முழுமுதற்கடவுளாக நம்மால் வணங்கப்படும் விநாயகமூர்த்தி, தேசத்தின் பண்பாட்டு வேராக நம்மை ஒருங்கிணைத்து வருகிறார். காலங்கள் கடந்த, நில எல்லைகள் கடந்த கடவுளான இந்த கணேசரை, விநாயக சதுர்த்தி நன்னாளில், சிற்ப ஒளிப்பதிவுகள் மூலமாக நம்மை தரிசிக்கச் செய்திருக்கிறார், சிற்ப புகைப்படக் கலைஞரான பொள்ளாச்சியைச் சார்ந்த திரு. மது.ஜெகதீஷ்...
Tag: சமயம்
பஞ்ச புராணம் ஓதும் மரபு
தமிழகத்தில் ஓதுவார்கள் இல்லாத திருக்கோயில்களில் முறைப்படி அவர்களை நிரந்தரமாக நியமனம் செய்து தமிழ் வளர்க்கப்பட வேண்டும். அவர்களுடைய பணியை அறிந்துணர்ந்து போற்றிச் செய்ய வேண்டும்; திருக்கோயிலில் உள்ள ஆன்மிக புத்தக நிலையங்களில் விற்பனையாளர்கள் வேலைகளைச் செய்யவும், அர்ச்சனை டிக்கட் கிழித்துக் கொடுக்கவும் ஓதுவார்களை கட்டாயப்படுத்தக் கூடாது, நிர்பந்தப்படுத்தக் கூடாது. இவற்றை அறநிலையத் துறையினருக்கு வலியுறுத்தி, அவர்கள் இறைவன் திருச்சன்னிதி முன் விண்ணப்பிக்கும் திருமுறைகள் அதீத மகத்துவம் மிகுந்தது என்பதை கோடிட்டுக் காட்ட எழுந்ததே இக்கட்டுரை...
முருகா எனும் நாமம்!
மறைந்த பூஜ்யஸ்ரீ திருமுருக கிருபானந்த வாரியார், தமிழகத்தில் நாத்திகப் பிரசாரம் உச்சத்திலிருந்த தருணத்தில் அதை வென்ற ஆன்மிகப் பேரருளாளர். அவரது இக்கட்டுரை இங்கு காலப்பொருத்தம் கருதி வெளியாகிறது.
திருப்பதி திருமலை பெருமாள் கோயிலே!
சைவர்கள்- வைணவர்களிடையே பூசலை நிகழ்த்த விரும்பிய சிலரால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளுள் ஒன்று, திருப்பதி கோயில் முற்காலத்தில் முருகன் கோயிலாக இருந்தது என்பதாகும். இன்று சைவமும் வைணவமும் ஹிந்து என்ற பெருமதத்தின் கிளைகளாகிவிட்ட காலத்திலும், அவ்வப்போது இந்தப் பூசல் பெரிதுபடுத்தப்படுகிறது. இதற்கு, தெரிந்தோ தெரியாமலோ சைவர்கள் சிலரும் உணர்ச்சிவசப்பட்டு ஆதரவளித்து விடுகின்றனர். அவர்களுக்காகவே, நமது தொன்மையான தமிழ் இலக்கியங்களின் துணைகொண்டு, இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார் ‘சர்வம் கிருஷ்ணார்ப்பணம்’ என்ற பெயரில் எழுதிவரும் திரு. பி.பிரகாஷ். ‘ரத்தத்தில் முளைத்த என் தேசம்’ என்ற நூலின்மூலம் தமிழக மக்களின் கவனம் ஈர்த்த இவரது முகநூல் பதிவு, இங்கு மீள்பதிவாகிறது…
மேற்கத்திய விஞ்ஞானிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வேதங்கள்
இன்று குவாண்டம் இயற்பியலில் நாம் காணுபவை புதியவை அல்ல. சில விஷயங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை; அடிப்படை தத்துவ தரிசனங்களில் இருந்து முளைத்து வந்தவை. சிந்தனைக்கு/ நினைவுகளுக்கு நிறை உண்டு, பிரபஞ்சம் நிலையானது, பிரபஞ்ச அறிவும் விழிப்புணர்வும் இல்லாமல் உயிர்கள் தோன்றாது என்பனவெல்லாம் பாரதத்தில் அல்லது புராதன இந்தியாவில் தோன்றிய கருத்துகள்.
