பாவியும் யோகி ஆகலாம்!

கிரிஷின் வாழ்க்கை நெறி தவறி, வழி தவறிச் சென்றவர்களுக்கு நம்பிக்கை தருவதாக இருக்கிறது. எந்தப் பாவியும் மனதார பகவானின் நாமத்தை உச்சரித்தால், தன் தவறுகளுக்காக வருந்தி புதிய பாதையை நோக்கிப் பயணித்தால் இறைவன் தன் அன்புக் கரம் நீட்டுவார். கிரிஷ் என்றுமே கோழையாக இருந்தது இல்லை. தன் பாவச் செயல்களை ஒருபோதும் மற்றவரிடம் மறைக்கவில்லை. கள்ளங் கபடம் இன்றி வெளிப்படையாகச் சொன்னார்.

எல்லோரும் இன்புற்றிருக்கட்டும்!

எழுதியது யார் என்று தெரியவில்லை. எல்லா ஜீவராசிகளையும் வாழ்த்தி அரவணைக்கும் சனாதன அன்பு வெள்ளத்தில் திளைத்த பலரும் பலகாலமாக உச்சரிக்கும் மந்திரம் இது.  இதுவே பாரதபூமியின் பண்பாடு.

சநாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்

கடலுார் மாவட்டம், வடலுாரில் 2023  ஜூன் 21-இல் நடைபெற்ற  வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக ஆளுநர் மேதகு ஆர்.என்.ரவி பேசிய உரையின் சுருக்கமான தொகுப்பு இது…

செம்பஞ்சுக் குழம்பு!

அன்னை திருமகளே, எம்பெருமானது திருமார்பில் நீ கணமும் பிரியாது உறைகிறாய். உன் திருவடியில் பூசிய செம்பஞ்சுக் குழம்பு அவன் திருமார்பில் படுவதால் அது அழகிய சின்னமாக நின்று அவன் திருமேனியையே அழகுறச் செய்கிறது.

ஆடிப் பெருக்கும் அன்னை வழிபாடும்!

ஆடிப் பதினெட்டன்று சப்த கன்னிகைகளை வழிபடுவது புண்ணியம் தரும். `பிராமி, மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி` ஆகிய தேவதைகள் சப்த கன்னிகளாகப் போற்றப் படுகிறார்கள். பல கோயில்களில் சப்த கன்னிகைகளுக்கு சன்னிதிகள் இருக்கின்றன.

சனாதன தர்மம் என்றால் என்ன?

‘சனாதனம்’ என்றால் என்னவென்றே தெரியாமல், அதை ஒழிப்போம் என்று தமிழகத்தில் சிலர் முழங்கி வருகிறார்கள். அவர்களுக்காகவே, மேடைச் சொற்பொழிவாளர், கவிஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவரான திரு. மரபின்மைந்தன் முத்தையா தனது வலைத்தளத்தில் எழுதிய எளிய விளக்கம் இங்கு மீள் பதிவாகிறது....

வள்ளலார் ஒரு சனாதனியே!

வள்ளலாரின் இருநூறாவது ஆண்டு கொண்டாடப்படும் இந்த ஆண்டில், தமிழகத்தில் வள்ளலாருக்கு திராவிட முத்திரை குத்திட அரசாலும், ஆன்மிகத்துக்கு எதிரான சிலராலும் தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், வள்ளலார் என்னும் சூரியனை சிறு குமிழில் அடைக்க முடியாது. ஆயுள் முழுவதும் ஆன்மிக நெறியாளராக வாழ்ந்த வள்ளலார் உண்மையில் சனாதனம் காக்க உதித்த அருட்செல்வரே என்கிறார் எழுத்தாளர் திரு. அரவிந்தன் நீலகண்டன்....

அனைவரையும் அறவோர் ஆக்குவோம்!

திருவேடகம், விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரான பேரா. இளங்கோ ராமானுஜம், சுவாமி சித்பவானந்தரின் வழியில் ஆன்மிக சிந்தனைகளைப் பரப்பி வருபவர். அன்னாரது பொருள் பொதிந்த கட்டுரை இது…

தன்னம்பிக்கை தரும் வேதாந்தம்

மதுரையைச் சார்ந்த பேராசிரியர் திரு. இளங்கோ ராமானுஜம், திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவேகானந்தரின் சிந்தனைகளை இளைஞர்களிடத்தில் கொண்டுசெல்வதை தனது கடமையாகக் கொண்டவர். அகில பாரத சிக்‌ஷண மண்டலி அமைப்பின் தமிழகத் தலைவர். இவரது இனிய கட்டுரை இங்கே…

குருவும் ஆசிரியரும்…

காஞ்சிப் பெரியவர் என்றும் பரமாச்சாரியார் என்றும் அழைக்கப்படும் பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், நமது காலத்தில் வாழ்ந்த மாபெரும் ஞானி. அவரை பிராமணர் சமூகத் தலைவராக மட்டுமே குறுக்கும் போக்கு தேவையற்றது. அவரது அருளுரைகளின் தொகுப்பான ‘தெய்வத்தின் குரல்’ பல்துறை ஞானக் களஞ்சியம். அதிலிருந்து ஒரு பகுதி இங்கே…

வசந்தத்தை வரவேற்கும் புத்தாண்டு!

