், தமிழ்நாட்டின் ஒரு ஊரின் பிரதான குளத்தின் கரையில் வெகுகாலமாக இருந்துவரும் அரசமரம் நமக்குச் சொல்கிறது இந்தக் கதையை. குறிப்பாக நாயகி ருக்மிணியின் கதையை உருக, உருகச் சொல்கிறது. படித்து முடிக்கும்போது மனபாரம் தாங்காமல் ஆழ்ந்த பெருமூச்சு நம்மிடமிருந்து வெளிப்படுகிறது. இத்துணை விசாலமான  பார்வை கொண்ட வ.வே.சு. ஐயரையா நமது தமிழகத்தில் பிராமணர் என்ற ஒரே காரணத்துக்காக கரித்துக் கொட்டினர் என்பதை நினைத்தாலே, ருக்மிணிக்காக அரசமரம் அடைந்த விசாரம், நமக்கும் எழுகிறது...

சாப விமோசனம்

இந்திய மொழி இலக்கியங்களில் மிகுந்த தாக்கம் செலுத்தும் பண்டைய இலக்கியங்களில் ராமாயணமும் மகாபாரதமும்  முக்கியமானவை. இன்றும் தொடரும் இந்த இழையறாத பண்பாட்டு உறவு இல்லாத எழுத்தாளர்களைக் காணல் அரிது. அந்த வகையில், தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பிரதான இடம் வகிக்கும் புதுமைப்பித்தன், ராமாயணத்தின் தாக்கத்துடன் 'சாப விமோசனம்' கதையை எழுதியது வியப்பில்லை; ஆனால், கால மாற்றத்துக்கேற்ப தனது சிந்தனையில் எழுந்த கேள்வியையே மையமாக்கி இந்த சிறுகதையைப் புனைந்திருக்கிறார். கதை வெளியான காலத்தில் (1943) பெரும் புயலை உருவாக்கிய கதை இது. கணவரான கௌதம மகரிஷியின் சாபத்தால் கல்லான அகலிகை, ராமனின் பாதத் தூளி பட்டு பெண்ணான கதை நமக்குத் தெரியும்; அதே அகலிகை சீதையை அக்னிப்பிரவேசம் செய்யுமாறு ஸ்ரீராமன் சொன்னான் என்று கேட்ட மாத்திரத்தில் மீண்டும் கல்லாகிறாள்- புதுமைப்பித்தனின் கதையில்....

மகாமசானம்

வாழ்வின் நிலையாமையை 70 ஆண்டுகளுக்கு முந்தைய நடையில் எழுதி இருக்கிறார் சிறுகதைச் சக்கரவர்த்தி புதுமைப்பித்தன். வாழ்வை முடிக்கப்போகும் கிழட்டுப் பிச்சைக்காரனும், வாழ்வு என்றால் என்னவென்றே அறியாத சிறு குழந்தையும் இயல்பாக சந்திக்கிறார்கள். இருவருக்கும் அந்தச் சந்திப்பு புரிவதாகத் தெரியவில்லை. அதைப் படிக்கும் நமக்குத் தான் நிலையாமை புரிகிறது. அற்புதமான உருவகக் கதை இது...

ஒரு நாள் கழிந்தது

தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளுள் ஒருவரான புதுமைப்பித்தன் 85 ஆண்டுகளுக்கு முன் ‘மணிக்கொடி’ இதழில் எழுதிய சிறுகதை இது... இதில் குறிப்பிடப்படும் முருகதாசர் புதுமைப்பித்தனே தானோ என்ற எண்ணம் படிக்கும் யாருக்கும் வரவே செய்யும். அவ்வளவும் சுய எள்ளல். தமிழில் எழுத்தாளனாக இருந்தால் சுய எள்ளலுடன் தான் வாழப் பழக வேண்டும் போல. படிக்கும்போது நகைச்சுவையாகத் தெரிந்தாலும், நமது இதழ்கள் முறுவலித்தாலும், படித்து முடிக்கும்போது நெஞ்சின்மீது ஒரு பெரிய பாரம் ஏறி விடுகிறது. இதுவே இந்தச் சிறுகதையின் வெற்றி...

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்

     "அதென்ன தாத்தா, கன்னங்கறேலுன்னு நவ்வாப் பழம் மாதிரி களுத்திலே இருக்கு? அதைக் கடிச்சுத் திங்கணும் போலே இருக்கு" என்று கண்களைச் சிமிட்டிப் பேசிக் கொண்டு மடியில் எழுந்து நின்று, கழுத்தில் பூப்போன்ற உதடுகளை வைத்து அழுத்தியது. இளம் பல் கழுத்தில் கிளுகிளுத்தது. கடவுள் உடலே குளுகுளுத்தது.

     "கூச்சமா இருக்கு" என்று உடம்பை நெளித்தார் கடவுள்.

(புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ சிறுகதையில் இருந்து)....