மேலாண்மைத் துறையில் பல நூல்களை எழுதியுள்ள பேரா. பா.மஹாதேவன், இந்திய கலாச்சாரம், சநாதன தர்மம், பகவத் கீதை போன்றவை குறித்து ஆராய்ச்சி செய்து, குறிப்பிடத்தக்க நூல்களை எழுதி இருக்கிறார். சநாதனம் குறித்த இவரது அறிமுக நூல், படிப்படியாக, சநாதனத்தின் அம்சங்களையும் சிறப்புகளையும் விளக்குவதுடன், அது குறித்த விமர்சனங்களுக்குத் தெளிவான பதில்களையும் அளிக்கிறது.