வடகலை – தென்கலை: வேறுபாடு என்ன?
வழக்கமாக உள்ளது. இந்த மோதலின் பின்னணி என்ன என்று விளக்கும் வகையில்,கோரா தளத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரை, நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது…
முழுமுதலோன்
ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது முன்னுதாரணம். தொண்டர்களை பலி கொடுத்து சுகம் அனுபவிப்பவன் அல்ல, உண்மைத் தலைவன். தொண்டர்களின் துயருக்காகத் தன்னை ஒப்புக்கொடுக்க முன்வருபவனே தலைவன். அந்த வகையில் சிவனே சிறந்த தலைவன். அதனால்தான் அவரை மூவர் முதல்வன் என்று போற்றுகிறார்கள்.
இருக்கு ஆனா இல்லை
நாம் ஆன்மா, அதனைப் போர்த்தியிருக்கும் ஆடைதான் உடல் என்பதை உணர்வதுதான் ஞானம். இந்த ஆன்மா ‘ஏக இறைவனின் பிரதிபிம்பம்’ என்பதை அறிந்துகொள்வதுதான் பரிபூரண ஞானம்.
தியானங்களும் மந்திரங்களும் (விடுதலைக்கு வழி)
நான் கடவுள், ஆதலால் சாக மாட்டேன். தெய்வம் என்னுள் எப்போதும் வந்து பொழிந்து கொண்டிருக்கும்படி என்னைத் திறந்து வைத்திருக்கிறேன். அதாவது, நான் என்னுள் விழும்படி எப்போதும் திறந்து நிற்கிறேன். என்னுள்ளே கடவுள் நிரம்பியிருக்கிறான். அதாவது, என்னுள் யான் நிரம்பிக் கிடக்கிறேன். என் நாடிகளில் அமிர்தம் ததும்பிப் பாய்கிறது. அதனால் என் இரத்தம் வேகமும் தூய்மையும் உடையதாய் இருக்கிறது. அதனால் என்னுள்ளே வீர்யம் பொங்கிக் கொண்டிருக்கிறது.
நெல்லிக்காய்க் கதை
ஏழைகளாக நம்மைச் சூழ்ந்திருப்போர் சிவனுடைய கணங்கள், நாராயணனுடைய மக்கள், முருகனுக்குத் தோழர், சக்தியின் அவதார ரூபம். பரமசிவன் சண்டாள ரூபத்துடன் சங்கராசார்யாருக்கு ஸமத்துவ ஞானத்தை ஊட்டினார். ஸ்ரீரங்கத்தில் எம்பெருமான் கடைக் குலத்தவராகிய திருப்பாணாழ்வாரை பரிசாரக வேதியன் முதுகிலே சுமந்து கொண்டு வந்து தனது கர்வ நோயைத் தீர்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டருளினார்.
