தற்போது, கடந்த பத்தாண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி செய்கிறது. இந்த ஆட்சியை சீர்தூக்கிப் பார்த்து மீண்டும் ஆட்சி தொடர வாக்களிப்பதா, அல்லது, மாற்று ஆட்சியை எதிர்க்கட்சிகளாகச் செயல்படும் இண்டியா கூட்டணியிடம் ஒப்படைப்பதா என்ற கேள்வி இப்போது நம் முன் இருக்கிறது.