சின்னச் சங்கரன் கதை

முற்றுப் பெறாமல் நமக்குக் கிடைத்த மகாகவி பாரதியின் கதைப் பொக்கிஷங்களுள்  ‘சின்னச் சங்கரன் கதை’யும் அடங்கும். இந்தக் கதைத் தொடர் தியாகசீலர் சுப்பிரமணிய சிவம் நடத்திய ‘ஞானபாநு’ மாதப் பத்திரிகையிலே 1913 மே மாத இதழில் முதன்முதலாக வெளிப்பட்டது; 1914 மார்ச் மாத இதழுடன் கதைத் தொடர் பிரசுரமாகவில்லை. அதாவது, நான்கு அத்தியாயங்களே பிரசுரமாகி உள்ளன. இந்தக் கதையை பாரதி தமது சொந்தப் பெயரில் எழுதாமல், ‘சாவித்திரி’ என்ற புனைபெயரில் எழுதினார். கதையின் தொடர்ச்சியைப் பாரதி எழுதத் திட்டமிட்டிருந்தார் என்பதை  அவர் எழுதிய குறிப்பொன்றால் தெரிந்துகொள்ள முடிகின்றது. பாரதியின் அதீத நையாண்டித் திறனுக்கு அற்புதமான உதாரணம், இந்த முற்றுப் பெறாத புதினம்....