இன்று (ஒரு ரிஷி குமாரன் எழுதியது)
மகாகவி பாரதி ‘கலைகள்’ எனும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையைக் கீழே கொடுத்திருக்கிறோம். நாம் பல யாகசாலைகளுக்குச் சென்றிருக்கிறோம். அங்கு நடக்கும் யாகங்களைக் கண்டிருக்கின்றோம். அங்கு தீயில் ஆஹூதியிட்டு மந்திரங்கள் சொல்லி, பூர்ணாஹூதி செய்து தீபாராதனை முடியும் வரை இருந்து கண்டு மனம் மகிழ்ந்து வருகின்றோம். இங்கு பாரதி ஒரு யாகத்தைச் செய்கிறார். கண்களை மூடி அவர் இங்கு செய்யும் யாகமொன்றை மனக்கண்ணால் காண்கிறீர்கள். யாக குண்டம் வைத்து, அதில் அக்னியை மூட்டி, கணபதியை வணங்கிப் பின்னர் பஞ்ச பூதங்களை வேண்டி, அந்தத் தீயில் தேன் முதலான பண்டங்களை இட்டு மந்திரங்களைச் சொல்லி நடைபெறும் அந்த யாகத்தில் என்ன வேண்டப்படுகிறது. அந்த மந்திரங்களின் பொருள் என்ன? சிந்தனையை ஓட்டுங்கள். பாரதியின் வாசகங்கள் மட்டும் காதில் விழுந்து கொண்டிருக்கட்டும். யாகத்தின் வேண்டுதல் என்ன? நமக்குப் புரியும் பைந்தமிழில்தான் அவனது வேண்டுதல்கள் இருக்கின்றன. அவற்றைப் படியுங்கள். இது குறித்து ஓர் அரிய செய்தி. பாரதி, மகான் அரவிந்தரிடம் ‘ரிக் வேதத்தில்’ பல ஸ்லோகங்களுக்கு விளக்கம் கேட்டுக்கொண்டவர் என்றும், ‘ரிக் வேதம்’ பழமையான வேதம் மட்டுமல்லாமல், இயற்கையை வணங்கும் பல ஸ்லோகங்களைக் கொண்டது என்றும் பெரியோர் சொல்வார்கள். ஆனால் கீழ்வரும் வசனங்கள் அந்த ரிக் வேத மந்திரங்களின் கருப்பொருளா என்பது நமக்குத் தெரியவில்லை. - இது பாரதி இலக்கிய பயிலரங்கின் நிறுவனர் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்களின் முன்னுரை....
ஆசாரச் சீர்திருத்தம்
“வேண்டியவர்கள் எல்லாம் பூணூல் போட்டுக் கொள்ளலாம். அது யாகத்துக்கு வெளியடையாளமாக அந்தக் காலத்தில் ஏற்பட்டது. இஷ்டமான ஹிந்துக்கள் எல்லாரும் பூணூல் போட்டுக் கொள்ளலாம். மற்றவர்கள் சரிசமானமாக இருக்கலாம். பூணூல் இருந்தாலும் ஒன்றுபோலே, இல்லா விட்டாலும் ஒன்றுபோலே, ஹிந்துக்களெல்லாம் ஒரே குடும்பம். அன்பு காப்பாற்றும். அன்பே தாரகம்” என்றேன். “அன்பே சிவம்” என்று பிரமராயர் சொன்னார்.
ஹிந்துக்களின் கூட்டம்
ஹிந்துக்களுடைய ஜனத்தொகை நாளுக்கு நாள் குறைவுபட்டு வருகிறது. கவிதையிலுள்ள மலைப்பாம்பு போல, வாலில் நெருப்புப் பிடித்தெரியும் போது தூங்கும் வழக்கம் இனி ஹிந்துக்களுக்கு வேண்டாம். விழியுங்கள்; ஜனத் தொகை குறையும் போது பார்த்துக்கொண்டே சும்மா இருப்போர் விழித்திருக்கும் போதே தூங்குகிறார்கள்; அவர்கள் கண்ணிருந்தும் குருடர்.
மதிப்பு
இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலே செய்துவிட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப்பட்டால், அவன் ராஜாங்கம் முதலிய ஸகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை. எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலைநிறுத்தும் தர்மம் சிறந்ததென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்துவிட வேண்டும்.
‘கங்கா ஸ்நானம் ஆயிற்றா?’
ஒவ்வொரு ஹிந்துவும் ராமேஸ்வரத்தில், சேதுமாதவர் என்று சொல்லப்படுகிற பெருமாள் முன்பு தனுஷ்கோடி, ராமேஸ்வரம் மணலை எடுத்து பூஜித்து, யாத்திரை செய்து, அலஹாபாத்தில் சுத்த கங்கையில் வேணி மாதவன் சந்நிதியில் பூஜித்து, உடன் எடுத்து வந்த மணலை சுத்த கங்கையில் விட்டுவிட வேண்டும். அங்கிருந்து சுத்த கங்கையை எடுத்து ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து பூஜிக்க வேண்டும். (காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தீபாவளி ஆசியுரை...)