பூக்கள் பூக்கத் தொடங்கும் இளவேனில் காலத்தைத்தான் வசந்தகாலம் என்று  நம் முன்னோர்கள் வரவேற்றனர். இவ்வகையில்  வசந்த காலத் தொடக்கமாகிய சித்திரையில் புத்தாண்டும் மலர்கிறது. இந்தச் சித்திரைப் புத்தாண்டு, தமிழர்களுக்கு மாத்திரம் உரியது அல்ல, நாட்டின் பெரும்பாலான பகுதியினருக்கும் சித்திரை முதல் நாளே புத்தாண்டு. ...

புத்தாண்டு கணக்கீட்டில் வானியல் கண்ணோட்டம்

காலத்தை மாதங்களாகப் பிரித்த நமது முன்னோர், சூரியனுக்கு முதன்மை அளித்து, சூரியன் முதலில் கடந்துசெல்லும் மேஷ ராசியை முதல் மாதமாகக் கணக்கிட்டனர். அதுவே சித்திரை மாதமாக வழங்கப்படுகிறது.....

பார் போற்றும் பரிதிக் கடவுள்

தமிழர் திருநாள் என்று சிறப்பித்துப் போற்றப்படும் தைப் பொங்கல் விழா, அடிப்படையில் ஒரு தேசியத் திருநாள் ஆகும். மகர மாதம் என்று அழைக்கப்படும் இந்தத் தை மாதத்தின் முதல் நாளன்றுதான், சூரியனின் ஒளி மிகுந்த வடதிசைப் பயணமான உத்தராயண புண்யகாலம் தொடங்குகிறது. ஆகையால் தைப் பொங்கல், மகர சங்கராந்தி என்ற பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையாகவும் திகழ்கிறது. நமது ஹிந்து தர்மத்தின்படி, பண்பாட்டின்படி ஞாயிறு பிரத்யட்சக் கடவுளாக -  அதாவது கண்ணால் காணப்படும் கடவுளாகத் திகழ்கிறார். “ஞாயிறு போற்றுதும்” என்று சிலப்பதிகாரத்தில் போற்றப்பட்டுள்ள அந்த சூரியக் கடவுள், காயத்ரி ஜபத்தின் மூலம் துதிக்கப்படும் அந்தக் கதிரவத் தெய்வம், எவ்விதம் உலகமெல்லாம் வணங்கப்படும் தெய்வமாக விளங்குகிறார் என்பதை, தைப் பொங்கல் திருநாளை ஒட்டி விளக்கும் விதமாக,  மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன் இந்தக் கட்டுரையை வழங்கி உள்ளார்.

மொக்கச்சாமியை உங்களுக்குத் தெரியுமா?

‘மாயி’ என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சி. நடிகர் சரத்குமாரும் வடிவேலுவும் திருமணத்திற்காக பெண் பார்க்கப் போவார்கள். பெண்ணின் தந்தை மணப்பெண்ணை அழைக்க, அந்தப் பெண் மின்னல் போல சடக்கென்று இந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கம் போய் விடுவாள். அப்போது வடிவேலுவின் ரியேக்‌ஷன் பட்டையைக் கிளப்பும்..... யார் இந்த மொக்கச்சாமி?

சனாதனத்தில் சமத்துவம்

தற்காலத்தில் பொருளறியாமல் அரசியல் வியாதிகளால் அதிக அளவில் புண்படுத்தப்படும் சொல் ‘சனாதனம்’. அதிலும், அதிலும், திராவிட அரசியல் (திராவிடம் என்பதும், அதுவும் பொருளறியாத - அநர்த்தக் கும்பலிடம் சிக்கித் தவிக்கிறது) பேசுவோர் சனாதனத்தை அழிப்பதாகவே முழங்குகின்றனர். இதனால், பலர் குழப்பமடைகின்றனர். அவர்களைத் தெளிவுபடுத்துகிறது திரு. பத்மன் எழுதியுள்ள இக்கட்டுரை....