பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை, சென்ற நூற்றாண்டில் தமிழ் வளர்த்த பெருந்தகை; துலாக்கோல் நிலை நின்று, விருப்பச் சார்பின்றி, தமிழ் இலக்கியங்களின் காலம் குறித்த முறையான ஆய்வுகளை வெளியிட்டவர்; தமிழ் இலக்கிய வரலாற்றாய்விலும், பதிப்புப் பணியிலும் முன்னோடி. இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ்ப் பேரகராதியை உருவாக்கிய மேதை, கல்வியாளர் எனப் பன்முகம் கொண்ட, தமிழன்னையின் தவப்புதல்வர்களுள் ஒருவர். அவரது ‘இலக்கிய தீபம்’ என்ற அற்புதமான ஆய்வு நூல் இங்கு தொடர்ச்சியான அத்தியாயங்களாக வெளியாகிறது...