புதுவையில் பூத்த யோக மலர்- 8

ஆச்சாரவாதிகள் எழுப்பியுள்ள புகை மூட்டத்தில் வேத உண்மைகள் மறைந்து விட்டன. புத்திசாலிகள் அந்த புகை மூட்டத்தில் உண்மையைத் தேடி மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தி உள்ளனர். யோக சாதனைகள் மூலம் அரவிந்தர் அந்த வேதக் கருத்துக்களைக் கண்டெடுத்து, புதிய கண்ணோட்டத்தில் - உண்மையில் அதுதான் சரியான கண்ணோட்டம் - வெளிப்படுத்த முனைந்தார்.