பாரதியின் ‘கனவு’

மகாகவி பாரதி புதுச்சேரியில் வாழ்ந்தபோது, தனது சுயசரிதையை எழுத முற்பட்டார். அப்போது அவர் எழுதியதே ‘கனவு’ என்னும் இக்கவிதை. இது அவரது சுயசரிதை தொகுப்பில் முதற்பகுதி. பாரதி –அறுபத்தாறு என்னும் இரண்டாம் பகுதியும் உண்டு. ‘கனவு’ கவிதை, முன்னுரை, முடிவுரை தவிர்த்து ஐந்து பகுதிகளைக் கொண்டது. தோல்வியில் முடிந்த பிள்ளைக் காதல், பயனில்லாத ஆங்கிலக் கல்வி, விருப்பத்துக்கு மாறான இளமைத் திருமணம், தந்தையின் வறுமை நிலை, பொருளின் பெருமை ஆகிய 5 பகுதிகள் கொண்டது இந்த நெடுங்கவிதை. இதில் 49 செய்யுள்கள் உள்ளன.