அன்றாட வாழ்வில் நமக்கு வழிகாட்டக் கூடிய, துணை நிற்கக்கூடிய வகையில், சின்ன சின்னதாக சுவாமிஜியின் 1004 உபதேச மொழிகளைத் தேர்ந்தெடுத்து, தொகுத்து வெளியிட்டுள்ளார் சுப்பிரமணிய சிவா. நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1922இல் இந்த நூலைப் பிரசுரித்தவர் சை.ந.பாலசுந்தரம் என்பவர். ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புஸ்தகசாலை, பார்க் டவுன், சென்னையில் அச்சிடப்பட்டு வெளியாகி உள்ளது.